Friday, February 27, 2009

மழை என்னை நனைத்தது...நான் மழையில் நனைந்தேன்...!!!


மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரந்தெரியா வீடு
கண் மறைத்த
வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது
எந்நேரம் வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!

Wednesday, February 25, 2009

நீங்க இந்தக் குழந்தைக்கு ப்ளான் பண்ணீங்களா இல்ல தற்செயலா?!


  • செவிக்கு இனிய நல்ல சங்கீதத்தைப் போல...

  • நல்ல ருசியான சாப்பாட்டைப் போல ...

  • முதலில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் சற்றும் குறையா சிறுகதையைப் போல...

  • அழகான அர்த்தமுள்ள கவிதையைப் போல...

  • அன்பான கணவன் மனைவியின் இனிமையான தாம்பத்தியத்தைப் போல...

  • அனுசரணையான பெற்றோர்களின் அனுபவம் வாய்ந்த வழிகாட்டலைப் போல ...

  • அழகான ...புத்திசாலிக் குழந்தைகள் அமையப் பெறுவதும் ஆஷிர்வதிக்கப் பட்ட ஒரு கொடுப்பினையே!

குழந்தை வளர்ப்பு என்பது ஏனோ தானோவென்று இன்றைய சூழலில் அமைந்து விட முடியாது.முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே இப்போதெல்லாம் திட்டமிட்டே ஆகவேண்டிய சூழலில் இன்றைய இளம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதே நிஜம்.

மகப் பேரு மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ...

"நீங்க இந்தக் குழந்தைக்காக ப்ளான் பண்ணினிங்களா ...இல்ல தற்செயலா ?"

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்வி சங்கோஜத்தைத் தரலாம்...ஆனால் சற்று யோசித்தால் அதிலுள்ள அர்த்தம் பிடிபடும் .வாழ்க்கையில் எல்லாவற்றையுமே திட்டமிட்டு நிகழ்த்துதல் என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம் .ஆனால் ஒரு சில காரியங்களை மட்டுமேனும் நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் இன்றைக்கு நிலவுகிறது.


  1. பொருளாதார நசிவுத் தன்மை...

  2. விலைவாசி உயர்வு ...

  3. கூட்டுக் குடும்பங்கள் நலிந்து தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்ட நிலை,

  4. ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரே ஒரு குழந்தை என மாறி விட்ட சூழல் .

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஆராய்ந்தால் இன்றைய குழந்தைகளை சமூகத்தில் புத்திசாலிகளாக வெளிக் கொணர்வதில் பெற்றோர்களின் பங்கு மிக மிக அவசியமாகி விட்டது .கல்வி என்பது அறிவை மட்டுமே பட்டை தீட்டக் கூடும்.தனக்கான நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியக் கற்றுத் தருவது பெற்றவர்களின் தலையாய கடமை .


சென்ற வாரத்தில் ஒருநாள் டி.வி செய்திகளில் ..."நொய்டாவில் விவரமறியா சிறுமிகளிடம் பாலியல் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது." என்ற வரிகள் காதுகளில் விழுந்தது.வளர் இளம்பருவத்தில் குழந்தைகளைப் பெற்ற எல்லாப் பெற்றவர்களையும் மிகுந்த பயத்தில் ஆழச் செய்த ஒரு சம்பவம் (கொடூரம் என்பதே சாலப் பொருந்தும்!)அல்லவா அது?!குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம்.நிச்சயம் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.


சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வுச் செய்திகள் ஒன்றில் இன்னும் இருபது வருடங்களில் உலகின் பெரும்பான்மையான மக்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப் பட்டு அழிவைத் தேடிக் கொள்ளப் போகிறார்கள் .அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயலா விட்டால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் அபாயமே " என்று கூறப் பட்டிருந்தது.அந்த நோய் ...



  • AIDS அல்ல(ACQUIRED IMMUNO DIFICIANCY ச்ய்ன்றோம்)

  • கேன்சர் அல்ல...

  • காச நோய் அல்ல

வேறென்னவாக இருக்கும் என்கிறீர்களா? சுருங்கச் சொன்னால் ;

மனச்சிதைவு நோயாம்.

அதென்ன மனச் சிதைவு நோய் ?எதனால் இந்த நோய் வரக் கூடும்?குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் .மனச் சிதைவுக்கான ஆரம்ப விதையே குழந்தைப் பருவம் முதற்க் கொண்டு நடக்கும் சம்பவங்களின் தாக்கங்களே என்கிறார்கள் .ஏதோ பெற்றோம் ...வளர்த்தோம் என்றெல்லாம் இப்போது இருந்து விட முடியாது என்பதையும் தாண்டி பல விஷயங்கள் குழந்தை வளர்ப்பில் .

பெரிதாய் எதையேனும் சொல்லப் போவானேன்.

சென்ற வாரம் நிகழ்ந்த ஒரு சின்ன சம்பவம் ...எப்போதுமே "சுட்டி டி.வி யில் பாப்பு செட்ரிக் பார்ப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கும் ."எட்டு வயதுப் பையன் உடன் படிக்கும் எட்டு வயது மாணவியை நேசிப்பதைப் போல அந்த தொடரில் காட்டப் படுவது எனக்கு அத்தனை விருப்பமில்லை.

ஆனால் பாப்பு சென்ற வருட விடுமுறையில் பாட்டி வீட்டிற்குப் போனதிலிருந்து அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அந்த தொடரைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்ததால் இப்போதும் ஆர்வத்துடன் கண்டினியு செய்து கொண்டிருந்தாள்.வேண்டாம் வேறு ஏதானும் சேனல் பார் என்று மாற்றினால் அவளுக்கு கோபம் வந்தது.அதையே வை என்று அதிகாரமாக சொன்னாள்.

சில நாட்கள் பார்க் ...நண்பர்கள் வீடு என்று விளையாடப் போய்விட்டால் மறந்து விடுவாள்.ஆனால் மீண்டும் வீட்டில் இருக்கும் பொது அத்தொடரைப் பார்ப்பது நிற்கவே இல்லை.எனக்கோ சுத்தமாக விருப்பமே இல்லை .ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக சொன்னாள் பின்விளைவுகள் வேறு விதமாக இருக்குமோ என்று சங்கடமாக இருந்தது.

இது இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.நானும் ஒவ்வொரு முறையும் அவள் செட்ரிக் பார்க்கும் பொது மட்டும் அப்படி யோசித்து விட்டு பிறகு மறந்து போனவளானேன்.ரொம்பவும் வேண்டாம் ...பார்க்கவே கூடாது என்று வலியுறுத்திச் சொல்லவும் தயக்கம்.எதை நாம் வேண்டாம் என்கிறோமோ அதை தானே குழந்தைகள் பிடிவாதமாக வேண்டும் என்பார்கள்.(இது எழுதப் படாத விதி ஆயிற்றே!)

இப்படியோ போய்க் கொண்டிருந்த இந்த விஷயம் கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அந்த தொடரில் வரும்"குட்டிப் பையன்(ஹீரோ) செட்ரிக் தன் உடன் படிக்கும் மாணவி ஜேனை நினைத்து" நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன் ஜேன்" என்று சொல்வதாக ஒரு வசனம் வரவே ...

பாப்பு என்னிடம் "புருவங்களை ஆச்சர்யம் போல உயர்த்தி "மம்மி லவ் பண்றானாம் ...பாரேன் என்றாள். நான் திடுக்கிட்டு சட்டென்று ...கண்ணம்மா அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா என்றேன் புத்தி சொல்வதைப் போல...

பாப்பு என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

(அந்தப் பார்வை நான் என்னவோ அவளது குழந்தை போலவும்...அவளென்னவோ எனது அம்மா போலவும் எனக்கு உணர்த்தியது )

பிறகு பாப்பு தொடர்ந்து சொன்னாள்.

என்னம்மா நீ?

இது சும்மா டி.வி.ப்ரோக்ராம்னு எனக்கு தெரியாதா?

its only for seerial

என் கிட்ட யாராச்சும் boys அண்ட் girls இப்படி சொன்ன

" no friend dont say லைக் திஸ் ? its bad ...it is a prograam .not real ...go and sit ur place னு சொல்வேன் .என்றாள்.

கொஞ்ச நேரம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .

பாப்புவும் ..நானும் சேர்ந்து சிரித்துக் கொண்டோம் .

என்னை விட பாப்பு தெளிவாகவே வளர்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன் நான். குழந்தை வளர்ப்பில் அன்றொரு பாடம் கற்ற நிறைவு வந்தது.

குழந்தைகளிடம் எந்த ஒரு விசயத்திலும் ஆக்ரோசமாக எதிர்ப்புக் காட்டாமல் மென்மையாகச் சொல்லியோ அல்லது நமது கவலையை சுருக்கமாகப் புரிய வைத்தாலோ பல பிரச்சினைகள் தீரும்.

Monday, February 23, 2009

அழகான நாட்களில் இன்றொரு நாள்/


குளு குளு வென இருந்தது பாப்புவின் பள்ளிக்குள் நுழைந்ததும் ; பள்ளியில் எல்லா வகுப்பறையும் எ.சி என்று நினைத்து விட வேண்டாம்.திங்களும் அதுவுமாய் கண் பார்த்த இடமெல்லாம் வெள்ளுடை குட்டித் தேவதைகள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய்...மனதிற்குள்

சிலு சிலுவென்று பனியடித்தது. ரகம் ரகமாய் பூச்சரங்களைப் போல வளைய வரும் உற்சாகம் குறையாத வண்ணத்துப் பூச்சிகள்.

"ஆப்பிள் பெண்ணே நீ தானோ ...

ஐஸ் கிரீம் கனவே நீ தானோ "

என்று பாட்டுப் பாடாத குறை தான்!

குழந்தைகள் அவர்கள் ஆண் குழந்தைகளோ...பெண் குழந்தைகளோ பாரபட்சமே இன்றி எல்லாக் குழந்தைகளும் கொள்ளை அழகு .விதம் விதமான குண்டு...குண்டு கண்களோடு ...பன் போன்ற மெத்து...மெத்தென்ற கன்னங்களோடு ,தளிர் பிஞ்சு உடலசைத்து நிற்பதுவும்...நடப்பதுவும்...பேசுவதும் கூட அத்தனை அழகு .ஓடும் போது கூட ரொம்பவும் அழகு தான் .

சிலரது குட்டித் தலைகளில் செடிகள் முளைக்க வைத்து அதில் வண்ண வண்ண பாண்டுகள் சுற்றியிருந்தனர்.செடிகளைச் வளைத்து பூக்களைச் சுற்ற இப்போதெல்லாம் அனுமதி இல்லையாம்.

எடுத்து வாயில் போட்டு மென்று விடக் கூடாது என்றோ என்னவோ?! இந்த அழகான சுட்டி ராட்சசிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்புவதற்கில்லை!!!

பளீர் வெண்மையில் காலையில் அணிவித்த வெள்ளை ஷூக்கள் எல்லாம் மதிய நேரத்தில் நல்ல சந்தன அழுக்காய் மாறி கண்ணை உறுத்தாமல் சிரித்துக் குசலம் விசாரித்தன.

கை நகம்...கால் நகங்களில் இருந்த அச்சு ...பிச்சு அழுக்குகளில் எல்லாம் கவனம் களைய விடாதீர்கள் என்று குறும்பாய் எச்சரித்துக் கொண்டு எல்லா முகங்களிலும் மல்லிகைப் பூஞ்சிரிப்பு பரவி விரவி நம்மையும் நிரவித் தழுவியது.

சிரிப்பு கூட ஒரு தொற்று வியாதி தான்.காலையில் வாரத்தில் முதல் நாளே கொஞ்சம் டல் அடித்துக் இருந்த நிலையில் இன்றைக்கு கடைசி மிட் டெர்ம் டெஸ்ட் முடிந்து சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் "ஓபன் டே" என பாப்புவின் பள்ளிக்குப் போய் வந்ததில் மூளை சுறுசுறுப்பாகி என் உலகம் என் வரையில் சந்தோசமாகி விட்டது.

அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் குழந்தையின் சந்தோசங்களைக் கூட நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் அதை நாம் அவர்கள் பயிலும் பள்ளியில் சென்று காண்பதே நலம் .

காண்பதே நலம் .

காண்பதே நலம் .(சும்மா ஒரு எக்கோ தான் !!!)

Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???

பிறிதொருநாள் தூசு தட்டலாம் !!!



கனவின் விழிப்பறையில்

காரடர்ந்த இருட்டறையில்

நெடுந்தூர

பயணக் களைப்பில்

நெல் முனையாய்

ஓய்ந்திருந்தால்

சிற்றெறும்புகள் கடித்தன

செவ்வந்திகள் சிணுங்கின

அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!

Wednesday, February 18, 2009

மேகமழை



மேகங்கள்

ஊர் சேர்ந்த

ஒருநாளில்

பெருமழை

பிடித்துக் கொண்டது

கரைந்து

மறைந்தன

கனத்த

மேகங்கள்

நீ யார்?

எந்த ஊர் ?

அறியும்

ஆர்வமிருந்தும்

வழிந்தேன்

மழையாய் !?

இடி போல

பின்னால்

உன் அப்பா!!!

அப்பப்பா !

பூமிக்கு வந்த புத்தர்




ஒரு கடை நாளின்

கடைசி

மணித்துளியில்

மறுபடி ஒருமுறை

பிறக்கும்

ஆசையில்

பூமிக்கு வந்தார்

புத்தர் !

புத்தர்

ஆசைப் படலாமா?

Friday, February 13, 2009

ஐ லவ் யூ டா புருஷா...



கண்ணே மணியே

கொஞ்சல்

காத்திருந்து உண்ணும்

இரவு சாப்பாடு

வாரம் ஒரு சினிமா

மாதம் ஒரு மலைப் பிரதேச

சுற்றுலா

இன்பச் சிற்றுலா ...

இப்படி சாயமிழக்க

யத்தனிக்கும்

கலர் கலர் கனவுகள்

எப்போதும் போல்

ஒவ்வொரு முறையும்

இன்றே நமக்கு மீள்கிறது ....

வெகு சுகமாய்

படு சுகந்தமாய்

இன்றே நமக்கு மீள்கிறது

விழி அசைவில்

என் மனம் அறியும்

விரலசைவில்

என் குணம் அறியும்

காதலா

நீயே என் கணவனுமானாய் !

கல்யாணமான காதலர்கள் நாம் (இருக்கக் கூடாத என்ன?!)

உள்ளங்கை பரிசாயினும்

பரவசமாய்

கண்ணோரம் சிரிப்பில் விரிய

சில்லென்று பூக்கும்

உன் புன்னகைக்கு

என்றும்

ரசிகை

நான் உன் மனைவி

நீ என் கணவன் ...

நாம் காதலர்கள்

என்றென்றும் காதலர்களே !

ஐ லவ் யூ டா புருஷா...

Thursday, February 12, 2009

வெயில் நிறத்து வீடு


வெயிலின் நிறம் மஞ்சளாமே!?

வெளிர் மஞ்சள்
மேற்சுவரும்
அடர் மஞ்சள்
ஜன்னல்களும்

அழுக்கு மஞ்சள்

அடிச் சுவரும்

இருப்பதனால் மட்டுமே

அந்த

வீடொன்றும்

வெயில் நிறத்து வீடில்லை

மஞ்சள் மினுங்கும்

பளிங்கு முக

மஞ்சுளா

மணமாகிப் போகும் வரை
வெயில் போலும்

மஞ்சள் நிறப் பூசணிப்பூ

தினமொன்றாய்

வாசலில் இட்டதால்

இடுகுறிப் பெயராயிற்று இன்றும் !

இனி என்றென்றும் ...!

வண்ணங்கள் மாறின

வழக்கங்கள் மாறவில்லை

எப்போதும்

அவ்வீடு

வெயில் நிறத்து வீடே !

மஞ்சுளா

இல்லாதேபோனாலும்...;

Wednesday, February 11, 2009

காதல் தேவதை vs நீலு அண்ட் மது ?!


தேவதை அதன் சிறகுகளை விரித்தவுடன்

மதுமதி "நில் ப்ளீஸ் ....போய் விடாதே என்றாள்.

தேவதையோ நான் போய்த்தானே ஆக வேண்டும் என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தது .

மதுமதி கண்களால் கெஞ்சினாள்(கண்களின் கருந்திராட்சைகள் உருளும் ஒவ்வொரு முறையும் ப்ளீஸ் உடனே போய் விடாதே என்ற கெஞ்சல் ஊஞ்சலாடியது. ..

நீள நீளமான வாக்கியங்களை பேசி வாதம் செய்ய நேரம் இதுவல்ல என்றோ என்னவோ !அவள் திணறலாய் பதட்டத்தோடு .நீல் (நீலு என்ற நீலநாராயணன்) பாவம் ...என்று மறுபடி தேவதையின் முகம் பார்த்து விட்டு தலை குனிந்தாள் .

திராட்சை ரசம் ரெண்டு சொட்டு மண்ணில் விழுந்து மாயமானது .

மதுமதி அழுவது தேவதையைப் பாதித்ததாய் தெரியவில்லை .

"அவனை விடுவதாய் இல்லை" நீ போய் விடு தேவதை இரக்கமின்றி சலனமற்ற முகத்துடன் சொல்லி மறைந்தது.

நீலுவை நீல நிற பட்டு ரிப்பனால் கண்களை மறைத்துக் கட்டி தேவ தூதர்கள் இழுத்துக் கொண்டு பறந்தார்கள் கைகளில் பூக்களால் விலங்கு பூட்டி .

நொடியில் நடந்து விட்ட இந்த மித மிஞ்சிய அதிசயத்தில் உறைந்து போனவளாய் மதுமதி திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

பெரிதாய் ஒன்றும் நடந்து விடவில்லை .

நீண்ட நாட்களாய் நீலு மதுமதியை ஒற்றையாய் விரும்பிக் கொண்டிருந்தான் .இது அவளுக்கும் தெரிந்தே இருந்ததால் ...போனால் போகிறதென்று இந்த காதலர் தினத்தன்று .தானும் அவனை விரும்புவதாய் பெருந்தன்மையாய் மெரீனாவின் கடல் அலையில் கால் நனைத்துக் கொண்டே பாப்கார்ன் கொறிப்பதைப் போலவே ஈசியாகச் சொல்லி விட்டாள்.

வந்தது வினை !

நீலு சினிமா பார்த்து பார்த்து அந்த பாதிப்பில் தானும் ஒரு காதலன் ஆகி விட்டோமென்ற அடக்க மாட்டாத சந்தோசத்தின் உச்சத்தில் சட்டென்று திக்கு முக்காடி அப்படிச் சொன்னானா ?!

இல்லை அவனுக்கு எட்டில் சனியோ என்னவோ ?!

மது

மது....

மதூ ...

என் செல்லக் குட்டி

என் தங்க கண்ணம்மா ...

பட்டு மீன்குட்டி

இப்பவே இந்த நிமிஷமே ...

நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .

இதை மட்டும் மதுவைப் பார்த்துக் கொண்டு சொன்னவன்.

"காதல் தேவதை நீ...உன்னை இப்போவே இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணிகறேன் ; என் மேல ப்ராமிஸ் ."

இதை உரக்கக் கத்திச் சொல்லும் போது அவனது பார்வை மதுமிதாவிடம் இல்லை எங்கேயோ அகண்டு விரிந்து (நீல)நீளமாய் ஜொலித்த கடலில் இருந்து பொங்கிப் பிரவகித்து திரண்டு வந்த ஒரு உயரமான அலையைப் பார்த்து கத்திச் சொன்னான் .

அந்தக் அலையின் கொண்டையில் அஸ்வினி தேவர்கள் அந்நேரம் அவனை நோக்கி வந்தது பாவம் அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை!!!

அவன் பாவம் பித்தம் தலைக்கேறி தத்துப் பித்தென்று உளறுகிறான் என்று தான் மதுமதியும் மெரீனாவில் அந்நேரம் கடலலையில் கடலை போட்டுக் கொண்டும் கடலை கொறித்துக் கொண்டும் இருந்த பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் .

விதி (அப்படின்னு ஒன்னு இருக்கில்ல????!!!!)

"ததாஸ்து "

என்ன நடந்திருக்கும்?

நீங்களே கெஸ் பண்ணிகோங்க உங்களுக்கு தோணறதை கீழ்கண்ட முக்கியக் குறிப்பின் அடிப்படையில்!!!!!)


முக்கியக் குறிப்பு:

"சதா நம்ம மனசும் வாயும் சும்மாவே இருக்கறதில்லை எதையாவது நினைச்சுக்கிட்டும் ...பேசிகிட்டும் தான இருக்கிறோம்.அப்போ அந்த குறிப்பிட்ட நேரத்துல அஸ்வினி தேவர்கள் வந்து "ததாஸ்து " சொல்லிட்டா நாம என்ன நினைச்சோமோ அல்லது பேசினோமோ அந்த விஷயம் அப்படியே பலிச்சிடுமாம்."ஆகவே காதலர்களே உஷார் ...காதலர் தினம் வருது ! பார்த்துப் கவனமா பேசுங்க இல்லனா நிஜ காதல் தேவதை வந்து கண்ணைக் கட்டி கூட்டிட்டுப் போயிடும்.

Tuesday, February 10, 2009

பிளாஸ்டிக் வாளியில் தளும்பும் இருட்டு


இருட்டை
பிளாஸ்டிக் வாளியில்
சேந்தி
சேந்தி
வாரி வழித்து எடுத்து
முற்று முழுதாய்
வீசி எரிந்து விட்டு
வீட்டுக் கதவை
பெரிய திண்டுக்கல்
பூட்டால்
பூட்டி விட்டால் மட்டும்
இருள் செத்துப் போவது
இல்லையாமே
வகீதா
இன்னும்
அழுது கொண்டு தான்
இருக்கிறாள்!
நம்ப மாட்டாதவளாய்
சுவற்றில்
காய்ந்த மாலையுடன்
(தொ)தூங்கும்
பஷீரின் புகைப்படம் !
இருட்டும் இரவும்
ஒன்றல்லவே
எதற்கோ
எதையோ பரீட்சித்துப் பார்க்கும்
பேதை மனம்
அழுது ஓயட்டும் !

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்?

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் "உலகம்" இன்று ஒரு "குளோபல் வில்லேஜ் "உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ நடக்கிறது ...நாம் இங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கிறோம் ,என்ற உணர்வு சாகடிக்கப் பட்டு நெடு நாட்கள் ஆகின்றன.எங்கே எது நடந்தாலும் அது மற்றவர்களை பாதிக்கவே செய்கிறது .வாழ்வின் மேடு பள்ளங்களை...அபாயக் குழிகளை ...தடுக்கி விழச் செய்யும் சமத்கார சூழ்ச்சிகளை ...ஸ்திரத் தன்மை நீடிக்காத மிக மிக லேசான "ம்" என்றால் உடைபடும் உறவுக்கோளங்களை முன்னெப்போதையும் விட இந்த நூற்றாண்டில் மனித இனம் மிக அருகாமையில் பல முறை தரிசிக்க வேண்டிய ஒரு சூழல் இன்று நிலவுவதென்னவோ வாஸ்தவமே!

அங்கே அமெரிக்காவில் என்ன நடந்தாலும் இங்கே இந்தியப் பொருளாதாரம் பாதிக்கிறது ,இலங்கையில் தமிழன் சித்திரவதை செய்யப் பட்டால் இங்கே"முத்துக் குமரன்கள் " தீக்குளிக்கிறார்கள். அதனால் தமிழர்கள் இலங்கையில் சுகப்பட்டார்களா ? என்றால் அது தான் இல்லை?! என்றும் போல் சுடப்பட்டுக் கொண்டே தான் சிதறிக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வ தேச அளவில் கவனம் கலைக்கவே தனது மரணம் என்று முத்துக் குமரன் எண்ணியிருந்தால் அவருக்காக வருந்துவதில் தவறே இல்லை.நிச்சயமாக உன் மரணத்திற்கு வேறு முலாம் பூசிப் பார்க்க இங்கே மட்டும் அல்ல எங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் .உன் வீரமரணம் சீக்கிரமே வலுவிழந்து புறக்கணிக்கப் படலாம், எதுவும் இங்கே நிலைத்த ஆதரவைப் பெறுவதில்லை.காந்தியைக் கொன்ற கோட்சேவின் செயலுக்கும் நீதி தேடிய உலகம் இது!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவனது செயல்பாட்டில் அது சரியோ தவறோ நிச்சயம் ஒரு நியாயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் .கோணங்கள் இங்கே பல் கோணங்களாகி பல்கிப் பெருகி மூச்சு திணறச் செய்கின்றன பல வேளைகளில் !ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் கடைசியில் வெற்று கூச்சல்கள் ...கலவரங்கள்...போராட்டங்கள்...போர்.இன்று இந்தியா ஒரு வன்முறை பூமியாக மற்றப் பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் வேர் விடத் துவங்கி விட்டது.

இலங்கையைப் போல இந்தியா "யுத்த பூமி ஆக வேண்டாம் .அமெரிக்காவைப் போல அல்ட்ரா மாடர்ன் ஆக வேண்டாம் .வளைகுடாக்களைப் போல தீப்பிடித்து எரிய வேண்டாம் ..சீனாவைப் போல மலிவு விலை சாம்ராஜ்ய ஏகபோகத்தில் திளைக்க வேண்டாம் .உலகில் எந்த நாட்டைப் போலவும் இந்தியா ஆக வேண்டிய அவஷியமும் இல்லை. இந்தியா இந்தியாவாகவே இருக்கட்டும்.

வல்ல பாய் படேல் பாடு பட்டு இரும்பு மனம் கொண்டு ஒன்றிணைத்த இந்தியா அப்படியே இருப்பதில் எந்த வித கெடுதலும் இருப்பதாகத் தெரியவில்லை.திபெத்தை தனதாக்கிக் கொண்ட சீனா இன்று அஸ்ஸாமை திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி இந்தியப் எல்லையை சுருக்க தன் மூளையில் குறுக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறதாம்.

பாகிஸ்தானுக்கோ "காஷ்மீரின் " மீது தீராத முரட்டுக் காதல்.ஆந்திராவில் தனித் தெலுங்கான கேட்டு போராட்டம்,இங்கே நினைவு கூறப் பட வேண்டிய விசயங்களில் மற்றுமொன்று உண்டு. திராவிட நாடு கோரிக்கையை " முன் வைத்துப் பிரபலமான திராவிடக் கட்சிகளின் கட்டுப் பாட்டில் தான் தமிழக அரசியல் இன்றும் சிக்கி நிற்கிறது.

அணைந்த கொள்ளி என்று ஆசுவாசம் தேவை இல்லை.கொள்ளிகள் கொழுத்தப் படலாம் ஆட்சி மாறி அதிகாரம் மாறும் ஒரே நாளில் ! கர்நாடகாவில் எதற்கெடுத்தாலும் தமிழர்களே பலியாடுகள்! எதற்காகவும் அவர்கள் தமிழர்களை துன்புறுத்த தயங்கியதே இல்லை...தண்ணீரிலிருந்து தரமான நடிகனின் தள்ளாத வயது சாவு வரை அவன் தட்டி...முட்டி அடக்குவது தங்கத் தமிழனையே.கர்நாடகாவில் வேறு மாநிலத்தவர் எவருமே இல்லையா?

இங்கே கேரளம் மட்டும் சும்மா இருந்து விட்டால் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமாகி விடாதோ?! அவர்கள் பங்கிற்கு "பெரியார் டேம் ...தமிழக ஆறுகளின் மணல் திருட்டுக்கு உடந்தை...இப்படி எதையோ அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.மகாராஷ்ட்ரா (மும்பை) பத்திரிகைகள் சித்தரிக்கும் மும்பை என் போன்ற நடுநிலை வாசிப்பாளர்களுக்கு "தாதாக்களின் உலகம் " என்ற பயங்கரக் கற்பனையையும் அதீதமான அச்சதையுமே உருவாக்கி இருக்கிறது இந்நாள் வரையிலும். அங்கே திரைத்துறையில் இருந்து ...வியாபர காந்தங்கள் வரையில் தாதாக்களுடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படுகிறார்கள்.

அங்கே நிலைமை இப்படி என்றால் "காந்தி பிறந்த மண்ணிலோ " இந்துத்வா வெறி தலை வெறித்து ஆடுகிறது .யார் எதைப் பின்பற்றினால் யாருக்கென்ன ?

இந்து ...முஸ்லீம்...கிறிஸ்த்தவர்கள் ...ஜெயின்கள்...பார்சிகள்...பௌத்தர்கள் மாதங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே "எல்லோரும் மனிதர்கள் தானே" மதங்கள் வெறும் சட்டைகள் என்று படித்த ஞாபகம் வருகிறது.சட்டைகளை மாற்றிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. இங்கே சட்டைகளுக்காக தோலை அல்லவா உரித்துக் கொண்டு உயிரோடு சாகத் துணிந்து விட்டார்கள்.

இருத்தலுக்காக இல்லாது போகத் துணியும் அசகாய சூரத் தனம் எங்கே கற்றார்களோ?! "எல்லாம் மூளைச் சலவை " "வேற்றுமையில் ஒற்றுமை " சொல்லக் கூசுகிறது தான். நாம் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோமா? ஏதோ இருக்கிறோம் என்று விட்டேற்றியாக சொல்லிக் கொண்டால் நலம்."நான்கு பசுக்களும் ஒரு சிங்கமும் "கதையைப் போல ""இந்தியாவை யாரும் துண்டாடி விடாமல் பாதுகாக்க என்ன செய்கிறது நடுவண் அரசு மற்றும் உள்ள 27 மாநில அரசுகள்?

மாநில அரசுகள் தங்களுக்குள் உள்ள வேலிச்சண்டைகளை தீர்க்க முன் வராவிட்டால் நடுவண் அரசு வெளிச்சண்டைகளில் எப்படி கவனம் செலுத்த முடியும்? இங்கே நாம் காவிரிக்காக சண்டை போட்டுக் கொள்ளும் போது அங்கே சீனாக் காரன் அஸ்ஸாமை லவட்டிக் கொண்டு போய் விட்டால் பிறகு அதற்க்கு இன்னொரு பொது சண்டை போட்டுக் கொள்வோம் இராணுவம், எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் .

சுதந்திரம் என்ற பெயரில் "எல்லைக்கோடுகளில் அடைபட்டுக் கொண்டதென்னவோ" அதிகபட்ச புத்திசாலித் தனம் தான். "இது தான் சுதந்திரமா ?கேள்வி எழுப்புபவர் யாராயினும் "ஆமாம் ...இதுவே கட்டுப் பாட்டில் சுதந்திரம்...பாதுகாப்புக்கு முழு உத்திரவாதம் " என்று பட்டென்று பதில் சொல்லி வாயடைக்கலாம்.இப்படி கோடுகளில் அடைபட்டேனும் நிம்மதியாக வாழ விதித்திருக்கிறதே சில காலம் ! அதையும் கெடுத்துக் கொள்வதைப் போல அல்லவா இப்போது காரியங்கள் நிகழ்கின்றன...நிகழ்த்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றன.

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" ரேஞ்சுக்கு தரம் தாழ்ந்து விடத்தான் போகிறோமா ஒருநாள்? இல்லாவிட்டால் அமெரிக்க அண்ணனைப் போல "வல்லரசாகி" தம்மினும் எளியாரை வாட்டி வதைக்கப் போகிறோமா?

மலேசியா மற்றும் தாய்லாந்தின் குப்பைக் கிடங்காக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் மிகச் சுத்தமான நாடு .

மண் வளமே சிறிதும் அற்ற இஸ்ரேல் விவசாயத்தில் பல படி முறைகளை முயற்சித்து தனக்கான தன்னிறைவைப் பெற்று விட்டதென பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன.

நிலாவில் வீடு கட்ட மனை வாங்கி போட்டுக்கிறேன் என்று ஒரு ஆந்திர தொழிலதிபர் பெருமை அடித்துக் கொள்கிறார்.

நிலா (சந்திரன்) யாருக்குச் சொந்தம் என்ற சண்டையும் விரைவில் வரக் கூடும்! ஏனெனில் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் தான் . வியாழனைப் போல 12 நிலாக்கள் இருப்பினும் சர்ச்சை எழும்பத்தான் செய்யும்.இந்த உலகத்தில் தான் ஆசியா...ஆப்பிரிக்கா,ஐரோப்பா,அமேரிக்கா,அட்லாண்டிக் என்று ஐந்து கண்டங்களும்.கண்டங்களில் பலபல தேசங்களும் விரவிச் சிதறி நிற்கின்றனவே!

ஒற்றை நிலா யாருக்குச் சொந்தம்? அடடா...இந்த மானிட சமுதாயம் சர்ச்சைகளில் இருந்தும் சண்டைகளில் இருந்தும் ...விடுபட்டு கடைத்தேற நிஜத்தில் ஒரு வழியும் இல்லை போலத் தான் தெரிகிறது .

தொடரும்... (நிச்சயம் தொடரும்..)

Monday, February 9, 2009

நட்பெனப்படுவது யாதெனில்?



மேகங்கள் அடர்ந்ததோர்

கானகத்தின் ஊடே

யுகம் யுகமாய்

இளைப்பாறல் இன்றி

நெடுந்தூரம் நடக்கையில்

என்றேனும் ஓர் நாள்

சிங்கங்கள் நமக்கு

சிநேகிதமாகலாம் ...!

புலிகள் நமக்கு

புதிர் நீக்கலாம்

யானைகள் நமக்கு

வழித் துணைகளாகலாம்

காட்டிலுள்ள விலங்குகளெல்லாம்

அன்றொரு நாளில்

பழக்கப் பட்டு

வார்த்தைகள் ஏதுமில்லா

வான் வெளியின்

வெற்றிடத்தில்

வசப்படாத இலக்கியமாய்

நட்பை நமக்கே பாடமாக்கி

நட்பெனப் படுவது யாதெனில்

யாதொன்றும் தீமை இலாத சொலல்

என

வார்த்தைகள் கனமிழக்கும்

கண நேர புரிதலில்

நட்புக்குத் தேவை இருப்பதில்லை

மனித...மிருக வித்யாசம்

ஆடும் நண்பனே

மாடும் தோழனே

குழி முயலும்

குட்டிக் குரங்கும்

மயிலும்

குயிலும்

மானும்

மீனும்

ஏன் காக்கையும் ...குருவியும்

ஏன் அசையும் ...அசையாத

எல்லாமே நண்பர்களே !

சும்மாவா சொன்னான் பாரதி

"காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் "

ஆதலின் நட்பெனப் படுவது யாதெனில்

யாதொன்றும் தீமையிலாத சொலல் "