விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை
கனவின் விழிப்பறையில்
காரடர்ந்த இருட்டறையில்
நெடுந்தூர
பயணக் களைப்பில்
நெல் முனையாய்
ஓய்ந்திருந்தால்
சிற்றெறும்புகள் கடித்தன
செவ்வந்திகள் சிணுங்கின
அத்தனையும்
பொதிந்து வைத்தேன்
நினைவின் இழுப்பறையில்
பிறிதொரு நாள் தூசு தட்ட ...!