Wednesday, August 5, 2009

நடுகற்கள் ஆயினவே எல்லைக் கற்கள் ...?!

கடக்கும் பாதைகள்
ஓர் நாள்
பேசத் தொடங்கினவாம்
கடந்து போனவர்களைப் பற்றி ;
அதில் மாண்டவர்களும் உண்டோ?
மீண்டவர்கள் மட்டுமா ?
கேள்விகள் கேட்டனவாம்
எல்லைக் கற்கள் ;
பூவும்
பிஞ்சும்
காயும்
கனியும்
உதிரும் சருகும்
யாவும் ஒன்றே
கடத்தல் ஒரு செயல்
கடப்பது திண்ணம்
மாள்வதும் மீள்வதும்
கணக்கில் ஒன்றே
கணக்கான கணக்கு
கொக்கரித்தன பாதைகள்
நடுகற்கள் ஆயின எல்லை கற்கள்...
கடப்போம்
யாவரும்
என்றேனும் ஒருநாள்?!