ஒரு சின்ன க்விஸ் வைக்கலாமா ? எவ்ளோ பேர் சரியான விடை சொல்றாங்கனு பார்க்கலாம். இது விளையாட்டு மட்டும் தான் பரீட்சை இல்லை.இதிகாசங்கள் பற்றிய நமது பொது அறிவு எவ்வளவு தூரம் என்று தான் ஒரு கை பார்த்துடலாமே!
சரி இனி கேள்விகளுக்குப் போகலாம்.
- ராமாயணத்தில் "ஜாம்பவான்" எனும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்ன?
- அசோகவனத்தில் சீதைக்கு ஆறுதலாய் இருந்த அரக்கர் குலப் பெண் யார்?
- இந்திரனின் தாயார் பெயர் என்ன?
- விஸ்வாமித்திரரின் இன்னொரு பெயர் என்ன?
- சீதைக்கு பதிலாக ராவணனின் அசோகவனத்தில் தானாகவே சிறைப் பட்டதாகக் கருதப் படும் "பெண்ணின் "பெயர் என்ன?
- மஹாபாரதத்தில் "வத்சலா "யார்?
- பலராமனின் அன்னை பெயர் அல்லது வாசுதேவரின் முதல் மனைவியின் பெயர் அல்லது கிருஷ்ணரின் பெரிய அன்னையார் பெயர் என்ன?
- பிருகன்னளை யார்?
- கைகேயியின் பணிப்பெண் யார்?
- பஞ்சகன்யாஸ் (பஞ்ச கன்னிகள் )யார் யார்?
- மஹாபாரதத்தில் நீதிக்குப் பெயர் பெற்ற கதாபாத்திரம் எது?
- கிருபாச்சாரியார் யார்?
- சல்லியன் என்ன செய்தான்?
- சகாதேவன் எதில் தேர்ச்சி பெற்றவனாக பாரதம் சொல்கிறது?
- ராவணன் சீதையை கடத்திச் செல்லும்போது தடுக்க முற்பட்டு அவனுடன் கடுமையாகப் போரிட்டு மடியும் பறவையின் பெயர் என்ன?
அவ்ளோ தான் கேள்விகள்.
பதில்களை டக்கு...டக்குனு அடிச்சு விடுங்க பார்க்கலாம்.