Wednesday, February 11, 2009

காதல் தேவதை vs நீலு அண்ட் மது ?!


தேவதை அதன் சிறகுகளை விரித்தவுடன்

மதுமதி "நில் ப்ளீஸ் ....போய் விடாதே என்றாள்.

தேவதையோ நான் போய்த்தானே ஆக வேண்டும் என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தது .

மதுமதி கண்களால் கெஞ்சினாள்(கண்களின் கருந்திராட்சைகள் உருளும் ஒவ்வொரு முறையும் ப்ளீஸ் உடனே போய் விடாதே என்ற கெஞ்சல் ஊஞ்சலாடியது. ..

நீள நீளமான வாக்கியங்களை பேசி வாதம் செய்ய நேரம் இதுவல்ல என்றோ என்னவோ !அவள் திணறலாய் பதட்டத்தோடு .நீல் (நீலு என்ற நீலநாராயணன்) பாவம் ...என்று மறுபடி தேவதையின் முகம் பார்த்து விட்டு தலை குனிந்தாள் .

திராட்சை ரசம் ரெண்டு சொட்டு மண்ணில் விழுந்து மாயமானது .

மதுமதி அழுவது தேவதையைப் பாதித்ததாய் தெரியவில்லை .

"அவனை விடுவதாய் இல்லை" நீ போய் விடு தேவதை இரக்கமின்றி சலனமற்ற முகத்துடன் சொல்லி மறைந்தது.

நீலுவை நீல நிற பட்டு ரிப்பனால் கண்களை மறைத்துக் கட்டி தேவ தூதர்கள் இழுத்துக் கொண்டு பறந்தார்கள் கைகளில் பூக்களால் விலங்கு பூட்டி .

நொடியில் நடந்து விட்ட இந்த மித மிஞ்சிய அதிசயத்தில் உறைந்து போனவளாய் மதுமதி திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

பெரிதாய் ஒன்றும் நடந்து விடவில்லை .

நீண்ட நாட்களாய் நீலு மதுமதியை ஒற்றையாய் விரும்பிக் கொண்டிருந்தான் .இது அவளுக்கும் தெரிந்தே இருந்ததால் ...போனால் போகிறதென்று இந்த காதலர் தினத்தன்று .தானும் அவனை விரும்புவதாய் பெருந்தன்மையாய் மெரீனாவின் கடல் அலையில் கால் நனைத்துக் கொண்டே பாப்கார்ன் கொறிப்பதைப் போலவே ஈசியாகச் சொல்லி விட்டாள்.

வந்தது வினை !

நீலு சினிமா பார்த்து பார்த்து அந்த பாதிப்பில் தானும் ஒரு காதலன் ஆகி விட்டோமென்ற அடக்க மாட்டாத சந்தோசத்தின் உச்சத்தில் சட்டென்று திக்கு முக்காடி அப்படிச் சொன்னானா ?!

இல்லை அவனுக்கு எட்டில் சனியோ என்னவோ ?!

மது

மது....

மதூ ...

என் செல்லக் குட்டி

என் தங்க கண்ணம்மா ...

பட்டு மீன்குட்டி

இப்பவே இந்த நிமிஷமே ...

நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .

இதை மட்டும் மதுவைப் பார்த்துக் கொண்டு சொன்னவன்.

"காதல் தேவதை நீ...உன்னை இப்போவே இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணிகறேன் ; என் மேல ப்ராமிஸ் ."

இதை உரக்கக் கத்திச் சொல்லும் போது அவனது பார்வை மதுமிதாவிடம் இல்லை எங்கேயோ அகண்டு விரிந்து (நீல)நீளமாய் ஜொலித்த கடலில் இருந்து பொங்கிப் பிரவகித்து திரண்டு வந்த ஒரு உயரமான அலையைப் பார்த்து கத்திச் சொன்னான் .

அந்தக் அலையின் கொண்டையில் அஸ்வினி தேவர்கள் அந்நேரம் அவனை நோக்கி வந்தது பாவம் அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை!!!

அவன் பாவம் பித்தம் தலைக்கேறி தத்துப் பித்தென்று உளறுகிறான் என்று தான் மதுமதியும் மெரீனாவில் அந்நேரம் கடலலையில் கடலை போட்டுக் கொண்டும் கடலை கொறித்துக் கொண்டும் இருந்த பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் .

விதி (அப்படின்னு ஒன்னு இருக்கில்ல????!!!!)

"ததாஸ்து "

என்ன நடந்திருக்கும்?

நீங்களே கெஸ் பண்ணிகோங்க உங்களுக்கு தோணறதை கீழ்கண்ட முக்கியக் குறிப்பின் அடிப்படையில்!!!!!)


முக்கியக் குறிப்பு:

"சதா நம்ம மனசும் வாயும் சும்மாவே இருக்கறதில்லை எதையாவது நினைச்சுக்கிட்டும் ...பேசிகிட்டும் தான இருக்கிறோம்.அப்போ அந்த குறிப்பிட்ட நேரத்துல அஸ்வினி தேவர்கள் வந்து "ததாஸ்து " சொல்லிட்டா நாம என்ன நினைச்சோமோ அல்லது பேசினோமோ அந்த விஷயம் அப்படியே பலிச்சிடுமாம்."ஆகவே காதலர்களே உஷார் ...காதலர் தினம் வருது ! பார்த்துப் கவனமா பேசுங்க இல்லனா நிஜ காதல் தேவதை வந்து கண்ணைக் கட்டி கூட்டிட்டுப் போயிடும்.