Thursday, January 29, 2009

பொன்னியின் செல்வன் ரசிக சிகாமணிகளுக்கு சமர்ப்பணம்

அது ஒரு நாவலாக இருக்கட்டும் அல்லது சிறுகதையாக இருக்கட்டும் வாசிக்கும் போதே அதன் கேரக்டர்களோடு நாம் மனதளவில் நெருங்கி விடுவோம்,சில கேரக்டர்கள் சட்டென்று தோழமை ஆகி மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும் ...

சில கேரக்டர்கள் வெறுப்பைத் தரும் ...வெகு சில பிரமிப்பைத் தரும்...இன்னும் சில கேரக்டர்கள் பிரமிப்பைத் தந்து அவர்களைப் பின்பற்றலாம் என்ற உணர்வைத் தரும் .சில கேரக்டர்கள் ரொம்பவே புத்திசாலித்தனத்துடன் வந்து நம்மை சபாஷ் போட வைக்கும்.

சில அனுதாபப் பட வைக்கும் ...சில கேரக்டர்கள் வெடித்துச் சிரிக்க வைக்கும் .சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது ;

பொன்னியின் செல்வன் நாவல் வாசித்து அதன் ரசிக சிகாமணிகளானவர்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன் .பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் இப்போதைக்கு பீல்டில் இருக்கும் எந்தெந்த நடிகர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் பொருந்துவார்கள் என்ற கற்பனை தான் இந்தப் பதிவு .

படிச்சிட்டு திட்றவங்க திட்டுங்கோ உங்களுக்குள்ள ....!

பாராட்றவங்க எல்லாம் பாராட்டுங்கோ எல்லாருக்கும் தெரியறாப்பில?!

போலாமா ...பதிவுக்கு தாங்க !

சரி முதல்ல கேரக்டர்களை வரிசைப் படுத்தலாம் .

  1. வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )
  2. குந்தவை ரம்யாகிருஷ்ணன்
  3. நந்தினி ஐஸ்வர்யா ராய்
  4. அருண் மொழி பிரபாஸ் (தெலுகு ஹீரோ )
  5. வானதி சரண்யா மோகன் (பாலக்காட்டு மோகினி)
  6. அமுதன் பரத்
  7. பூங்குழலி பிரியாமணி
  8. மணிமேகலை அசின் ;அசின் கிடைக்கலைனா மீரா ஜாஸ்மின்
  9. சுந்தர சோழர் அவினாஷ் (சந்திரமுகில சாமியாரா வருவாரே அவரு தான்)
  10. வானவன் மாதேவி ஜெயந்தி
  11. வீர பாண்டியன் - நெப்போலியன்
  12. செம்பியன் மாதேவி - லக்ஷ்மி
  13. கண்டராதித்தர் - விஜய குமார்
  14. மலையமான் -
  15. பெரிய பழுவேட்டரையர் -சத்யராஜ்
  16. சின்ன பழுவேட்டரையர் - சரத் குமார்
  17. மந்தாகினி(ஊமை ராணி) - சுஜாதா
  18. மதுராந்தகன் - சரத்பாபு (அப்பாஸ் கூட ஓகே தான் ஆனால் குந்தவைக்கு சித்தப்பானா கொஞ்சம் இடிக்கும் அதான் சரத்பாபுகாரு )
  19. அநிருத்த பிரம்மராயர் - மோகன்லால்
  20. ஆழ்வார்க்கடியான் - பிரகாஷ் ராஜ் இல்லனா அவர் சகலை ஸ்ரீஹரி நல்லா பொருந்துமோ!
  21. ஆதித்த கரிகாலன் விஷால்
  22. கந்தமாறன் ஸ்ரீமன்
  23. பார்த்திபேந்திரன் கரண்
  24. ரவிதாசன் அப்பாஸ்
  25. குடந்தை சோதிடர்- டெல்லி கணேஷ் (வேற யாருங்க பொருந்துவாங்க இந்த கேரக்டருக்கு?)
  26. கடம்பூர் சம்புவரையர் ராதாரவி
  27. கோடியக்கரை பூங்குழலியின் அப்பா - நாசர்
  28. சேந்தன் அமுதனின் தாய் சாந்தி கிருஷ்ணா (பன்னீர் புஷ்பங்கல்ல வருவாங்க இல்ல அவங்க தான் )

இதுக்கு மேலயும் கல்கி அதுல நிறைய கேரக்டர்ஸ் உலவ விட்ருக்கார்...அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் ...இதுவரைக்கும் சொன்ன கேரக்டர்ஸ் பத்தி யோசிச்சு பாருங்க...

கொஞ்சம் பொருந்தலாம் .

உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !