Saturday, November 29, 2008

சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் பிஞ்சில் பழுத்த சக்கரைக்கட்டிகளா? ?

"சக்கரைக்கட்டி" என்றொரு படம்...!!!முருங்கைக்காய் பாக்கியராஜ் என்று ஒதுக்கி விடமுடியாத அற்புதமான திரைகதையாளரின்... மகன் சாந்தனு தான் ஹீரோ .

எந்நாளும் ஞாபாகத்தில் நீடிக்கும் "தாவணிக் கனவுகள்" படத்தில் ஹீரோ பாக்கியராஜ் ஐந்து பைசா நாணயத்தை தியேட்டர் தரையில் வீசி விட்டு தன் வயது வந்த தங்கைகள் படத்தில் காட்டப் படும் விதி மீறிய ஆபாசக் காட்சிகளைக் காண்பதை தடுப்பது போல ஒரு சீன் வருமே!!!அதே பாக்கியராஜ் மகன் தான் ...!!!

இப்போது கூட தன் மகளை வைத்து "பாரிஜாதம்" என்று ஒரு நல்ல படம் கொடுத்தார்.படம் சரியாக ஓடாவிட்டாலும் படம் நல்ல படமே குடும்பத்தோடு பார்க்கலாம் வகை,அவரது மகன் ஹீரோவாக நடித்த முதல் படம் சக்கரைக்கட்டி .

அதில் ஒரு சீன்!!!பத்து ...பன்னிரண்டு வயதில் உள்ள சிறுவர்கள் ஆறு ...ஏழு பேர் (அத்தனையும் சுட்டி டி.வி வர்ணனையாளர்கள் வேறு!!!அந்தச் சிறுவர்கள் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து தேடித் தேடி புத்தகம் வாங்குகிறார்கள் ...என்ன புத்தகம்தெரியுமா?

"காமசாஸ்த்திரம்"சாட்சாத் வாத்ஸ்யாயனர் எழுதிய அதே புத்தகம் தான்!வெறும் பத்தே வயது நிறைந்த அந்தப் பையன்கள் அந்தப் புத்தகத்தை வாங்குவதோடு அல்லாமல் ஒரு பூங்காவில் உட்கார்ந்து அதைப் படிக்க வேறு செய்வதைப் போல படத்தில் காட்சி வைத்திருக்கிறார்கள் .

இதைக் கண்ட நொடியில் எனக்கு மிக அதிர்ச்சியாகி விட்டது .மீடியா வளராத எண்பதுகளைப் போல அல்ல இன்றைய சிறுவர்...சிறுமிகளுக்கு அன்றைய சிறுவர்...சிறுமிகளை விடவும் விவரமும் தெளிவும் அதிகம் தான் ;அதற்காக இப்படியா காட்சி வைப்பது?

பள்ளிகளில் பாலியல் கல்வியை ஒரு பாடமாக வைப்பதா ....வேண்டாமா என்பதே இன்னும் குழப்பமாக இருக்கும் பட்ச்சத்தில் இப்படி ஒரு சீன் தேவை இல்லை என்பதே எனது கருத்து.

அதிலும் கடையில் விற்பனையாளராக வரும் கிரேசி மோகன் அந்தப் பையன்களுக்கு அறிவுரை சொல்லத் தக்க ஒரு சிறந்த ஹாஸ்ய எழுத்தாளர் வேறு ?அவருமா இப்படி ஒரு சீனில் நடிக்க ஒத்துக் கொள்ள வேண்டும்?

அப்புறம் அந்தப் பையன்களில் பெரும்பாலோர் சுட்டி டி.வி காம்பியர்கள் வேறு!!!

என்னத்தைச் சொல்ல?

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லியே ஆக வேண்டும்...சுட்டி டி.வி நிகழ்ச்சிகளில் சில ஆகா ரகம் !!!...சில பரவாயில்லை ரகம்..சில பார்க்கலாம் ரகம் ...சில இது தேவையா இப்போது ரகம்? ...

ஆகா ரகம் !!!:-

"டோரா தி எக்ஸ்ப்ளோரர் "(சின்னஞ்சிறு இதயங்களின் தேடலை ஊக்குவிக்கும் தொடர்)

"குளோரியாவின் வீடு "(சிறுவர்களோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அருமையான நட்பின் அவஷியத்தை உணர்த்தும் தொடர் இது )

"அபி அண்ட் எபி"(காட்டு விலங்குகளை...பறவைகளை...பூச்சிகளை அறிமுகப் படுத்தும் இன்னொரு உலகம் இது )

"பாபியின் உலகம் "(இதில் அந்தச் சிறுவனின் விரியும் கற்பனை உலகம் கொஞ்சம் சுவாரஷ்யமானதே)

சில பரவாயில்லை ரகம்:-

"அறிவோம் "ஆயிரம்(சில அறிவியல் ரீதியான விளக்கங்களை தினசரி வாழ்வை ஒட்டி விளக்கும் ஜப்பானியத் தொடர்...இது கூட சில நேரங்களில் தேவையில்லாத கேள்விகளை(அதாவது இப்போதைக்குத் தேவை இல்லாத சில கேள்விகளை என் மகளைக் கேட்க வைக்கிறதோ? என்ற எண்ணம் எனக்கு உண்டு...மற்றபடி பார்க்கலாம் வகை தான் பாதகம் இல்லை)அப்புறம்

"உலகச் சிறுகதைகள்"(பல்வேறு தேசத்து சிறுகதைகள் தொகுக்கப் பட்டு ஒவ்வொன்றாகக் காட்டப் படுகின்றன).

"ஜாக்கி" (ஜாக்கி சானை விரும்பும் குழந்தைகள் இதைப் பார்க்கலாம்...சுமார் ராகம் ...இறுதியில் ஜாக்கி குழந்தைகளுக்க்ச் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் நலம்...அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம்)

இவையெல்லாம் ஓகேஇவை தவிர ;

இது தேவையா இப்போது ரகம்?:-

"செட்ரிக்""ஹீமான்"

"மென் இன் ப்ளாக் "

"கடல் இளவரசிகள்"

இதெல்லாம் அத்தனை அவஷியமானது இல்லையோ ? என்ற எண்ணம் வருகிறது.எனென்றால் ஏனைய இந்தத் தொடர்களில் எல்லாம் குழந்தைகள் கற்றுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை .இந்த நிகழிகளைத் தொகுத்து வழங்க மாற்ற டி.விக்களைப் போன்றே இதற்கும் வர்ணனையாளர்கள் உண்டு ...அவர்களில் சிலர் தான் மேலே சொன்ன படத்தில் அந்தக் காட்சியில் நடித்தவர்கள்.

பாவம் அந்தச் சிறுவர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.அவர்களது பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை அவர்களுக்கு மட்டும் எப்படி வர முடியும்?இப்படிப் பட்ட ஒரு காட்ச்சியில் தங்களது மகன் அல்லது மகள் வரலாமா கூடாதா என்ற கவலையே இல்லாத அவர்களை என்னவென்று நொந்துகொள்வதோ புரியவில்லை?

அதிலும் சுட்டி டி.வியில் சில குழந்தைகள் வர்ணனை என்ற பெயரில் தேவை இல்லாத (வயது வந்த மாற்ற டி.வி வர்ணனையாளர்களைப் போன்றே அதிகப் படியான உடல் அசைவுகள் )அலட்டல்களைச் செய்யும் போது மிதமிஞ்சிய வருத்தமே எஞ்சி நிற்கிறது .எப்போது திருந்துவார்கள் இவர்கள்? ஸாரி...ஸாரி எப்போது திருத்தப் படுவார்கள்?

குழந்தைகளிடம் எப்போதுமே "போலச் செய்தல்' என்ற பழக்கம் உண்டு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை ஏன் இனி எதிர்காலத்திலும் கூட அது தொடரும்.அதாவது அவர்கள் எல்லா விஷயங்களையுமே பெரியவர்களிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள்...தாம் அறிந்த பெரியவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல அதன் தாக்கம் அவர்களைச் சார்ந்த அந்த சிறுவர்களிடமும் படிந்து விடுகிறது...இது கண்கூடான உண்மை.

இப்படி சுட்டி டி.வி குழந்தைகளைப் பார்த்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நம் வீட்டுக் குழந்தைகளும் மாறி விட்டால் என்ன செய்வது?ஆதலால் பெற்றோர்களே உங்கள் வீட்டில் குழந்தைகள் டி.வி தானே பார்க்கிறார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்!!! மிதமான கண்காணிப்பு எப்போதுமே எந்த வயதிலும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் அது எப்போதுமே நன்மை தரக் கூடும்.

Thursday, November 27, 2008

இங்லாந்து லெட்டர் எங்க போச்சு ?

சென்ற வருடம் இதே போன்றதோர் டிசம்பர் நெருக்கத்தில் தான் நல்ல மழை நாளில் இதை எழுதினேன் என்று ஞாபகம்...!

கரண்ட் வேறு இல்லை அப்போது...;டி.வி யும் பார்க்க முடியவில்லை ...கூடப் பேச என் தம்பியைத் தவிர யாரும் இல்லை.அவனும் நண்பன் அழைத்தான் என்று வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சரி என்னத்தையாவது கிறுக்குவோம் என்று எண்ணிக் கொண்டு தான் இதை ஆரம்பித்தேன்.போகும் போது என் நோட் புக்கில் எட்டிப் பார்த்த தம்பி சொன்னான் ;

கவிதை ...கதை நு எழுதறதை விட இப்படியும் ட்ரை பண்ணி பாரேன் , எங்க ஹெச் .ஆர் ஒரு தடவை எங்க கிட்ட இந்தியன் போஸ்டல் சர்வீஸ் விளம்பரத்துக்கு காப்பி ரைட்டிங் பண்ண சொல்லிக் கேட்டார் ...யாரோடது பெஸ்ட்னு பார்க்கலாம்னு ?நாங்க ட்ரை பண்ணலை அதுக்குள்ளே செமெஸ்டர் வந்துடுச்சு ...!!!

நீ சும்மா தான என்னத்தையோ எழுதிட்டு இருக்க ...இத வேணா ட்ரை பண்ணேன் என்றான்."சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை போல" உங்களுக்குத் தோணினால் நான் பொறுப்பில்லை.

1."DONT ROAR
WE
AT
YOUR DOOR" IPS (INDIAN POSTAL SERVICE)



2. "THINK
WITH
INK
PRESSING BUTTONS
IS NOT EQUAL TO
IMPRESSING THE MINDS
START TO
THINK
WITH
INK " IPS (INDIAN POSTAL SERVICE)


3."DONT TAKE RISK

WE ARE

AT YOUR DESK"
IPS (INDIAN POSTAL SERVICE)


4."CHOOSE INDIAN POSTAL SERVICE
CHAZE INDIAN POLICE SERVICE
WE
BEST
TO PASS YOUR DREAMS"

5. " IPS
IS THE PLACE OF YOUR ESSENCE OF FEELINGS
PROTECTED"

6. "BROWSING CENTRE
CYBER CAFE
DESK TOP
LAP TOP
MOBILE PHONE
CRUSH CRUSH CRUSH
EVERY WHERE CRUSH
JAM JAM JAM
EVERY WHERE JAM
COME TO SEE MY NAME
I AM VERY ... FAME
...IPS(INDIAN POSTAL SERVICE)"

Tuesday, November 25, 2008

தொடர்கிறது...ஷாக்...ஷாக்...ஷாக்...!?

முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் என்று முடித்தேன் இல்லையா அன்றைக்கு ...
சரி இனி மேலே தொடர்வோம்,
யாருக்குத்தான் புதிது புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை அல்ட்ரா மாடர்னாக வாங்கித் தள்ள வேண்டும் என்று ஆசை இல்லாது போகும்?எல்லாமே தானியங்கி என்று ஆகிவிட்டால் சொல்லவே வேண்டாம்...என்னை வாங்கு...வாங்கு என்று தினம் தினம் நொடிக்கு நொடி டி.வி யில் வந்து வேறு நம் உயிரை வாங்கித் தொலைக்கும் .அதை விட்டுத் தள்ளுங்கள் கையில் பணம் புரளும் போது அதையெல்லாம் வாங்கித் தானே தீருவோம் என்கிறீர்களோ...அதுவும் சரி தான் .
சரி வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு சில கொள்கைகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டால் நமக்கும் பாதுகாப்பு,நமது பர்சுக்கும் பாதுகாப்பு !
என்னென்ன கொள்கைகள் என்று பார்ப்போம் ;
  1. எந்தப் பொருளாக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இடப் பட்டதா என்று சோதித்து தரமானதாகவே வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்(கடைக்குள் நுழையும் முன்பு இருக்கும் உறுதி...பொருளின் வெளி அலங்காரத்தில் மயங்கி மாறி விட்டால் நீங்கள் கொள்கை தவறியவர்கள் என்று அறிவிக்கப்படுவீர்கள்).
  2. எந்தக் கடையிலும் பொருளை வாங்குவதற்கு முன்பு கடையின் நம்பகத் தன்மையையும் ஒரு முறைக்கு இருமுறை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. விழாக்காலங்களில் ஒன்றுக்குப் பத்தாக இலவசமாகத் தரப் படும் லோக்கல் அசெம்பிள்டு பொருட்களை வாங்கி ஏமாறக் கூடாது.
  4. வாரண்டி...கியாரண்டி கார்டுகளை கவனமாகப் பத்திரப் படுத்த வேண்டும் .
  5. வாங்கும் பொருட்களில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய சர்வீஸ் சென்டர் போன் நம்பர்கள்...அட்ரஸ் போன்றவற்றை மறக்காமல் கேட்டு வாங்கி பத்திரப் படுத்த வேண்டும்.
  6. எல்லாவற்றையும் விட முக்கியம்...கடைகளில் பொருட்களோடு வழங்கப் படும் மேனுவல் கைடுகளையும்,கியாரண்டி கார்டுகளில் "கன்டீசன்ஸ் அப்ளை" என்று போடி எழுத்தில் அச்சிடப் பட்டவற்றையும் கஷ்டப் பட்டாவது படித்துப் பார்த்து கடையிலிருந்து வீட்டுக்குப் பொருட்களை எடுத்து வரும் முன்பாகவே நமது சந்தேகங்களை விற்பனையாளர்களிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது மிக்க நல்லது.
  7. கட்டக் கடைசியாக "யானைக்கு அங்குசம் போல" விலை ரசீதுகளை (பில்...ரிசிப்ட்) பொக்கிஷம் போல பத்திரப் படுத்த மறக்க வேண்டாம் .(தரமான பொருட்களில் கூட காஸ்டிங்குக்கு ஆசைப் பட்டு குவாலிட்டி தேயும் படி கலப்படம் செய்யப் பட்டால் இது நமக்கு பயன்படும்)
  8. இதெல்லாம் செய்தால் (யு ஆர் டிரபிள் ப்ரீ சார் !) நீங்கள் தான் கிங்!யாரும் உங்களை ஏமாற்ற முடியாது .

இதுவரை சொல்லியாச்சு ...இனி எந்தப் பொருளை எப்படி எப்படி வாங்கனும்னு தெரிஞ்சா நல்ல இருக்குமே என்கிறீர்களா ?

(வெண்டைக்காய உடைச்சிப் பார்த்து வாங்கற மாதிரி உடைச்சா பார்க்க முடியும்?!) கவலையே வேண்டாம்...அதற்கும் பதில் உண்டு .

ஜஸ்ட் வெயிட் ....

ஒன்னு ஒண்ணா பாக்கலாமே...என்ன அவசரம் இப்போ ?

Friday, November 21, 2008

சிரி...சிரி...சிரி...சிரி(அட சும்மா சிரிங்க சார்)

சிரி...சிரி...சிரி...சிரி!!!சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் !!!
யாரு சொன்னா? அப்போ நாங்கலாம் யாராம்? எங்களுக்கும் சிரிப்பு வரும்ல ?நாங்களும் சிரிப்போம்ல?

ஏய் பூனைக்குட்டி அக்கா வாய மூடிட்டு சத்தம் போடமா சிரிக்கத் தெரியாதாக்கும்!இந்தா பாரு இங்கன ...ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...இப்பிடித்தான்....இப்பிடித்தான்...சிரி...சிரி...சிரி...சிரி... !!!
அடங்கொக்கா...மக்கா....இன்னாத்துக்கு வாய மூடிக்கனும்? நான் இப்பிடித்தான் சிரிப்பேன்...இன்னான்றீன்ங்க இப்போ?
சிரிக்கிறதுல என்னப்பா பாலிடிக்சு? என்னைய மாதிரி கூட சிரிச்சுட்டு போங்களேன்!
எந்நேரமும் தண்ணியிலேயே இருக்கான்டான்னு திட்ராகளே நாட்டுக்குள்ள? தண்ணில கிடக்கற சுகமே சுகம்...அதான் இந்தச் சிரிப்பு...சும்மா சிரிச்சுப் பழகலாம் வாங்கண்ணா...!!!
புலி புல்லைத்தான் திங்க கூடாதுன்னு சொன்னாங்க,சிரிக்கக் கூடாதுன்னு எல்லாம் யாரும் சொல்லலை!!! எங்கே என் முன்னாடி வந்து யாராச்சும் சிரிக்காதேன்னு சொல்லித்தான் பாருங்களேன் ...ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் !!!

அந்தப் புலிப்பய சிரிக்கான் பாரு ...நான் சிங்கம்யா...சிங்கம் சிரிக்காட்டிப் போனா வெங்கம் பயனு சொல்லிருவாக அது வேற அசிங்கம் !!! அதான் இந்தச்சிரிப்பு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
டிஸ்கி: இந்தப் புகைப் படத் தொகுப்புக்குச் சொந்தகாரி என் அருமை பாப்பு மட்டுமே!!! இதிலுள்ள உப்புச் சப்பில்லாத கமெண்டுகள் மட்டுமே எனக்குச் சொந்தம் .
எத்தனை நாட்களுக்குத் தான் சீரியஸ் பதிவுகள் மட்டுமே போட்டுக் கொண்டு இருப்பது ?
கொஞ்சம் போர் அடித்தால் இப்படித்தான் ஆகி விடுகிறது சமீப காலங்களாய்...!
பாப்பு வந்து இன்றைக்கு என் போட்டோ கலெக்சனை வைத்து ஒப்பேற்றி விட்டாயே அம்மா !!! என்று சொன்னாலும் பரவாயில்லை !
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்?
மனிதர்களின் சிரிப்பை விட விலங்குகளின் சிரிப்பு நன்றாகத்தான் இருக்கிறது .
அதென்னவோ முன்பு என் அப்பா...பிறகு என் கணவர் ...வேலையில் சேர்ந்த பிறகு இப்போது என் தம்பியும் கூட (வேலையில் சேருவதற்கு முன் அவன் பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் பாட்டு மட்டுமே கேட்பான்) இப்படி என் வீட்டு ஆண்கள் எல்லோருமே காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ...சிரிக்க வேண்டும் ...எப்பாடு பட்டாவது சிரித்தே ஆகவேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன்,என்றைக்கோ எந்திர மயமாகி விட்ட இந்த உலகில் மூச்சு விடவும்...முழுகிப் போகாமல் மீண்டு எழவும் அந்த நேரம் பயன்படுகிறதோ என்னவோ?உலகம் சுற்றும் வாலிபனில் "வாத்தியார்" பாடுவார் பாருங்கள்"சிரித்து வாழ வேண்டும்பிறர் சிரிக்க வாழ்ந்திடாதேசிக்கு...மங்கு...சிக்கு...மங்கு சிக்க பாப்பா "பாட்டு தான் ஞாபகம் வருகிறது .அதெல்லாம் சரி ;இப்போது டவுட் நேரம்..."பாப்பா சரி ...அதென்ன சிக்கு...மங்கு...சிக்கு...மங்கு ..சிக்க பாப்பா?"யாருக்காவது புரிந்திருந்தால் இங்கு வந்து பின்னூடத்தில் தெரிவியுங்கள்...அந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் இந்த டவுட் வந்து கொண்டே இருக்கிறது .














Thursday, November 20, 2008

ஷாக்...ஷாக்...ஷாக்...அடிச்சிருக்கா எப்போவாச்சும் உங்களுக்கு?




1.ஏற்காட்டில் புதுமணத் தம்பதிகள் வாட்டர் ஹீட்டர் ஷாக் மூலம் உயிரிழப்பு ,


2.கே.கே நகரில் டாக்டர் தம்பதிகள் வாட்டர் ஹீட்டரில் ஏற்ப்பட்ட மின்சாரக்கசிவு மூலம் உயிரிழப்பு ,


3.மழைக்காலத்தில் ஈரமான சுவற்றில் மின்சாரம் பாய்ந்து சுவர் அருகில் இரும்புக் கட்டிலில் படுத்திருந்தவர் மரணம்,


4.கையில் இரண்டுமாதக் குழந்தையை ஏந்திக்கொண்டு பேன் சுவிட்ச் போட்டதில் ஷாக் அடித்து குழந்தை தூக்கி எறியப்பட்டு மரணம் ,தந்தை குற்ற உணர்வில் துடிக்கிறார் .


5.மழைகாலத்தில் செல் போனில் பேசியவாறு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி மரணம்.


இதெல்லாம் பெரிய விபத்துகள் .இவை தவிர சின்ன அளவிலோ ,பெரிய அளவிலோ உடலுக்கும் மனதிற்கும் காயத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடிய சின்னச் சின்ன விபத்துக்களும் உண்டு தான் .ஒருமுறை ஏதாவதொரு மின்சாரப் பொருள் மூலம் ஷாக் அடித்து தூக்கி எறியப் பட்டாலோ காலத்துக்கும் அந்த பயங்கரமான அனுபவத்தை நம்மால் மறக்கவே முடியாது ,உயிரிழப்போடு குற்ற உணர்வு தான் மிஞ்சும் ,ஐயோ இப்படி நடந்து விட்டதே என்று மறுகிக் கொண்டிருப்பதை விட என்ன செய்யலாம் என்று யோசிப்பது நல்லது தானே !!!


பெண் தான் ஒரு குடும்பத்தின் அச்சாணி .அவளைச் சுற்றியே அந்தக் குடும்பச் சக்கரம் சுழல்கிறது ,அதோடு ஆண்களுடன் ஒப்பிடும் போது அதிக நேரம் வீட்டில் இருப்பதும் ,வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்துவதும் அவளே ...!


இதே போல இன்னொன்றையும் கூறலாம் ,சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்தால் கணவர்கள் தம் மனைவிகளின் விருப்ப்பத்துக்கே முதலிடம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்(!!!) குடும்பத்தலைவி என்பதற்காக மட்டும் அல்ல மனைவி சரியானதைத் தேர்ந்தெடுப்பாள் ,எதையும் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே செய்வாள் என்ற நல்ல நம்பிக்கையினாலும் தான் .அந்த நம்பிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்க வேண்டாமா நாம் ...?


அதனால் வாருங்கள் ஷ்நேகிதிகளே சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமாக ,முதலில் நீங்கள் ஒரு அடிப்படை விஷயத்தை கண்டிப்பாக தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ,


எல்லா விதமான மின்சார விபத்துகளும் "எர்த்திங்" சரியாகப் பண்ணப் படாததின் காரணமாகவே நிகழ்கின்றன என்பது ஒரு பொதுவான கருத்து .


எர்த்திங்னா இன்னாப்பா ? அதாவது ஒவ்வொரு வீட்டிலும் வீடு கட்டப்படும் போதே எலெக்ட்ரிகல் வேலைகளும் சேர்த்தே செய்யப்படுகின்றன. அப்படி மின் வேலைகள் செய்து முடித்தபின் அதை எர்த்துடன்(பூமி) பூமிக்கு அடியில் இத்தனை ஆழம் (ஆறு -எட்டு அடி ஆழம்)என்ற கணக்கில் கனெக்சன் செய்வதையே எர்த்திங் என்கிறார்கள் ,


இன்னும் விளக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு வீட்டிலும் சரி ,பெரிய இண்டஷ்டரிகளிலும் சரி எர்த்திங் நூறு சதவிகிதம் சரியாகப் பன்னப்பட்டே இருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் மின்சாரம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதன் புத்தியை நம்மிடம் காட்டத் துவங்கி விடும் (உசாரா இருந்துக்கோ கண்ணு )


அதெப்படி தெரிந்து கொள்வது என்கிறீர்களா ?(சிம்பில்மா ..ஒண்ணுமேயில்ல )பெரும்பாலும் வீட்டின் உட்பகுதிகளில் அடிக்கடி நடமாடும் தரைப் பகுதிகளில் எர்த்திங் செய்வது நல்லதல்ல என்பதால் மீட்டர் பாக்ஸ் அருகில் தான் எர்த்திங் பாயிண்டுகள் மண்ணுக்குள் புதைக்கப் படுகின்றன .அந்த இடங்களில் வயர் கனெக்சன் வெளியில் தெரியுமாறு தான் இருக்கும் .


அதில் பச்சை நிற வயர் தான் எர்த் வயர் சுருக்கமாக ஆங்கிலத்தில் இ என்ற சிம்பல் இருக்கும் ,இதை வைத்து எர்த்திங் செய்யப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம் .ஆனால் அது நூறு சதம் சரியாகத் தான் செய்யப் பட்டிருக்கிறதா என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் . இது அதை விடவும் ரொம்பவும் அவஷியம் .


தரமான ஐ எஸ் ஐ முத்திரை உள்ள வயர்களும் ,காயில்களும் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதும்


எர்த் திங் செய்ய கரெக்ட் சைஸ் வயர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கிறதா என்பதும் நாம் தெரிந்து கொள்வது நல்லது .


அதோடு அரசாங்க அங்கீகாரம் பெற்ற அனுபவம் வாய்ந்த தரமான எலக்ட்ரீசியன்களை நம்பி மட்டுமே நம் வீட்டின் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்படைக்க வேண்டும் .


அதோடு எர்த்திங் பண்ணப்படும் போது முறையான பாதுகாப்புடன்


அ) எர்த் லீக்கேஜ் ப்ரொடெக்சன் பிரேக்கர்ஸ்


ஆ)சர்க்யுட் பிரேக்கர்ஸ் போன்றவை பூமிக்கு அடியில் கனெக்சன் செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் நல்லதே.


இ)கடைசியாக எர்த்திங் விசயத்தில் மழைக்காலம் தவிர்த்து கோடை காலம் உட்பட மற்ற எல்லாக் காலங்களிலும் மாதம் ஒருமுறை எர்த்திங் செய்யப் பட்டுள்ள இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும் ,


மேலும் வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்த எலக்ட்ரீசியன் வைத்து செக் செய்து கொள்வதும் அவசியமானதே.


அதோடு பத்து வருடங்களுக்கு ஒருமுறை மின்சார இணைப்புகள் சரியாக இருக்கிறதா என சோதித்துப் பார்த்துக் கொள்வதும் நமது பாதுகாப்புக்கு நல்லதே,


ஒ.கே எர்த்திங் சரியாக இருந்தால் பொருட்களில் மின்கசிவு ஏற்ப்பட வாய்ப்பே இல்லை அதுவரைக்கும் சரி தான் .ஆனால் (voltage) வோல்டஜ் பிரச்சினை வருகிறது என்கிறீர்களா?அதற்கும் தீர்வு இருக்கிறது .


"மினியேச்சர் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ரெசிடியுயல் கரண்ட் சர்க்யுட் பிரேக்கர்ஸ்" அல்லது "ட்ரிப்பர்ஸ்" என்ற பெயரில் அனைத்து எலெக்ட்ரானிக் கடைகளிலும் ஒரு பாக்ஸ் கிடைக்கும் ,அதை வாங்கி நமது வீட்டில் பொருத்திக் கொண்டால் போதும் .


பவர் சப்ளை விநியோகக் குறைபாடுகள் ஏற்ப்படும் போது இந்த பிரேக்கர்ஸ் தானாகவே மின்சாரத்துக்கான மெயின் லயனை கட் செய்து விடும் ,இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிப்படைவது தடுக்கப் படும் .பெரிய அளவு பொருட்சேதத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் .


இதிலும் முக்கியமான ஒரு கண்டீசன் என்னவென்றால் ? எர்த்திங் சரியாகச் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த பாக்ஸ் தன் வேலையை முழுமையாகச் செய்யும் .(அப்ப நம்ம ஹெல்த்தப் பாக்கறோமோ இல்லையோ எர்த்தப் பார்க்கணும்மா எர்த்து ...எர்த்து ...அதான் நம்ம பெர்த்தக் காப்பாத்தும்!!!).


சரி இனி முதலில் சொன்ன பாயிண்டுக்கே வருவோம் .


இப்போ இல்லை மீதி ஷாக்கை மீண்டும் நாளை தொடரலாம் ...


அதுவரை நீங்க உங்க வேலையை பாருங்க நான் என் வேலையை பார்க்கறேன் .

Wednesday, November 19, 2008

இம்பார்டன்ட் டவுட் எது ஈசி ? சேர்ந்து வாழ்தலா அல்லது விவாகரத்தா?

கடந்த இரண்டு தினங்களாக என் குடியிருப்புபு வளாகத்தில் நான் கேள்விப்பட்ட இரு செய்திகள் என்னை ஒரு சேர மிகவும் வருத்தமடையும்,சிந்திக்கவும் வைத்தன,எல்லாம் இந்த விவாகரத்து கூத்துக்கள் தான் ,கூத்து என்று சொல்வது தவறு தான் ...ஆனாலும் அது இன்று கூத்துப் போலத்தானே ஆகி விட்டது .பக்கத்து வீட்டுப் பெண் மிஞ்சிப் போனால் இருபத்தியொரு வயசு தான் ...இன்னும் பைனல் செமஸ்டர் முடியாமல் இருக்கும் போதே சென்ற வருடம் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் அவளுக்கு ,இப்போது திடீரென்று கணவன் வீட்டில் நிறையக் கட்டுப்பாடு சுதந்திரமேஇல்லை என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாயிற்று .பிறகொரு பெண் என் பாப்புவின் கிளாஸ் மேட் நிம்மியின் அம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தும் இன்னமும் அந்தக் குழந்தையை அவளது அப்பா வந்து பார்க்கவே இல்லையாம் ,விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிற்கிறதாம் .மிஞ்சிப் போனால் அந்தப் பெண்ணிற்கு இருபத்தி எழு அல்லது இருபத்து எட்டு வயதே ஆகக் கூடும் .

ஒரு வேலை விவாகரத்து ஆனால் மறுமணம் செய்து கொள்வாரா எனப் புரியவில்லை ,எத்தனை காலத்தை தனிமையில் தள்ள முடியும் ஒரு இளம் பெண்ணால்,அம்மா ...அப்பா காலத்திற்குப் பிறகு? தனிமை போலொரு கொடிய சாத்தானை ஈரேழு உலகிலும் காண முடியாது (தனிமையில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்) இன்னொரு பெண் கல்யாணமான மறுநாளே தன் கணவரால் "மனநிலை சரி இல்லாதவள் என்று முத்திரை குத்தப் பட்டு அம்மா வீட்டில் இருக்கிறாள்,பார்க்க லட்சனமாகப் பதவிசாக இருக்கும் அந்தப் பெண் கொஞ்சம் வெகுளி என்பது தான் நிஜம்,மற்றபடி பைத்தியமேல்லாம் இல்லை,ஆனாலும் இன்று அம்மா வீட்டில் வீட்டை விட்டு எங்கே செல்லவும் பயந்து கொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவடைத்துக் கொண்டு உள்ளேயே கிடப்பார்கள் தாயும் மகளும்,அண்ணன் ஒருவன் வடமாநிலத்தில் பணியிளிருக்கிறான் ,அவன் வரும் விடுமுறை காலங்கள் தவிர மாற்ற நாட்களெல்லாம் அவர்களது வீட்டு ஜன்னல் கதவு கூட சாத்தப்பட்டே இருக்கும்(தனிமை தந்த பயம் அந்த பெண்ணை இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியமாகவே ஆக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை ,

இந்த மூன்று பெண்களின் வாயிலாக நான் அறிந்து கொண்ட உண்மை பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது மட்டும் முக்கியமில்லை...அதற்குப் பின்னான வாழக்கை எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம் அதையும் சாமர்த்தியமாக அணுகி இடையில் வரும் கஷ்ட நஷ்டங்களையும் புத்திசாலித் தனமாகக் கையாள வேண்டியதின் அவசியத்தையும் வளரும் இளம் பெண்களுக்கு அவரவர் அம்மாக்கள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் .இல்லாவிட்டால் பெருகும் விவாகரத்துகளை தவிர்க்கவே முடியாது போகும் .இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களும்(மனைவிகள்) குழந்தைகளும் தான் ,

கல்யாண வயதில் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களே நீங்கள் மாப்பிள்ளையின் படிப்பையும்...சொத்துக் கணக்கையும் மட்டும் பார்த்தால் இப்போதெல்லாம் போதவே போதாது ,

அந்த அழகான ..வசதியான ...படித்த(படிக்காத மாப்பிள்ளை என்றாலும் கூட இது பொருந்தும் ) மாப்பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அதாவது அவர்கள் மிகவும் மோசமானவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அனுசரித்துப் போக கற்றுக் கொடுக்கலாம் . வெறும் வாய் சண்டைகள் ...வேற்று ஊடல்கள் இதற்காகவெல்லாம் விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் படியான அபிப்ராயங்களை உங்கள் மகள்களின் மனதில் புக விடாமல் தயவு செய்து தடுத்து விடலாமே!!!

இன்னும் சொல்லப் போனால் கணவன் மனைவி என்று ஆனா பிறகு எதற்கு நீ பெரியவன் ...நான் பெரியவள் என்ற ஈகோ ?

ஒரு முறை கணவன் விட்டுக் கொடுத்தால் மறுமுறை மனைவி விட்டுக் கொடுத்துப் போய்விட வேண்டும்(ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் தான் ...பழகப் பழக கை வந்து விடும் கலை அது)

முயற்சித்து தான் பாருங்களேன்!

கணவனோ,மனைவியோ

முதலில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

பிறகு ஒருவருக்கொருவர் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசியாக அவர் அப்படித்தான்...அவள் அப்படித்தான் என்று ஒருவருக்கொருவர் தெளிவு அடையுங்கள் .இதைத்தான் புரிதல் என்பார்கள்

சுலபமாகச் சொன்னால்

"அறிதல்

தெரிதல்

புரிதல் "

மலையேறும் கரடிகளும் எல்.கே.ஜி ரைம்ஸ்ஸும்


இந்த ரைம்ஸ் எல்லாம் நீங்க பாடி இருக்கீங்களா உங்க கே.ஜி கிளாஸ்ல ?நேற்று ஒரு ரைம்ஸ் பாடிக் கொண்டிருந்தாள் என் செல்ல மாமியார்(என் ஐந்து வயது மகளே இப்போது என் அருமை மாமியாராகவும் சில நேரங்களில் MAARI VIDUVATHU உண்டு) அவளை நாங்கள் வீட்டில் பாப்பு(பப்பு இல்லை இது பாப்பு) என்று அழைப்போம் .


பாப்பு ரைம்ஸ் பாடிக் கொண்டிருந்தாள் ,The bear went over the mountainThe bear went over the mountainThe bear went over the mountainTo see what he could see?To see what he could see?To see what he could see?...The otherside of the mountainThe otherside of the mountainஇதில் (To see what he could see?) இந்த இடத்தில் அவள் யோசித்த விதம் என்னை யோசிக்க வைத்தது ...


எல்.கே.ஜி தான் ஆனாலும் பெரும்பாலும் அவர்களுக்கு வார்த்தைகளை அவற்றின் ஓசையை வைத்தே பழக்குவதால் "டு" Toஎன்பதைTWO "டூ" என்று புரிந்து கொண்டு மம்மி டூ ஐஸ்ல பார்க்கரோம்ல அதான் மிஸ் "டு சி வாட் ஹி குட் ஸீ" அப்படின்னு சொல்றாங்க ,இப்போ ஒரே ஒரு ஐ மட்டும் பார்க்கறதா இருந்தா "எ ஸீ வாட் ஹி குட் ஸீ" (எ என்பது ஒற்றைப் படை அல்லவா?அதைத்தான் சொல்லவருகிறாள்).


அவள் புரிந்து கொண்டது கொஞ்சம் தவறு என்றாலும் அவள் அதை தொடர்பு படுத்திப் பாடிப் பழகிய விதம் என்னை ஈர்த்தது ,அப்புறம் நான் டு வுக்கும் டூ வுக்கும் உள்ள வித்யாசத்தை விளக்கோ விளக்கென்று விளக்கி ஒரு வழியாய் புரிய வைத்தாலும் சந்தோசமாக இருந்தது இப்போதுள்ள குழந்தைகளின் ஒப்புமைப் படுத்தி படிக்கும் பழக்கம்.

Tuesday, November 18, 2008

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதையும் ...நாங்க போட்ட சூப்பர் திட்டமும்(திட்டம் தீட்டுற வயசா அது?இது இந்த வார டைட்டில் டவுட்

நாங்கள் போட்ட திட்டம் :-இந்த திட்டம் தீட்டிய போது சர்வ நிச்சயமாக நான் ரெண்டாப்பு(இரண்டாம் வகுப்பு) தான் படித்துக் கொண்டிருந்தேன்,மிஞ்சிப் போனால் என்ன ஒரு ஒரு ஆறு வயசு இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்!திட்டம் தீட்டும் வயசா அது ?ஆனால் நான் இல்லை ...இல்லை நாங்கள் ஒரு குரூப் ஐந்தாறு குழந்தைகள்(அட என்னப்பா ஆறு வயசுனா அது குழந்தைப் பருவம் தான்!) ஒன்று சேர்ந்து நாக ரத்தினத்தை நாகப் பாம்பிற்க்குத் தெரியாமல் காட்டுக்குள் போய் எப்பாடு பட்டாவது கவர்ந்து கொண்டு வந்தே தீருவது என்று ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத் தட்ட ஒரு வார காலமாகப் பெருசாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம் .எல்லாவற்றிற்கும் காரணமே இந்த ஒன்னாப்பு (ஒன்றாம் வகுப்பு) வாத்தியார் தான் ,அவரை நாங்கள் மட்டும் அல்ல ஊரே கதை வாத்தியார் என்று தான் அழைத்தது,அவர் பாடம் எதுவும் எடுத்ததாக எனக்கு ஞாபகமே இல்லை,எப்போதும் கதை தான் சொல்வார்.நிறைய....நிறையக் கதைகள் சொல்வார்(தன் கற்பனையையும் சேர்த்து ...தான்)அப்படி அவர் அறிமுகப் படுத்தி வைத்தவை தான் பாட்டி விக்ரமாதித்தன் கதைநல்லதங்காள் கதைகண்ணகி கோவலன் கதைபோஜ ராஜன் கதை(இது இப்போது மறந்து விட்டது தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் தேவலை ...)கண்ணப்பர் கதை வள்ளி கல்யாணம் அப்புறம் ஒரு கீரிப்பிள்ளை கதையைக் கூட அடிக்கடி சொல்வார் இது கண்ணகி கோவலன் கதையில் வரும் ஒரு கிளைக்கதை ,ஆனாலும் ரொம்ப நல்ல கதை .இவ்வளவு நாட்களின் பின்னும் மறக்கவே இல்லை எனக்கு ,தெருவில் என்றாவது மோடி வித்தைக் காரன் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை என்று சொல்லி மேளம் அடித்தால் உடனே எனக்கு ஞாபகம் வருவது ஒன்னாப்பு வாத்தியாரும் அவர் சொன்ன கீரிப்பிள்ளை கதையும் தான்.இது வரை நேரில் நான் கீரியும் பாம்பும் சண்டை இட்டு பார்த்ததே இல்லை ஆனாலும் ரெண்டாப்பு படிக்கும் போது எப்போதெல்லாம் எங்கள் கிளாஸ் வாத்தியார் லீவோ ..! எப்போதெல்லாம் ஒன்னாப்பு வாத்தியார் எங்களைப் பார்த்துக் கொள்ள ஹெட்-மாஸ்டரால் அனுப்பப் படுகிறாரோ அப்போதெல்லாம் நாங்கள் அவரிடம் வேண்டி விரும்பி முதலில் கேட்பது இந்தக் கீரிப்பிள்ளை கதையைத்தான்.சொல்லப் போனால் நாங்கள் அப்போதெல்லாம் வாரம் ஒரு தடவையாச்சும் பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை நேரில் பார்த்தோம் ஒன்னாப்பு வாத்தியாரின் வாய் வழியே ...!அவ்வளவு தத்ரூபமாக கதை சொல்ல அடித்துச் சொல்கிறேன் இன்றைக்கு யாருமே இல்லை என்று .(அந்தக் கீரிப்பிள்ளை கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்)இப்போது எங்கள் திட்டத்தைப் பார்ப்போம்.எதையுமே நேரில் கண்பது போலவே விவரிக்கத் தெரிந்த அந்த ஒன்னாப்பு வாத்தியார் எல்லாக் கதையையும் போலவே நாகரத்தினக் கதையையும் எங்களுக்கு ஒரு பின் மத்தியான வகுப்பில் சொன்னார்,அதாகப் பட்டது நாகரத்தினம் என்பது வைர...வைடூரியங்களைக் காட்டிலும் மிக விலை உயர்ந்ததாம் (அப்படியா ...மக்களே !!!)இங்கே ஒரு டவுட் நோட் செய்து கொள்ளுங்கள் நாகரத்தினம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்ன?அப்போதெல்லாம் ஆறு வயதில் இந்த டவுட் வரவில்லை.அந்த நாகரத்தினத்தை வைத்து தான் அந்தப் பாம்பு இரை தேடுமாம் .பாம்புக்கு ராத்திரியில் பொதுவாக கண் தெரியாதுடவுட் நம்பர் டூ :-(யாருக்குத் தான் ராத்திரியில் விளக்கில்லாமல் கண் தெரியக் கூடும்?)அதனால் அது தனது தொண்டையில் இருக்கும் நாகரத்தினத்தை இரை தேடும் இடத்தில் கக்கி விட்டு அந்த வெளிச்சத்தில் இரை ஏதாவது சிக்குமா என்று தேடுமாம் (எல்லாம் வாத்தியார் சொன்னது தான் )அந்த நேரம் யாராவது (நோட் திஸ் பாயிண்ட் நண்பர்களே)நாகரத்தினத்தை பாம்பிடமிருந்து அபகரிக்க வேண்டுமென நினைத்தால் அவர்கள் மகா புத்திசாலிகளாக இருக்க வேண்டுமாம் . முதலில் தைரியம் ரொம்பத் தேவை .நாடு இரவில் தான் பாம்பு காட்டில் இரை தேடுமாம் .(இங்கே ஒரு டவுட்)டவுட் நம்பர் த்ரீ:-மத்த நேரமெல்லாம் பாம்புக்குப் பசிக்காதா?தப்பித் தவறி இந்த டவுட் ஐ கேட்ட சில புத்திசாலி குழந்தைகளுக்கு(ஹி..ஹி...ஹி...அப்போ நாங்கலாம் குழந்தைங்க தான...!!!) வாத்தியார் சொன்ன கலப்படமில்லாத காமெடி பதில் என்ன தெரியுமா?"கதைக்கு காலுண்டா ...உங்க அப்பனுக்கு வாலுண்டா?" எனக்கு தெரியாது சார் என்று சொன்னால் போதும் ...இதுக்கே உனக்கு பதில் தெரியலை ...பேசாம உட்கார் கதையக் கேளு....கதையக் கேளு என்றே ஒவ்வொரு வகுப்பையும் ஓட்டோ ..ஒட்டென்று ஓட்டியே விடுவார் .இப்படியாப் பட்ட ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன மீதிகதையைக் கேட்டு தான் நாங்கள் அம்மாம் பெரிய திட்டத்தை தீட்டிக் கொண்டு காத்திருந்தோம் .நாங்கள் என்றால் நாங்க நாலு பேர் (அழகேசன்,ரங்கா,கார்த்தி,ருக்கு)வாத்தியார் சில டெக்னிக்குகள் சொல்லி இருந்தார் இல்லையா நாகரத்தினத்தை ஹீரோ எப்படி எல்லாம் அதனிடம் இருந்து திருடிக் கொண்டு போனார் என்று (அதிக பட்சம் வாத்தியாருக்கு கதை ஹீரோவாக கோவலனோ...விக்ரமாதித்தனோ,போஜராஜனோ தான் கிடைப்பார்கள்)மூன்று போரையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு புதுசு புதுசாகக் கதை சொல்வதில அவர் தான் கில்லாடி நம்பர் ஒன் ஆச்சே? அப்படி அவர் சொன்ன ஒரு கதையில் ஹீரோ விக்ரமாதித்தன் (எங்களுக்கு) உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம்(ரஜினி,விஜய்,அஜீத்,சூர்யா...!!!)நாகத்தை(அதான் பாம்பை ஏமாற்றி நாகரத்தினத்தை எடுக்க(திருட) ஒரு பையில் சாணி(கெட்டிச் சாணி) எடுத்துக் கொள்கிறார் முதல் வேலையாக,பிறகு ஒரு டார்ச் லைட் இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம் ? பாம்புக்கு ராத்திரியில் கண் தெரியாது ...அதுவே நாகரத்தினத்தை கக்கி அது தரும் ஒளி வெளிச்சத்தில் தான் இரை தேடிக் கொண்டு இருக்கும் ,அப்படியானால் பாம்பை ஏமாற்ற முதலில் நாகரத்தினத்தின் ஒளியைத் தடுத்தே ஆக வேண்டும்.ஆனால் பாம்புக்குப் பக்கத்தில் போக முடியுமா? அதான் தூர இருந்தே குறி பார்த்து கெட்டிச் சாணியை சரியாக வீசி எறிந்து நாகரத்தினத்தை சாணி மூடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ,இல்லாவிட்டால் கதை கந்தல் பாம்பு ஹீரோவைப் பார்த்து விடக் கூடும்.அதற்குத் தான் கெட்டிச் சாணி...அப்புறம் டார்ச் லைட் எதற்கு என்று கேள்வி வரும்? அதற்கும் பதில் இருக்கிறது , அதாகப் பட்டது வெளிச்சம் வர வைக்கும் நாக ரத்தினத்தை சாணி மூடி விட்டால் ஹீரோ (எங்கள் திட்டப் படி நாங்கள்) கண் தெரியாமல் எப்படி அதைப் போய் பாம்புக்கு அகப் படமால் நைசாக நழுவி எடுத்துக் கொண்டு ஓட முடியும் ?அதான் டார்ச் லைட் ...அதை எரிய விட்டு ரத்தினத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட வேண்டும் .பாம்புக்கு கண் வேண்டுமானால் தெரியாது ஆனால் காது கேட்கக் கூடுமே(விஞ்ஞானிகள் கூற்றுப் படி பாப்புக்கு காது கேட்காதாம் ஆனால் அப்போது எங்களுக்கு இதெல்லாம் தெரியாதே ...ஏனென்றால் அப்போதெல்லாம் நாங்கள் தான் குழந்தைகள் ஆச்சுதே!!!)அப்படி காது கேட்டு பாம்பு எங்களைத் துரத்தினால் யாரும் மறந்து போய்க் கூட நேராக மட்டும் ஓடி விடக் கூடாது...கூடவே கூடாது ,வளைந்து வளைந்து பாம்பு போலவே ஊட வேண்டும் அப்போது தான் பாம்பால் நம்மை வேகமாகத் துரத்த முடியாமல் போகும்,இது நிரூபிக்கப் பட்ட உண்மையா? என்றெல்லாம் தெரியாது என்னவோ வாத்தியார் சொன்னார் (இப்போது கூட ஒருவேளை... பாம்பு துரத்தினால்(கனவில் தான் ..நம்புங்க ...ப்ளீஸ் ) நாங்கள் வளைந்து வளைந்து தான் ஓடுவோம் .நீங்களும் அப்படியே ட்ரை பண்ணி பாருங்களேன் (பாம்பு துரத்தினால் மட்டும்).டவுட் நம்பர் ஃபோர்:-இதுவரை பாம்பு மனிதர்களை கதைகளைத் தவிர நிஜத்தில் எப்போதாவது துரத்தி இருக்கிறதா?சரி இப்போது சொல்லி முடித்து விடுகிறேன் எங்கள் நால்வர் அணியின் திட்டத்தை ,ஒரு வழியாக முடிவுக்கு வந்தே விட்டோம்,(நான் எங்கள் திட்டத்தை தான் சொல்கிறேன்)அதாவது அழகேசன் அவனது தாத்தா வீட்டு மாட்டுத் தொழுவத்தில் இருந்து கெட்டிச் சாணி எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டான் (அதற்கான பிளாஸ்டிக் பை கூட அவனே கொண்டு வந்து விடுவதாக பெருந்தன்மையாகச் சொல்லி விட்டான் ,ரங்கா சும்மா பாதுகாப்புக்கு கையில் இருக்காட்டுமே என்று அவள் வீட்டு அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி நம்பிக்கை ஊட்டி விட்டாள், கார்த்தி தான் டார்ச் லைட் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கட் அண்ட் ரைட் ஆக சொல்லி விட்டோம்(அவன் தான் கொஞ்சம் கேணை எங்கள் குரூப் இல்) வேறு யார் வீட்டில் டார்ச் லைட் எடுத்துப் போக விடுவார்களாம்? அப்புறம் ருக்கு ரொம்பவே பெருந்தன்மையாக எங்களை எல்லாம் வழிநடத்தி அதாகப் பட்டது எங்களை அதட்டி உருட்டிக் சட்டாம் பிள்ளைத் தனம் செய்து எங்களை அதிகாரம் செய்து ஒருவேளை நாகரத்தினம் கிடைத்தல் அதில் பெரும்பங்கு எடுத்துக் கொள்ளும் நல்ல(கெட்ட) நோக்கத்தோடு வர ஒத்துக் கொண்டாள்.இதோ இன்னும் ஒருநாள் இருக்கிறது !!!நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?அஸ்க்கு புஸ்க்கு ...இப்பவே சொல்லிட்ட த்ரில் போயிடும்ல?அடுத்த பதிவு போட மேட்டர் வேணாமா ?
கொஞ்சம் பொறுங்க வில் பி பேக் சூன் ...!

Monday, November 17, 2008

டவுட்:- உங்க குழந்தை உருப்படியாக காலையில் என்ன சாப்பிட்டு விட்டுப் போகும் ஸ்கூலுக்கு?



இந்த அட்வைஸ் கலந்த டவுட் ஐந்து வயதுக் குழந்தைகளை வேனில் பள்ளிகளுக்கு அனுப்பும் அம்மாக்களுக்கு (அப்பாக்களுக்கும் தான்...!)சென்னை போன்ற பெருநகரங்களில் விடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பெரியவர்கள் விழித்து எழுகிறார்களோ இல்லையோ ஐந்து வயதுக் குழந்தைகளில் பெரும்பாலோர் (குறிப்பாக வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி அமைந்த குழந்தைகள்) கட்டாயமாக காலை ஆறிலிருந்து ஆறரைக்குள் எழுந்தே ஆக வேண்டும் ...இல்லாவிட்டால் வேன் போய்விடக்கூடும்,பொதுவாக சென்னையில் பெரியவர்களுக்கே ஏழு மணிக்கு தான் விடியும்.எனக்கு இதில் என்ன பெரிய டவுட் என்றால் ...!

டவுட் நம்பர் ஒன் :-

அப்படி ஆறு மணிக்கு (வேறு வழியே இல்லாமல் )எழுந்து வேக வேகமாய் பள்ளிக்கு கிளம்பும் அந்தக் குழந்தைகள் என்ன தான் அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் போவார்கள் ? ,வெறும் பால் சிலர் குடித்து விட்டுப் போகிறார்கள் (சிலர் என்னவோ போன்-விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் எல்லாம் குடித்து விட்டுத் தான் போவதாக சொல்லிக் கொள்கிறார்கள் ,ஆனாலும் காலை வேளைகளில் பெரும்பாலும் காக்கைகள் தான் அதெல்லாம் குடித்துக் கொண்டிருப்பதாக காற்று வாக்கில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,குழந்தைகள் சாப்பிட்டு சத்து வைக்கிறார்களோ என்னவோ இந்தக் காக்கைகள் தான் அந்தக் குழந்தைகள் மிச்சம் வைத்ததைத் தின்று தின்றே அதி தொந்திரவு தந்து கொண்டு இருக்கின்றன, காலை வேளையில் பார்க்கில் வாக்கிங் போகக் கூட பயம் ...அவ்வளவு காக்கைகள் ...!!!இப்போது டவுட் நம்பர் டூ என்னவென்றால் ?

உண்மையில் வெறும் பால்,போன்விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் ,இதெல்லாம் உண்மையில் குடிப்பது குழந்தைகளா காக்கைகளா ?

அதோடு டவுட் நம்பர் த்ரீ என்னவென்றால் ?

சரி இதெல்லாம் வெறும் நீர் ஆகாரங்கள் தானே ?இது எந்த அளவுக்குப் போஷாக்காக இருக்க முடியும்?திட உணவாக அந்த நேரம் என்ன சாப்பிடுகிறார்கள் அந்தக் குழந்தைகள் ?இட்லி,தோசை,கார்ன்-பிளாக்ஸ்,சாக்கோஸ்...!!! நிச்சயமாக எந்தக் குழந்தையுமே அந்த நேரம் அரிசி சோறு சாப்பிடும் என்று நம்புவதற்கு கஷ்டமாயிருப்பதால் தான் மேற்கூறிய திட ஆகாரங்கள் தான் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடலாம் என நம்புகிறேன் , இதில் எதை எத்தனை சதவிகிதம் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் ,வீணடிக்காமல் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடும் என்பதில் இந்த பதிவைப் படிக்கும் (ஏதோ ஒரு சிலர் படிப்பீர்கள் தானே...!) நண்பர்கள் உரிய பதில்களைத் தருவீர்கள் என நம்புகிறேன் .இன்றைக்கு டவுட் இவ்ளோ தான் .இதைக் கிளியர் பண்ணுங்கோப்பா பஸ்ட்டு !!!

Saturday, November 8, 2008

எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரியா ?

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா அப்போ அம்மாவுக்கு மீசை முளைச்சா மாமாவா?வெற்றிலை போட்டா மாடு முட்டும் சரி அப்போ புகையிலை போட்ட பூனை முட்டாதா ?கோழி முட்டை தான் போடுமா ...அப்போ கூமுட்டை யார் போடறது ?எந்திரனுக்குஆப்போசிட் எந்திரியாங்க ?இப்படித்தான் டவுட் கேட்டுக்கிட்டே இருக்கணும் எப்பவும் ,எந்நேரமும்?!