Wednesday, June 23, 2010

கனகாம்பரம்

அம்பாரமாய் கனத்துக் கிடந்தது
முப்பது கடந்த கன்னி மனது
கல்யாணம் இல்லை தேவை
கல் கரைக்கும் மனிதர்கள்
பேச்சு கேளாத தூரம் செல்ல
நடக்கத் தொடங்கும் போதே
கடந்து நகர்கின்றன கல்யாண மண்டபங்களும்
மல்லி முல்லை சம்பங்கியுடன் கலந்த
கனகாம்பாரக் கடைகளும் ;
அப்போதும்
இப்போதும்
அம்பாரமாய் கனத்து கிடந்தது
எதையும்
கடக்கவியலா கன்னி மனது ;