Friday, January 9, 2009

அழகர்சாமியும்...குதிரையும் ...!



ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!


உலராத பொழுதுகள் :-
கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !
மண்
உதிர்த்து
அலை நனைக்கும்
கால்களுக்கு
துயரம்
உதிர்த்து
உலர்ந்த மனம் பெற
கடற்கரையின்
உலராத பொழுதுகளில்
நிச்சயம்
தெரிந்தே இருந்திருக்கும் ???

இருளின் வெளிச்சத்தில்...


வெளிச்சத்திற்காகக்
காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!

குறிப்பு:- இது கூட மீள் பதிவு தானுங்க,