Monday, November 8, 2010

அவஸ்தைகள் இலவசம் ...( கவிதை )






பின்னலில் இட்ட பூ கொதித்துக் கசங்க

ஜன்னல்  வழி பாயும் வெருகாய் 

தாவிப் பறந்திட்ட துன்பக் கேணி; 

இட்டமிலா தெய்வச் சடங்காய்

இன்னமும் உச்சித் திலகம் 

பட்டுத் தெறிக்கும் விழியெலாம் 

கானல் நீர் அமிலக் கரைசல் ;

மின்னட்டாம் பூச்சியாய் தூரத்தே

சிணுங்கும் கொலுசொலி ...

சிந்தூர சந்தன வாசம் 

ஊடற்பொழுதாயினும்,

கூடற்பொழுதாயினும், 

யாதொன்றும் பிடிபடா திக்கில்

செப்பிடு வித்தையாய்
 
செவ்வாய்க்குப் பின் சங்கில் 

அடைக்குமோர் மென்பந்து

அவஸ்தைகள் இலவசம் ;

பொருள் வழிப்  பிரியினும்

பகை வழிப் பிரியினும்

விதி வழிப் பிரியினும்

பிரிவு பிரிந்தோர் மாட்டே ...