Monday, January 19, 2009

மை டியர் பாப்பு


சில நாட்களுக்கு முன்பு பாப்பு வரைந்த ஓவியம் இது.
இந்த ஓவியத்தில் இருப்பவர்கள் ...
பாப்புவின் வலது புறம் தேவ் ,இடது புறம் நான்.நடுவில் பாப்புவாம்.
வரைந்து முடித்த பின் அவளே என்னிடம் சொன்னாள்.
எங்களுக்கு மேற்புறம் இருக்கும் படம் என் தம்பியாம்.அதாவது பாப்புவின் மாமா.அவனுடன் அவனது வலது புறம் கண்ணுக்கே தெரியாமல் குட்டியாய் துளியூண்டு ஓவியம் ஒன்று இருக்கிறது கண்களைச் சுருக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும்,
அது பாப்புவின் தம்பியாம்(என் தங்கையின் எட்டு மாத குழந்தை சக்தி தான் அது)அப்புறம் எனக்கும் பாப்புவுக்கும் நடுவில் எங்கள் மூன்று பேருக்கும் தலா மூன்று பூக்களும் வரைந்திருக்கிராளாம்.
தேவ் தலைக்கு மேல் நான்கு கற்களை இணைப்பது போல இருக்கும் படம் என் வளையலாம்!
பாப்பு சொன்னதின் பேரில் இந்த அருமையான ஓவியத்தை நான் வலையில் பதிந்திருக்கிறேன்.
"என் மகள் இவள்" நினைக்கும் போதே எப்போதும் போல் மனம் நிறைவடைகிறது இப்போதும்.

டிஸ்க்கி:- இந்த பெருமை வாய்ந்த ஓவியத்தின் ஒட்டு மொத்த உரிமையும் பாப்புவுக்கு மட்டுமே சொந்தமாம்.

நிறங்களின் ஊடலையும் மனமே...

மௌனத்தின்

சலனத்தோடு

முனை மழுங்கிய

புலன்களின் ஊடே

வழுக்கிக் கொண்டு

சறுக்கும்போது

புள்ளியில் குவிந்த

பெருவெளிச்சத்தின்மத்தியில்

துழாவித்....துழாவி

ஓய்ந்த பின்

எல்லையற்ற நீள்வெளியில்

கருப்பு அழைத்தது

தன்னுள் அமிழ

வெளுப்பு நழுவியது

ஒட்டாமல் வெட்டிக் கொண்டு

கூம்புகளும்

உருளைகளும்

குழம்பித் திகைத்த

ஏதோ ஒரு நொடியில்

குத்தீட்டிகளாய்

பரவிச் சிதறின

பளபளப்பாய் பல நிறங்கள்

நிறங்களின் ஊடலையும் மனமே ...

எந்த நிறம் நல்ல நிறம் ?