Tuesday, November 18, 2008

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதையும் ...நாங்க போட்ட சூப்பர் திட்டமும்(திட்டம் தீட்டுற வயசா அது?இது இந்த வார டைட்டில் டவுட்

நாங்கள் போட்ட திட்டம் :-இந்த திட்டம் தீட்டிய போது சர்வ நிச்சயமாக நான் ரெண்டாப்பு(இரண்டாம் வகுப்பு) தான் படித்துக் கொண்டிருந்தேன்,மிஞ்சிப் போனால் என்ன ஒரு ஒரு ஆறு வயசு இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்!திட்டம் தீட்டும் வயசா அது ?ஆனால் நான் இல்லை ...இல்லை நாங்கள் ஒரு குரூப் ஐந்தாறு குழந்தைகள்(அட என்னப்பா ஆறு வயசுனா அது குழந்தைப் பருவம் தான்!) ஒன்று சேர்ந்து நாக ரத்தினத்தை நாகப் பாம்பிற்க்குத் தெரியாமல் காட்டுக்குள் போய் எப்பாடு பட்டாவது கவர்ந்து கொண்டு வந்தே தீருவது என்று ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத் தட்ட ஒரு வார காலமாகப் பெருசாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம் .எல்லாவற்றிற்கும் காரணமே இந்த ஒன்னாப்பு (ஒன்றாம் வகுப்பு) வாத்தியார் தான் ,அவரை நாங்கள் மட்டும் அல்ல ஊரே கதை வாத்தியார் என்று தான் அழைத்தது,அவர் பாடம் எதுவும் எடுத்ததாக எனக்கு ஞாபகமே இல்லை,எப்போதும் கதை தான் சொல்வார்.நிறைய....நிறையக் கதைகள் சொல்வார்(தன் கற்பனையையும் சேர்த்து ...தான்)அப்படி அவர் அறிமுகப் படுத்தி வைத்தவை தான் பாட்டி விக்ரமாதித்தன் கதைநல்லதங்காள் கதைகண்ணகி கோவலன் கதைபோஜ ராஜன் கதை(இது இப்போது மறந்து விட்டது தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் தேவலை ...)கண்ணப்பர் கதை வள்ளி கல்யாணம் அப்புறம் ஒரு கீரிப்பிள்ளை கதையைக் கூட அடிக்கடி சொல்வார் இது கண்ணகி கோவலன் கதையில் வரும் ஒரு கிளைக்கதை ,ஆனாலும் ரொம்ப நல்ல கதை .இவ்வளவு நாட்களின் பின்னும் மறக்கவே இல்லை எனக்கு ,தெருவில் என்றாவது மோடி வித்தைக் காரன் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை என்று சொல்லி மேளம் அடித்தால் உடனே எனக்கு ஞாபகம் வருவது ஒன்னாப்பு வாத்தியாரும் அவர் சொன்ன கீரிப்பிள்ளை கதையும் தான்.இது வரை நேரில் நான் கீரியும் பாம்பும் சண்டை இட்டு பார்த்ததே இல்லை ஆனாலும் ரெண்டாப்பு படிக்கும் போது எப்போதெல்லாம் எங்கள் கிளாஸ் வாத்தியார் லீவோ ..! எப்போதெல்லாம் ஒன்னாப்பு வாத்தியார் எங்களைப் பார்த்துக் கொள்ள ஹெட்-மாஸ்டரால் அனுப்பப் படுகிறாரோ அப்போதெல்லாம் நாங்கள் அவரிடம் வேண்டி விரும்பி முதலில் கேட்பது இந்தக் கீரிப்பிள்ளை கதையைத்தான்.சொல்லப் போனால் நாங்கள் அப்போதெல்லாம் வாரம் ஒரு தடவையாச்சும் பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை நேரில் பார்த்தோம் ஒன்னாப்பு வாத்தியாரின் வாய் வழியே ...!அவ்வளவு தத்ரூபமாக கதை சொல்ல அடித்துச் சொல்கிறேன் இன்றைக்கு யாருமே இல்லை என்று .(அந்தக் கீரிப்பிள்ளை கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்)இப்போது எங்கள் திட்டத்தைப் பார்ப்போம்.எதையுமே நேரில் கண்பது போலவே விவரிக்கத் தெரிந்த அந்த ஒன்னாப்பு வாத்தியார் எல்லாக் கதையையும் போலவே நாகரத்தினக் கதையையும் எங்களுக்கு ஒரு பின் மத்தியான வகுப்பில் சொன்னார்,அதாகப் பட்டது நாகரத்தினம் என்பது வைர...வைடூரியங்களைக் காட்டிலும் மிக விலை உயர்ந்ததாம் (அப்படியா ...மக்களே !!!)இங்கே ஒரு டவுட் நோட் செய்து கொள்ளுங்கள் நாகரத்தினம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்ன?அப்போதெல்லாம் ஆறு வயதில் இந்த டவுட் வரவில்லை.அந்த நாகரத்தினத்தை வைத்து தான் அந்தப் பாம்பு இரை தேடுமாம் .பாம்புக்கு ராத்திரியில் பொதுவாக கண் தெரியாதுடவுட் நம்பர் டூ :-(யாருக்குத் தான் ராத்திரியில் விளக்கில்லாமல் கண் தெரியக் கூடும்?)அதனால் அது தனது தொண்டையில் இருக்கும் நாகரத்தினத்தை இரை தேடும் இடத்தில் கக்கி விட்டு அந்த வெளிச்சத்தில் இரை ஏதாவது சிக்குமா என்று தேடுமாம் (எல்லாம் வாத்தியார் சொன்னது தான் )அந்த நேரம் யாராவது (நோட் திஸ் பாயிண்ட் நண்பர்களே)நாகரத்தினத்தை பாம்பிடமிருந்து அபகரிக்க வேண்டுமென நினைத்தால் அவர்கள் மகா புத்திசாலிகளாக இருக்க வேண்டுமாம் . முதலில் தைரியம் ரொம்பத் தேவை .நாடு இரவில் தான் பாம்பு காட்டில் இரை தேடுமாம் .(இங்கே ஒரு டவுட்)டவுட் நம்பர் த்ரீ:-மத்த நேரமெல்லாம் பாம்புக்குப் பசிக்காதா?தப்பித் தவறி இந்த டவுட் ஐ கேட்ட சில புத்திசாலி குழந்தைகளுக்கு(ஹி..ஹி...ஹி...அப்போ நாங்கலாம் குழந்தைங்க தான...!!!) வாத்தியார் சொன்ன கலப்படமில்லாத காமெடி பதில் என்ன தெரியுமா?"கதைக்கு காலுண்டா ...உங்க அப்பனுக்கு வாலுண்டா?" எனக்கு தெரியாது சார் என்று சொன்னால் போதும் ...இதுக்கே உனக்கு பதில் தெரியலை ...பேசாம உட்கார் கதையக் கேளு....கதையக் கேளு என்றே ஒவ்வொரு வகுப்பையும் ஓட்டோ ..ஒட்டென்று ஓட்டியே விடுவார் .இப்படியாப் பட்ட ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன மீதிகதையைக் கேட்டு தான் நாங்கள் அம்மாம் பெரிய திட்டத்தை தீட்டிக் கொண்டு காத்திருந்தோம் .நாங்கள் என்றால் நாங்க நாலு பேர் (அழகேசன்,ரங்கா,கார்த்தி,ருக்கு)வாத்தியார் சில டெக்னிக்குகள் சொல்லி இருந்தார் இல்லையா நாகரத்தினத்தை ஹீரோ எப்படி எல்லாம் அதனிடம் இருந்து திருடிக் கொண்டு போனார் என்று (அதிக பட்சம் வாத்தியாருக்கு கதை ஹீரோவாக கோவலனோ...விக்ரமாதித்தனோ,போஜராஜனோ தான் கிடைப்பார்கள்)மூன்று போரையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு புதுசு புதுசாகக் கதை சொல்வதில அவர் தான் கில்லாடி நம்பர் ஒன் ஆச்சே? அப்படி அவர் சொன்ன ஒரு கதையில் ஹீரோ விக்ரமாதித்தன் (எங்களுக்கு) உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம்(ரஜினி,விஜய்,அஜீத்,சூர்யா...!!!)நாகத்தை(அதான் பாம்பை ஏமாற்றி நாகரத்தினத்தை எடுக்க(திருட) ஒரு பையில் சாணி(கெட்டிச் சாணி) எடுத்துக் கொள்கிறார் முதல் வேலையாக,பிறகு ஒரு டார்ச் லைட் இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம் ? பாம்புக்கு ராத்திரியில் கண் தெரியாது ...அதுவே நாகரத்தினத்தை கக்கி அது தரும் ஒளி வெளிச்சத்தில் தான் இரை தேடிக் கொண்டு இருக்கும் ,அப்படியானால் பாம்பை ஏமாற்ற முதலில் நாகரத்தினத்தின் ஒளியைத் தடுத்தே ஆக வேண்டும்.ஆனால் பாம்புக்குப் பக்கத்தில் போக முடியுமா? அதான் தூர இருந்தே குறி பார்த்து கெட்டிச் சாணியை சரியாக வீசி எறிந்து நாகரத்தினத்தை சாணி மூடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ,இல்லாவிட்டால் கதை கந்தல் பாம்பு ஹீரோவைப் பார்த்து விடக் கூடும்.அதற்குத் தான் கெட்டிச் சாணி...அப்புறம் டார்ச் லைட் எதற்கு என்று கேள்வி வரும்? அதற்கும் பதில் இருக்கிறது , அதாகப் பட்டது வெளிச்சம் வர வைக்கும் நாக ரத்தினத்தை சாணி மூடி விட்டால் ஹீரோ (எங்கள் திட்டப் படி நாங்கள்) கண் தெரியாமல் எப்படி அதைப் போய் பாம்புக்கு அகப் படமால் நைசாக நழுவி எடுத்துக் கொண்டு ஓட முடியும் ?அதான் டார்ச் லைட் ...அதை எரிய விட்டு ரத்தினத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட வேண்டும் .பாம்புக்கு கண் வேண்டுமானால் தெரியாது ஆனால் காது கேட்கக் கூடுமே(விஞ்ஞானிகள் கூற்றுப் படி பாப்புக்கு காது கேட்காதாம் ஆனால் அப்போது எங்களுக்கு இதெல்லாம் தெரியாதே ...ஏனென்றால் அப்போதெல்லாம் நாங்கள் தான் குழந்தைகள் ஆச்சுதே!!!)அப்படி காது கேட்டு பாம்பு எங்களைத் துரத்தினால் யாரும் மறந்து போய்க் கூட நேராக மட்டும் ஓடி விடக் கூடாது...கூடவே கூடாது ,வளைந்து வளைந்து பாம்பு போலவே ஊட வேண்டும் அப்போது தான் பாம்பால் நம்மை வேகமாகத் துரத்த முடியாமல் போகும்,இது நிரூபிக்கப் பட்ட உண்மையா? என்றெல்லாம் தெரியாது என்னவோ வாத்தியார் சொன்னார் (இப்போது கூட ஒருவேளை... பாம்பு துரத்தினால்(கனவில் தான் ..நம்புங்க ...ப்ளீஸ் ) நாங்கள் வளைந்து வளைந்து தான் ஓடுவோம் .நீங்களும் அப்படியே ட்ரை பண்ணி பாருங்களேன் (பாம்பு துரத்தினால் மட்டும்).டவுட் நம்பர் ஃபோர்:-இதுவரை பாம்பு மனிதர்களை கதைகளைத் தவிர நிஜத்தில் எப்போதாவது துரத்தி இருக்கிறதா?சரி இப்போது சொல்லி முடித்து விடுகிறேன் எங்கள் நால்வர் அணியின் திட்டத்தை ,ஒரு வழியாக முடிவுக்கு வந்தே விட்டோம்,(நான் எங்கள் திட்டத்தை தான் சொல்கிறேன்)அதாவது அழகேசன் அவனது தாத்தா வீட்டு மாட்டுத் தொழுவத்தில் இருந்து கெட்டிச் சாணி எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டான் (அதற்கான பிளாஸ்டிக் பை கூட அவனே கொண்டு வந்து விடுவதாக பெருந்தன்மையாகச் சொல்லி விட்டான் ,ரங்கா சும்மா பாதுகாப்புக்கு கையில் இருக்காட்டுமே என்று அவள் வீட்டு அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி நம்பிக்கை ஊட்டி விட்டாள், கார்த்தி தான் டார்ச் லைட் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கட் அண்ட் ரைட் ஆக சொல்லி விட்டோம்(அவன் தான் கொஞ்சம் கேணை எங்கள் குரூப் இல்) வேறு யார் வீட்டில் டார்ச் லைட் எடுத்துப் போக விடுவார்களாம்? அப்புறம் ருக்கு ரொம்பவே பெருந்தன்மையாக எங்களை எல்லாம் வழிநடத்தி அதாகப் பட்டது எங்களை அதட்டி உருட்டிக் சட்டாம் பிள்ளைத் தனம் செய்து எங்களை அதிகாரம் செய்து ஒருவேளை நாகரத்தினம் கிடைத்தல் அதில் பெரும்பங்கு எடுத்துக் கொள்ளும் நல்ல(கெட்ட) நோக்கத்தோடு வர ஒத்துக் கொண்டாள்.இதோ இன்னும் ஒருநாள் இருக்கிறது !!!நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?அஸ்க்கு புஸ்க்கு ...இப்பவே சொல்லிட்ட த்ரில் போயிடும்ல?அடுத்த பதிவு போட மேட்டர் வேணாமா ?
கொஞ்சம் பொறுங்க வில் பி பேக் சூன் ...!