Saturday, September 12, 2009

சோத்துக் கடையும் மீனும் ...

வனாந்திரம் ...

நீள் வனாந்தரம்
மரகதக் குன்றுகள்
மாணிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
தகிக்கும் தங்கம் போல்
உரையாடும் மென்இலைகள் ...
அரவமாய் சல சலக்கும்
நிறமற்ற நீரோடை ...
வெள்ளியாய் கிள்ளிப் போட்ட
கண்ணாடி அப்பளமாய்
வானூரும் தண்ணிலா ...
கர்ஜிக்கும் சிங்கங்கள்
கண்களால் மினுக்கும் புலிகள்
நீருருஞ்சும் யானைகள்...
தாழப் பறக்கும் புள்ளினங்கள் ...
தாழை மொட்டவிழ
கம கமக்கும் வனம்.
வனம் ... நீள் வனம் ... வனாந்திரம்
அழகே...!
வனம்
அழகே ..!
கொள்ளை அழகின் கோடி அழகு !!!