Tuesday, November 2, 2010

சம்பவாமி யுகே யுகேவும் மனம் நடுங்க வைத்த சம்பவங்களும் ...



மனம் நடுங்க வைத்த சம்பவம் 1  :


அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் பள்ளி முடிந்து வந்ததும் மாலையில் தினமும் பூ விற்றுக் கொண்டிருந்த  சிறுவன் காளீஸ்வரன் லிப்ட் கதவில் சிக்கி காலில் தொடங்கி உடல் இரண்டாகப் பிளக்கும் வண்ணம் துடிக்க துடிக்க ரணப்பட்டு இறந்துள்ளான் ,இது விபத்தா ? இது விபத்தில் சேர்த்தியா? அலட்சியம் தானே முதல்  காரணம் , லிப்ட் ஆப்பரேட்டர்கள் என்ன ஆனார்கள்? மெயிண்டனன்ஸ் என்ற பெயரில் வீடு ஒன்றிற்கு ரூ 1000  இல் இருந்து 2000  வரை வசூலிக்கும் அபார்ட்மென்ட் அசோசியேசன் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
 
 
சென்னை முழுக்கவும் இப்போதும் பேப்பர் போடுவது, அடுக்குமாடிக் குடிஇருப்புகளில்  பூ விற்பது ,பால் பாக்கெட் போடுவது ,இஸ்திரிக்கு துணிகள் வாங்கிப் போவது, போன்ற வேளைகளில் பெரும்பான்மையும் சிறுவர்களும் சிறுமிகளும் தான் ஈடுபடுத்தப் படுகின்றனர். பீச்சில் ,பார்க்கில் சுண்டல் விற்கும் சிறுவர்களே இல்லை எனும் நிலையை  முற்றிலுமாக ஏற்படுத்த  முடியவில்லையே அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் சிறுவர் நல மேம்பாட்டுத் துறையினரால்.


 மனம்நடுங்க வைத்த  சம்பவம் 2  :

 
கோவை ஜெயின் சமூகத்து குழந்தைகள் இருவர் வழக்கமாகப் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பிசாசு பிடித்த மிருகங்கள் அந்தப் பெண் குழந்தையை  பலாத்காரம் செய்திருக்கின்றனர் .விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள  குற்றவாளிகளுக்கு மேல் விசாரணை தேவையா கல்லால் அடித்தே கொன்றால் என்ன?
 
"பரித்ராணாய ஸாதூனாம்  விநாசாய ஷதுஸ்க்ருதாம் 
தர்ம  சம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே "-
 
எங்கே போனார்கள் நம் கடவுளர்கள்?!
 
அந்தச் செய்தியை வாசித்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.  இயலாமை மிகுந்த கோபத்தில்  உலகில் எங்கெலாம் விவரம் அறியா சிறுவர்கள், சிறுமிகள் பலவந்தப் படுத்தப் படுகிறார்களோ ,அட்லீஸ்ட் அப்போதேனும் அங்கேனும் கிருஷ்ணா பரமாத்மா ஏன் வந்து காப்பாற்றாமல் போனார்?! என்று லூசுத்தனமான சிந்தனை எல்லாம் வந்து போனது.
 
அவசியமோ இல்லையோ தினமும் வேனிலும் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்குப் போய்வரும் குழந்தைகளிடம் இரவில்  தூங்கப்  போகும் முன் பள்ளியிலும் வேனிலும் நிகழ்ந்த  அன்றைய சம்பவங்களை பேச்சு வாக்கில் விசாரித்து வைப்பதே ஆரோக்கியமானது,சில நேரங்களில் பெற்றோர் குழந்தைகள் தாமாக சொல்ல வருவதைக் கூட கேட்டுக் கொள்ள விரும்பாமல் அவர்களை சாப்பிட வைப்பதிலும் தூங்க வைப்பதிலும் வீட்டுபாடம் முடிக்க வைப்பதிலும் தான் முனைப்பாக இருக்கிறோம்.சிறுவர்களுக்கெதிரான பல அநீதிகளின் ஆணி வேர்  இது தான். இங்கிருந்தே ஆரம்பமாகிறது நம் குழந்தைகளுக்கு எதிரான செயற்பாடுகள். குழந்தைகள் தமது சந்தேகங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு பெற்றவர்களைக் காட்டிலும் நம்பிக்கைக்குரிய நபர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.
 
இந்த அவசர யுகத்தில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்,எல்லாம் ஒரு வினாடி செய்தியாக ப்ளாஷ் நியூசில் மின்னி மறைந்து விடும். பாதிக்கப் பட்டவர்கள் காலத்திற்கும் அழுது கரைய வேண்டியது தான்.அதனால் எங்கும் எப்போதும்  குழந்தைகளைப் பொறுத்தவரை  அதிக பட்சம் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றே நம்மால் ஆகக் கூடிய காரியம். வேறு என்ன சொல்வதாக இருந்தாலும் அதில் அர்த்தமிருக்கப் போவதில்லை.
 
:((


டிஸ்கோ பாவாடை...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.


கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .



டிஸ்கோ பாவாடை ...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.

கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .




டிஸ்கோ பாவாடை ...



தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.


செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.

கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .

பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.

தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.

ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்

போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.


காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.

போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.

பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.

ங்கே விட்டேன் ?



ம்ம்..டிஸ்கோ பாவாடை;


பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.



தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.



சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!

தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.

"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "

"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "

"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."

அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு


"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "

என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.

மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.

பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)

நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.

"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)

தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!

அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!

தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!

இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.

தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,

இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .


தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .

தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.



தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,

தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.



தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .



யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?

வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!

அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.

கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .




Hand made in india - (நூல் அறிமுகம்)




ஓவியர் பெனிட்டா  -    தனது நண்பர் வீட்டில்  பார்த்த  "Handmade  in  india " என்ற புத்தகம் பற்றி சென்ற வார விகனில் 'வாங்கிய பொருள்' எனும் தலைப்பில் கூறி இருந்தார்.
 
சிலைக்கு சுவாமி மலை பிரசித்தி என்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும்,அப்படி இந்தியா முழுதும் பாரம்பரிய முக்கியத்துவம் உள்ள பொருட்களை,அந்தப் பொருட்களுக்கான பூர்வீக இடங்களில் எப்படித் தயாரிக்கிறார்கள்,அவை எங்கெங்கே கிடைக்கும் என்ற வரைபடங்களுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கிறதாம் .
 
புத்தகத்தின் விலை  ரூ 3 ,700 .
 
அந்தப் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படித்த பிறகு தான் தன்னால் அடுத்த வேலையைப் பார்க்க முடிந்ததென்று பெனிட்டா கூறி இருந்தார், அவர் கூறி இருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கும் கூட அந்தப் புத்தகத்தை உடனே வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமிருக்கிறது தான். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வாங்கப் போகும் மொத்தப் புத்தகங்களின் அடக்க விலையே 1500  க்கு மேல் தாண்டக் கூடாதென்று கடந்த பல நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்யலாம்?!
 
"சொல்வதைக் கேள் மனமே கேள்.  வேண்டாம் இந்தப் புத்தக ஆசை " என்று எஸ்கேப் ஆக வேண்டியது தான்.
 
முதலில் இந்தப் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கும் எனத் தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம் . மிகப் பயனுள்ள சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.