Thursday, January 15, 2009

ஸ்டைலு...ஸ்டைலு...தான்;இது சூப்பர் ஸ்டைலு தான்...!


இந்தப் படத்தை நல்லா பார்த்துக்கோங்க முதல்ல ...!
பின்னாடியே ஒரு டெஸ்ட் இருக்கு ...எத்தனை பேர் சரியா ஆன்சர் பண்றீங்கன்னு பார்க்கலாம்?!இது ரவி வர்மா painting அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்,அதில்லை இப்போ கேள்வி;
இந்தப் பதிவை வாசிக்கறவங்க யாரா இருந்தாலும் சரி ,பொறுமையா கீழே பின்தொடரும் எல்லாப் புடவை படங்களையும் பார்த்துட்டு கடைசியா இங்க கேட்கப் படற கேள்விக்கும் சற்றேறக்குறைய சரியான பதிலை சொல்ல ட்ரை பண்ணிட்டுப் போங்க ...எத்தனை பேருக்கு புடவை நாலேட்ஜ் இருக்குன்னு தான் பார்த்துடுவோமே .
சரியான பதில் சொல்றவங்களுக்கு கண்டிப்பா விருது உண்டு,
அதனால எல்லாரும் வந்து கலந்துகிட்டு விருது வாங்கிட்டு போங்க.
ரெடி ...
ஸ்டார்ட் ;



........................;


இது நம்ம பெங்காளிகள் புடவை ஸ்டைல்!
இது அஸ்ஸாமிகள் புடவை கட்டற ஸ்டைல்!


இது தீர்த்தா புடவை கட்டற ஸ்டைல்லாம் !


இது ஒரிஸ்ஸா...

இது மகாராஸ்டிர ஸ்டைல்லாம் ...


இது குஜராத்தி புடவைக்கட்டாமுங்க!
இது கூர்க் இனத்து பெண்கள் புடவை கட்டும் முறையாம்...
இது ராஜபுத்திர பெண்கள் புடவை கட்டும் ஸ்டைல் ...இவங்க புடவையை விட நகைகள் தான் வெயிட் ஜாஸ்தி இருக்கும் போல?


இந்த ஸ்டைல் இலங்கை பாரம்பரிய ஸ்டைல் புடவைக் கட்டாம்.இவங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே இருக்கும்...மதிப்பிற்குரிய இந்த முன்னாள் பிரசிடென்ட் பத்தி தகவல் ஒன்னும் காணோமே இப்போலாம்? ஏன்?

இது மத்திய இந்தியா ஸ்டைல்(தக்காணம்னு கூட சொல்லலாம்! பீகார் தக்காணத்துல சேருமோ?மத்தியப் பிரதேசம்னும் சொல்லலாமுங்க...)


இது ஒரிஜினல் மடிசார்...

இது சினிமா மடிசார்.(ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி தான்...என்ன ஒரு பெர்பெக்சன் பாருங்க?!
நம்ம தமிழ்நாட்டுல புடவை ஸ்டைல் எக்கசக்கமா இருக்கு ,வீட்டுக்கு வீடு ஒரு ஸ்டைல் இல்ல பாலோ பண்ணுவோம் நம்ம எல்லாம்?!பின் கொசுவம்...முன்கொசுவம்...எட்டு ப்ளீட்ஸ்...மடிசார்னு இங்க ஏகப்பட்ட வரைட்டி உண்டே!
இப்போ முதல்ல சொன்ன பாயின்ட்டுக்கே போகலாம் .
இது கேள்வி நேரம் .
முதல்ல பார்த்த ரவி வர்மா படத்துல மொத்தம் பதினோரு பெண்கள் பதினோரு விதமா புடவை கட்டிட்டு இருக்காங்க ...ஓகே இப்போ சொல்லுங்க ,
எந்தப் பெண் எந்த மாநில ஸ்டைல் ல புடவை கட்டி இருக்காங்கனு...யார் யார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவங்கன்னு இதுல இருந்தும் தெரிஞ்சிக்கலாம் இல்லையா?
இதானே நம்ம கலாச்சாரம்"வேற்றுமையில் ஒற்றுமை"
சரி இப்போ எத்தனை பேர் போட்டில கலந்துகிட்டு சரியான பதிலை சொல்லி கலைமாமணி மாதிரி "கலாச்சார மாமணி விருது" வாங்கப் போறீங்கனு பார்க்கலாம்.