Wednesday, December 10, 2008

தேவனின் லக்ஷ்மி கடாட்சம்(மலரும் நினைவுகள்)

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம் " நாவலை வாசித்து முடித்தேன் . கல்கியின் "பொன்னியின் செல்வனை " போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள்முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது .

இரெண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன் .

கதை ஒன்றும் புதுமையானதில்லை ...ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒவ்வொரு கதாசிரியரின் சாமர்த்தியம் ;

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ ? ரொம்பப் பேருக்கு பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை !!! எனக்கு அவரின் பிராமணத் தமிழில் எதோ வசீகரம் தென்பட்டு கவர்ந்து கொண்டது .

சரி நாவலுக்கு வருவோம் .

இந்தக் கதையின் நாயகி "காந்தா மணி "

நாயகன் "துரை சாமி "

அந்தக் கால பழைய பட "ரங்கா ராவ் " போல இங்கேயும் ஒரு charactor உண்டு அவர் " கங்காதர முதலியார்

"அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் "சிங்காரம் "

கதைச்சுருக்கம் :-

காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பன்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி . அவளது வாழ்வைப் பாழாக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத்தொடங்குகின்றனர் .

அப்போது தான் சித்தியின் மூலம் வில்லன் (மன்னிக்கவும் ... பெயர் மறந்து விட்டது ) kandhamani , துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து ஒரு பெண் குழந்தை ( மீனாக்ஷி ) பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது ;

துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான் , அங்கே " லக்ஷ்மி கடாட்சத்தால் " ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான் , அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான் ..பலன் என்ன ?

பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான் ...இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ ...இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே !!!

எனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன் .இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் கட்டுகிறான் ...

பலன்துரைசாமி தன் மனைவி காந்தா மணியை சந்தேகிக்க தொடங்குகிறான் ;கணவன் தன்னோடு இல்லாத காலத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள் .பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே wherever she goes இடங்களில் எல்லாம் அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .

எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாககாந்தாமணி யின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன் .

துரைசாமியும் he also a good human ...இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே she has good voice சாரீர (குரல் ) வளத்தால் பாடகியாகி விடுகிறாள் ;நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் peak of her feild போகிறாள் காந்தாமணி ;

இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நாயகி காந்தாமனியை விடவும் கங்காதர முதலியார் தான் ;

அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ...பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம் ,பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய...வழிய உள்ளே வைத்துப் பூட்டவே கூடாது .

பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " இதே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம் .

நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம் !

உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வாசித்து தான் பார்க்கலாமே !!!

19 comments:

Govindarajan.L.N. said...

Can you inform where this book is available?

நட்புடன் ஜமால் said...

\\பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " \\

நல்ல விஷயம்.

பண்ப்பெட்டி மட்டுமல்ல.

நாமும் எப்பொழுதும் பல நல்ல விஷயங்களை ஏற்று கொள்ள தயராக இருக்க வேண்டும்.

தெரிந்தேயிருந்தாலும் கூட ...

தேவன் மாயம் said...

அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும்

நீங்களும்
அதே கொள்கையில்
பணத்தை எங்க பக்கம்
அள்ளீ விடுங்க!

ரவி said...

டவுட்டக்கா டவுட்டக்கா..

இங்கன பெட்டி காலீக்கா...

அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))

ரவி said...

டவுட்டக்கா டவுட்டக்கா..

இங்கன பெட்டி காலீக்கா...

அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))

ரவி said...

பின்னூட்டம் வருதோ இல்லையோ, சூடான இடுகை ஆகுதோ இல்லையோ, தொடர்ந்து எழுதவும்.

ஒரு பிரபல எழுத்தாளருக்குரிய அத்தனை நேர்த்தியும் உங்கள் பதிவில் உண்டு...

குடுகுடுப்பை said...

நல்ல செய்திதான்,
................

எல்லா கமெண்டையும் டெலிட் பண்ணி
நிரப்புங்க

துளசி கோபால் said...

நீங்க சொன்னது ரொம்பச் சரி.

தெரிஞ்ச , சாதாரணக் கதையாக இருந்தாலும் சிலபேரோட நடை அப்படியே கட்டிப்போட்டு வச்சுரும்.

படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரியலை.. பார்க்கலாம்.

ரவியின் நாய்ப் பதிவு மூலமா இங்கே வந்தேன்.

நாயை விடமுடிவதில்லை. பூனையையும்தான்:-)

Anonymous said...

புக் கிடைத்தால் படிக்கிறேன். :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ..



அதுதான் உண்மையான பொதுவுடமை...


அப்போதுதான் நாடு வளரும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் "


இது முதலாலித்துவம்.

dondu(#11168674346665545885) said...

கதை கடைசியில் துரைசாமியும் காந்தாமணியும் அவள் நிகழ்த்திய கச்சேரியில் மீண்டும் ஒன்று சேரும் இடத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.

கதை ஓட்டத்தில் இரு தேவகணங்கள் கதையை அவ்வப்போது விவாதிப்பதாகவும் வரும். துரைசாமி காந்தாமணியின் துயரங்கள் ஊழ்வினைப்பயனே என்பது போலவிம் வரும். கதை முடியும் தருணம் துரைசாமி காந்தாமணி வாழ்க்கை எதிர்காலத்தில் என்னென்ன முன்னேற்றங்கள் அடையப் போகிறது என்பதை அவர்கள் கோடிகாட்டுவதாக அமையும்.

தேவன் முருக பக்தர். முருகப் பெருமானின் புகழை அவர் விவரிக்கும் அளவுக்கு மற்றவர்களால் செய்ய முடியாது என்றே சொல்லலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

KarthigaVasudevan said...

வாங்க Govindarajan.L.N

நான் "தேவனின் லக்ஷ்மி கடாட்சத்தை " என் அம்மாவின்
பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வந்து வாசித்தேன்,விகடன் பிரசுரத்தாரை அணுகினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்,பிரபலமான எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கலாம்,புத்தகத் திருவிழாவிலும் தேடி பாருங்கள்.பொது நூலகங்களிலும் கிடைக்கும்.

வாங்க அதிரை ஜமால் ...

//நாமும் எப்பொழுதும் பல நல்ல விஷயங்களை ஏற்று கொள்ள தயராக இருக்க வேண்டும்.

தெரிந்தேயிருந்தாலும் கூட ...//

நல்ல விஷயம் தான் சொல்றிங்க ...ஃபாலோ பண்ணிடலாம் .

வாங்க thevanmayam...

வாங்க செந்தழல் ரவி அண்ணா...

//டவுட்டக்கா டவுட்டக்கா..

இங்கன பெட்டி காலீக்கா...

அப்பாலீங்கா என்னோட அக்கவூண்டு நெம்பர் தாரென், கொஞ்சம் நிரப்பிருங்க :))))//

பொட்டி காலியானவங்களைஎல்லாம் வரிசைல வந்து பணமுடிப்பு வாங்கிக்க சொல்லி நம்ம இந்திய அரசாங்கம் அறிவிச்சுருக்கே?!
செந்தழல் அண்ணா "எனக்கு உங்களுக்குப் பின்னாடி ஒரு இடம் பிடிச்சு வைங்க"
ஒன் நிமிட் ப்ளீஸ் ...இந்தா வந்துட்டேன் !

KarthigaVasudevan said...

செந்தழல் அண்ணே...செந்தழல் அண்ணே ...

//ஒரு பிரபல எழுத்தாளருக்குரிய அத்தனை நேர்த்தியும் உங்கள் பதிவில் உண்டு...//

என்னை வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலையே?!

KarthigaVasudevan said...

வாங்க குடுகுடுப்பையாரே....

//நல்ல செய்திதான்,
................

எல்லா கமெண்டையும் டெலிட் பண்ணி
நிரப்புங்க//

புரியலையே என்ன சொல்ல வரீங்கன்னு?!
கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்றது ;

KarthigaVasudevan said...

வாங்க துளசி டீச்சர் ...

//தெரிஞ்ச , சாதாரணக் கதையாக இருந்தாலும் சிலபேரோட நடை அப்படியே கட்டிப்போட்டு வச்சுரும்.//

well said thulasi teacher;

//படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரியலை.. பார்க்கலாம்.//

டீச்சர் இப்படி சொல்லலாமா? தேடிப் படிச்சுப் பாருங்க ...நல்லா இருக்கும்.

வாங்க சின்ன அம்மிணி ...

கிடைச்சா கண்டிப்பா படிங்க...ஒரு தரமான பழைய படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

வாங்க SUREஷ் ...

//பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ..
அதுதான் உண்மையான பொதுவுடமை...
அப்போதுதான் நாடு வளரும்.//

//பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் "
இது முதலாலித்துவம்.//

அப்போ கதைல வர கங்காதர முதலியார் ஒரு மிகச் சிறந்த பொதுவுடமை ஞானமுள்ள முதலாளினு சொல்லுங்க .

KarthigaVasudevan said...

வாங்க டோண்டு சார் ...

எனது வலைப் பக்கத்தில் தங்களது முதல் வருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி,

//கதை கடைசியில் துரைசாமியும் காந்தாமணியும் அவள் நிகழ்த்திய கச்சேரியில் மீண்டும் ஒன்று சேரும் இடத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். //

வாசிக்கும் எல்லோருக்குமே அந்த நிலை வருவதுண்டு...ஏனென்றால் பிறந்ததிலிருந்து பல இன்னல்களைத் தாண்டி வரும் ஒரு பெண் கதாபாத்திரம் காந்தாமணி...அவள் துரைசாமியோடு ஒன்று சேர்ந்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வாசிப்பதால் இறுதிக் கட்டத்தை நெருங்கும் போது உணர்ச்சி வசப்படுதல் இயற்க்கை தான் .

//தேவன் முருக பக்தர். முருகப் பெருமானின் புகழை அவர் விவரிக்கும் அளவுக்கு மற்றவர்களால் செய்ய முடியாது என்றே சொல்லலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நிஜம் தான் தேவன் ஒரு மிகச் சிறந்த முருக பக்தர்;இதை தேவனின் பல நாவல்களில் நாம் கண்கூடாகக் காணலாம்.திருச்செந்தூரை மையமாக வைத்து அவர்
ஒரு நாவல் எழுதியுள்ளார்...பெயர் சட்டென்று ஞாபகத்தில் இல்லை நாயகியின் பெயர் கல்யாணி என்று நினைக்கிறேன்...அதில் முருகப் பெருமானைப் பற்றி அவரது போற்றுதல்கள் வாசிக்க நன்றாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

தேவனின் அத்தனை புத்தகங்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. பத்ரியை அணுகவும். அல்லது அடுத்தமாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் ஸ்டாலை அணுகவும்.

எனது இந்தப் பதிவையும் பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//பெயர் சட்டென்று ஞாபகத்தில் இல்லை நாயகியின் பெயர் கல்யாணி என்று நினைக்கிறேன்...அதில் முருகப் பெருமானைப் பற்றி அவரது போற்றுதல்கள் வாசிக்க நன்றாக இருக்கும்.//
அந்த நாவல் மிஸ் ஜானகி.

அன்புடன்,
டோண்டு ராகவன்