Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Tuesday, January 20, 2009

க்விஸ் ...ஸ்ஸ்...ஸ்!!!

ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!

சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.

  1. ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
  2. அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
  3. இந்திரனின் தாயார் பெயர் என்ன?
  4. விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
  5. சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
  6. மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
  7. பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
  8. பிருகன்னளை யார்?
  9. கைகேயியின் பணிப்பெண் யார்?
  10. பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
  11. மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
  12. கிருபாச்சாரியார் யார்?
  13. சல்லியன் என்ன செய்தான்?
  14. சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
  15. ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?

அவ்ளோ தான் கேள்விகள்.

பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.