Tuesday, January 20, 2009

கார்ட்டூன் சானல்கள் லிஸ்ட் ...(விவாத மேடை)

எவ்ளோ தேடியும் எனக்கு கிடைத்த கார்ட்டூன் டி.வி. சானல் லிஸ்ட் இவ்ளோ தான் ...

  1. சுட்டி டி.வி
  2. போகோ சானல்
  3. டூன் டிஸ்னி
  4. ஜெட்டிக்ஸ்

சரி இப்போ இந்த லிஸ்ட்ல உள்ள சானல்களில் முதலில் அதிக குழந்தைகளின் விருப்ப சானலான சுட்டி மற்றும் போகோ பற்றி பார்க்கலாம்.ஜெட்டிக்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம்...அது வன்முறையைத் தூண்டுவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு நெடு நாட்கள் ஆகின்றன.

சுட்டி டி.வி நிகழ்ச்சி பட்டியல்:-

  1. அபி அண்ட் எபி
  2. பாபி
  3. டோரா தி எக்ஸ்ப்ளோரர்
  4. அறிவோம் ஆயிரம்
  5. குளோரியாவின் வீடு
  6. சூப்பர் சுஜ்ஜி
  7. கடல் இளவரசிகள்
  8. மைக்கேல் தாத்தா
  9. ஹானாஸ் ஹெல்ப் லைன்
  10. சிரிப்பு கோழிகள்(பெயர் சரியானு தெரியலை...பாப்பூ சொன்னதை வச்சு டைப் பண்றேன்!)
  11. செட்ரிக்
  12. உலக சிறுகதைகள்
  13. காட்சிலா
  14. ஜாக்கி ஷான்
  15. ஹீமேன்
  16. சியாமா அக்காவும் சின்ன சின்ன கிராப்ட்சும்
  17. லிட்டில் ஷோபீ

இப்போதைக்கு இந்த தொடர்கள் மற்றும் இந்த ஒரு சானல் பத்தி விவாதம் நடக்கட்டும்.மீதியை இதற்குப் பிறகு தொடரலாம்.இந்தப் பட்டியலில் இருக்கும் தொடர்கள் எல்லாம் "சுட்டிகளுக்கு " தேவையான விசயங்களை மட்டுமே தான் கற்பிக்கின்றனவா? இந்தத் தொடர்களில்

  1. எது அருமையானது?
  2. எது சுமாரானது?
  3. எது தேவை இல்லாதது?
  4. எது நீக்கத் தகுந்த தொடர்?
  5. எது கண்டிக்கத் தகுந்தது?
  6. எது நம் குழந்தைகள் பார்க்கத் தகுந்தது?
  7. உங்கள் ஓட்டு எந்த நிகழ்ச்சிக்கு ?(தமிழ்மணத்துல ஓட்டு...ஓட்டு ன்னு எல்லாரும் கேட்கராங்களா அந்தப் பாதிப்பு தான்...ஹி...ஹி ..ஹி )

சரி இப்போ விவாதத்தை ஆரம்பிங்கப்பா !!!

கார்ட்டூன் சேனல்கள் செய்வது சரியா தவறா?(விவாத மேடை)

என்னுடைய குவிஸ் பதிவுல பதில்களை சொன்ன எல்லோருக்கும் நன்றி...வழக்கமா வந்து கருத்து சொல்ற சிலரை இன்னும் காணோமே???இன்னும் த்ரீ டேஸ் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்.யாருக்கு ராமாயணம்...மகாபாரதம் மேல நிறைய ஆர்வம் இருக்குன்னு. !!!

துளசி டீச்சரை காணோமே அவங்க எல்லாக் கேள்விக்கும் சூப்பரா பதில் சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன்.அதுசரியையும் காணோம்.சுரேஷ் குவிஸ் பதிவைப் பாக்கலையா இன்னும்?சந்தனமுல்லை உங்களையும் காணோமே!!!அபிஅப்பா சொன்னாரே நான் புள்ளி வச்சிருக்கேன் கோலம் போட நிறைய பேர் வருவாங்கன்னு ...அவருக்கு புள்ளி மட்டும் தான் வைக்கத் தெரியுமாம்...கோலம் போட இது வரைக்கும் வந்தவுங்களுக்கெல்லாம் மிக்க நன்றி...

முக்கியமா டோண்டு அய்யா...முரளிகண்ணன்...குடுகுடுப்பை(பிரம்படி இருக்கு இதிகாசத்துல்ல முட்டை...முட்டையாவா...வாங்குவாங்க!?) அமுதா(கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுத்து யோசிக்கங்கபா ...குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது தப்பு தப்பா பெயர்களை மாத்தி சொல்லிடப் போறீங்க!?)முரளிகண்ணன்...மீதி கேள்விக்கு எப்போ வந்து பதில் சொல்லப் போறீங்க?ஜமால் நீங்க நல்லா ஆன்சர் பண்ணுவீங்கன்னு நினைச்சிட்டிருந்தேன் நான்!!!நீங்களும் முட்டை மார்க் தானா?

முக்கியக் குறிப்பு:

பாப்புவோட டான்ஸ் டீச்சர் ராமாயணம்...பாரதக் கதைகளை பத்தி கேள்வி கேட்டு அங்க இருந்த எல்லா பெற்றோர்களையும் நேத்து செம ட்ரில் வாங்கிட்டாங்க.யாருக்குமே நிறைய கேள்விகளுக்கு சரியான பதில் தெரியலை.அம்மா...அப்பாக்களுக்கே தெரியலைனா குழந்தைகள் பாவம் என்ன செய்வாங்களாம்?அவங்களுக்குப் பாவம் டோராவும்...புஜ்ஜியும் தான் தெரியுது.கார்டூன் சேனல்கள் செய்வது சரியா...தவறான்னு கூட ஒரு பதிவு போடலாம் போல இருக்கே?அந்த ரேஞ்ச்ல போயிட்டு இருக்கு நம்ம பாரம்பர்ய மறக்கடிப்பு.

பேசமா இதை ஒரு விவாத பொருளா எடுத்துகிட்டு நாமலே ஒரு பதிவு போட்ட என்னான்னு யோசிச்சதுல தான் இந்த பதிவு வந்தது. சரி இப்போ நம்ம கார்டூன் சேனல்களைப் பற்றி யார் யாருக்கு எண்ணலாம் தோணுதோ அதை வந்து தெரிவிக்கலாம் இங்கே..அதற்க்கு பதில் சொல்றவங்களும் சொல்லலாம்..எதிர்ப்பு தெரிவிக்கரவங்களும் சொல்லலாம் .

க்விஸ் ...ஸ்ஸ்...ஸ்!!!

ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!

சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.

  1. ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
  2. அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
  3. இந்திரனின் தாயார் பெயர் என்ன?
  4. விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
  5. சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
  6. மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
  7. பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
  8. பிருகன்னளை யார்?
  9. கைகேயியின் பணிப்பெண் யார்?
  10. பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
  11. மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
  12. கிருபாச்சாரியார் யார்?
  13. சல்லியன் என்ன செய்தான்?
  14. சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
  15. ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?

அவ்ளோ தான் கேள்விகள்.

பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.