Monday, April 13, 2009

வாழ்க்கையே லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!

தொல்காப்பியமும்
நன்னூலும்
அஃறிணையென்று விதித்த
நாயும் பசுவும்
எஜமான விசுவாசம் கொண்டு
பகுத்தறிந்தே வாழ்கின்றன ...
நாயோடும் ,பசுவோடும்
பழகியவர் சொல்லக் கேட்டேன் ;
சிந்தித்தல்
ஆறாவது அறிவென்றால்
இது என்ன?
பழக்க தோசமா ?!
அனிச்சை செயலா ?
நாயும் ... பசுவும்
உயர்தினையென்றால்
இலக்கணம் தவறா ?!
திணை மயக்கமா ?!
வாழ்க்கையே ...
லாஜிக் இல்லா மேஜிக் தானோ?!