Showing posts with label தேவன். Show all posts
Showing posts with label தேவன். Show all posts

Wednesday, December 10, 2008

தேவனின் லக்ஷ்மி கடாட்சம்(மலரும் நினைவுகள்)

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம் " நாவலை வாசித்து முடித்தேன் . கல்கியின் "பொன்னியின் செல்வனை " போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள்முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது .

இரெண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன் .

கதை ஒன்றும் புதுமையானதில்லை ...ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒவ்வொரு கதாசிரியரின் சாமர்த்தியம் ;

எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ ? ரொம்பப் பேருக்கு பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை !!! எனக்கு அவரின் பிராமணத் தமிழில் எதோ வசீகரம் தென்பட்டு கவர்ந்து கொண்டது .

சரி நாவலுக்கு வருவோம் .

இந்தக் கதையின் நாயகி "காந்தா மணி "

நாயகன் "துரை சாமி "

அந்தக் கால பழைய பட "ரங்கா ராவ் " போல இங்கேயும் ஒரு charactor உண்டு அவர் " கங்காதர முதலியார்

"அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் "சிங்காரம் "

கதைச்சுருக்கம் :-

காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பன்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி . அவளது வாழ்வைப் பாழாக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத்தொடங்குகின்றனர் .

அப்போது தான் சித்தியின் மூலம் வில்லன் (மன்னிக்கவும் ... பெயர் மறந்து விட்டது ) kandhamani , துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து ஒரு பெண் குழந்தை ( மீனாக்ஷி ) பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது ;

துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான் , அங்கே " லக்ஷ்மி கடாட்சத்தால் " ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான் , அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான் ..பலன் என்ன ?

பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான் ...இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ ...இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே !!!

எனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன் .இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் கட்டுகிறான் ...

பலன்துரைசாமி தன் மனைவி காந்தா மணியை சந்தேகிக்க தொடங்குகிறான் ;கணவன் தன்னோடு இல்லாத காலத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள் .பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே wherever she goes இடங்களில் எல்லாம் அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .

எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாககாந்தாமணி யின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன் .

துரைசாமியும் he also a good human ...இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே she has good voice சாரீர (குரல் ) வளத்தால் பாடகியாகி விடுகிறாள் ;நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் peak of her feild போகிறாள் காந்தாமணி ;

இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நாயகி காந்தாமனியை விடவும் கங்காதர முதலியார் தான் ;

அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ...பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம் ,பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய...வழிய உள்ளே வைத்துப் பூட்டவே கூடாது .

பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " இதே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம் .

நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம் !

உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வாசித்து தான் பார்க்கலாமே !!!