Thursday, February 25, 2010

தசையினை தீ சுடினும் ...

எதிலோ புதைந்து போனதை எங்கோ தேடி விட்டு
கனவிலிருந்து விழித்தெழுகையில்
தீராத் தேடல்
திகைப்பூண்டாய்
தகை கொள்ளும் நினைவுகள்
தசையினைத் தீ சுடினும்
கண்ணம்மா
நீ தெரிந்து கொள் ;
தேம்பாவணி முற்றத்தில்
கலம்பகம் கை அள்ளி
குறவஞ்சி கொஞ்சியோட
அகமும் புறமும்
பழமொழி பேச
சூளாமணியோடு சிந்தாமணி போல
அந்தாதி பாடும் அபிராமி
ஜன்னல் வழித் தெரியும்
என் அடுத்த வீட்டுப் பெண்;
எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்.