Wednesday, February 10, 2010

My Daughter...


என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,

காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பு இங்கிருந்து கொண்டே ...

"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,

அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.

"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;

ச்சே..ச்சே ..பெட் கௌ "

சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;

பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.

ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!

சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .

ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."

எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.

"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!

அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"

எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.

குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))


டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.