Thursday, September 22, 2011

ஒரே கடல் (மூவி ரெவ்யூ)

Movie link :

http://www.bharatmovies.com/tamil/watch/ore-kadal-movie-online.htm

படம் - ஒரே கடல்
காஸ்டிங் -மம்முட்டி(நாதன்) மீரா ஜாஸ்மின் (தீப்தி ) பெல்லா (ரம்யா)நரேன் (தீப்தியின் கணவன் )
வெளிவந்த ஆண்டு -2007

Over to the movie ...

அந்தக் குழந்தைகள் பதைபதைக்க வைக்கிறார்கள் .
அம்மாவின் காதல் அவர்களுக்குப் புரியும் காலம் வரலாம் வராமலும் போகலாம்.

படத்தில் பெல்லா இப்படி ஆனதற்கு காரணங்கள் ,தீப்தி இப்படியானதற்குகாரணங்கள் ,நாதன் இப்படியானதற்கு காரணங்கள் இன்னின்ன சம்பவங்களாலும்வசனங்களாலும் விளக்கப்படுகின்றன,இவர்களது வாழ்க்கை நியாயங்களை உணரமுடிந்தும் குழந்தைகள் நெருடிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்குப் பெயர்செண்டிமெண்ட் என்றால் ,அதைத் தாண்டி வர முடியாமை தான் மிடில் கிளாஸ்மனநிலை.//மிடில் கிளாஸ் ஃபனிஷ்மென்ட் என்றும் சொல்லிக் கொள்ளலாம்//

உள்ளுணர்வின் உந்துதலாய் நாதன் தீப்திக்கு ஒருமுறை உதவுகிறான், தொடர்ந்துதீப்தி தன் கணவனுக்கு வேலை வேண்டுமென்பதற்காக நாதனிடம் உதவி கேட்டுச்செல்கிறாள்,கவனியுங்கள் இதற்குப் பெயர் யாசிப்பில்லை,உதவி மட்டுமே.அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது ,அவளுக்கும் அவனிடத்தில் பெற்றுக்கொண்ட உதவிக்கான நல்லெண்ணத்தினால் ஏற்படும் நன்றியுணர்வு பிரமிப்பாகி,பிரமிப்பே காதலாக மாறுகிறது ,அவனால் தன் குடும்பத்தின் தற்போதைய சூழலைமாற்றி அமைக்க முடியும் எனும் நம்பிக்கை அவளை வீழ்த்துகிறது ,அவள்வீழ்கிறாள்.

வீழ்ந்தாலும் தனக்கென ஒரு தாங்கு கட்டையை இடைவிடாது கோரிக் கொண்டேஇருக்கும் ஊனமுற்ற மனம் அவளை நிம்மதி இழக்கச் செய்து கொண்டே இருக்கிறது .நாதனுடனான உறவை நியாயப் படுத்திக் கொள்ள அவள் தன்னோடு தானே போராடும்நிலை ,அவனுடனான அவளது பொழுதுகள் அவள் மனதிற்கு மிக நெருக்கமானவையாகிகணவனைத் தூர நிறுத்தத் துணிகிறது. இந்நிலை அவளை குற்ற உணர்வில்தள்ளுகிறது .

எல்லாமும் மனைவி பார்த்துக் கொள்வாள் ,எந்தச் சூழலையும் அவள் பொறுத்துக்கொள்வாள்,அது அவளது கடமையும் கூட என்றென்னும் கணவனாக நரேன் .பார்க்கப்பரிதாபமாக இருக்கிறது திரையில் .அவன் எதையும் அறிந்தவனில்லை .கடமையுணர்வுமிக்க கணவனாக தன் கேரக்டரை சரியாகச் செய்து முடித்து விட்டு ஒதுங்கும்அளவுக்கே முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.அப்பாவி என்றுதீப்தியால் சொல்லப் படக் காரணம் அவன் தன் மனைவியின் காதலை அறிய நேரவில்லைஎன்பதனால் மட்டுமே என்பதை இங்கு கவனத்தில் கொள்தல் நலம் .

அவன் தன் மனைவி மனநல விடுதியில் இருந்து மீண்டு வந்தால் போதும் எனஏற்றுக் கொள்ளும் அளவில் பெருந்தன்மை கொண்டவனாகவே இருக்கிறான். மனைவியின்காதலையும் அவ்விதம் ஏற்றுக் கொள்வான் என நம்ப முடியாதே. தீப்தி நாதனோடுஇணைவதாக படம் முடிகிறது .அவளது கணவன் என்னவானான் என்னவாகிறான்?! எனும்யோசனையை எளிதில் கடக்க முடியவில்லை ,இவனது நிலை என்ன ? தன் மனைவியின்தேடலை உணர்ந்து கொண்டு இவன் அவர்களை அணுசரித்துப் போவான் என நம்புவதுபேதமை .போகலாம் போகாமலும் இருக்கலாம்,நெருங்கி முட்கள் தூவப் பட்டஎப்படியும் இருக்கலாம் நிகழ்வுகள் .தீப்திக்கு இவனைப் பிரிவதற்கோதவிர்பதற்கோ எவ்வித நியாயங்களும் காட்சிப் படுத்தப் படவில்லை படத்தில்.ஒரு மனைவி தன் கணவனைப் பிரிவதற்கு அவன் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கணவன்எனும் சொத்தைக் காரணம் மட்டுமே போதாது தானே !

படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.உறவுகளால்,பந்தங்களால் பாதிக்கப்படாதவன் என படம் முழுக்க சதா தன்னைபிரகடனப் படுத்திக் கொண்டே இருக்கும் நாதனுக்கும் தனக்கே தனக்கான பேரன்புதேவைப் பட்டிருக்கிறது,தீப்திக்கும் தேவைப்பட்டிருக்கிறது ,சந்தர்பங்கள்அவர்களை இணைக்கிறது ...அவர்கள் இணைகிறார்கள் .தடைகள் எனக் கருதப்படும்(கணவன்,குழந்தைகள் இத்யாதி இத்யாதி )மற்றெல்லா காரணங்களும் இந்தபேரன்பின் பின்னணியில் நீர்த்துப் போகின்றன.

பல கடல்களைக் கடந்து பல நாடுகளுக்கும் பயணப்பட்ட நாதன் கடைசியில் ஒரேகடலில் சங்கமித்து உறைவதாய் கதை முடிகிறது .அதற்குப் பிறகு தான் கதைதொடங்குகிறதோ என்ற கேள்வி எழத்தான் செய்யும் .கேள்விகளை சேமித்து நாமும்அந்த ஒரே கடலில் விட்டெறியலாம்.அதிகம் சிந்திப்பது ஆத்மாவுக்கு நல்லதல்லஎன்பதால் :)))

தீப்தியை புரிந்து கொள்ள முடிகிறது ...
நாதனைப் புரிந்து கொள்ள முடிகிறது ...
தீப்தியின் கணவனைப் புரிந்து கொள்ளலாம் ;
பெல்லாவையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும் .

ஆனால் இந்தக் குழந்தைகளை என்ன செய்வது !

அவர்களுக்கு என்று கேள்விகள் விருப்பங்கள் ,வெறுப்புகள்,ஆட்சேபங்கள் இருக்காதோ ?!!!

ஒரே கடல் தீப்தியைக் காட்டிலும் வாடிக் கசங்கிய முகத்துடன் தேம்பலோடு தன்அம்மாவைத் தேடி மாடிப்படிகளை கடந்து வரும் அந்த குட்டிப் பெண் அதிகமும்பாதிக்கிறாள்.

//எனக்கு யாருமே இல்ல //

என்ற குற்றச்சாட்டோடு இன்னொரு தீப்தி உருவாக்கப் படுகிறாளோ என்ற மெல்லியஅச்சம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

ஒரு மனைவி இரு கணவர்கள் என்பதை வீம்புக்கேனும் //ஆம் வீம்புக்கு தான்//இந்தியக் கலாச்சாரம் வெளிப்படையாய் ஏற்காதே .

உளவியல் சிக்கல்களை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதென்பதுமகானுபாவர்களுக்கே சாத்தியம் .

என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் படத்தில் உணர்த்தப் பட்ட நீதி"கணவனேன்றாலும் மனைவிஎன்றாலும் யாருக்கு எப்போது என்ன தேவை ?! என்பதைபுரிந்து கொள்ளும் முயற்சி கணவன் மனைவி உறவில் முதல் பாடம்.

கவனக் குறைவானால் எவருடைய சிந்தனை எல்லைக்கு அப்பாலும் எதுவும்நிகழலாம்.சதா அன்பை இரந்து அன்பில் கரையும் உலகம் இது.
படத்தின் பாடல்கள் நம்மை வாரிச் சுருட்டி மூழ்கடித்துநினைவிழக்கச் செய்ய வல்லவை.அத்தனை உருக்கம்அத்தனை பரிதவிப்பு ,அத்தனை இதம் ! பாடும் குரலின் ஆழ்ந்த மென்சோகம்வலித்தாலும் அதிலொரு சுகம் பேரானந்தம் .
பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கடலாழத்து சங்கிலிருந்து மீட்கப்பட்ட புராதனஇசையின் கணிக்க இயலா தொன்மையில் கசியும் கனத்த வேதனையை அவதானிக்கமுடிகிறது .

தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒளசபச்சனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்