Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???

பிறிதொருநாள் தூசு தட்டலாம் !!!



கனவின் விழிப்பறையில்

காரடர்ந்த இருட்டறையில்

நெடுந்தூர

பயணக் களைப்பில்

நெல் முனையாய்

ஓய்ந்திருந்தால்

சிற்றெறும்புகள் கடித்தன

செவ்வந்திகள் சிணுங்கின

அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!