Friday, November 19, 2010

அருந்ததிராயும் சில கவிதைகளும் ...



அருந்ததி ராயின் "God of small things " தரவிறக்கி வைத்து நெடுநாட்கள் ஆகின்றன.இன்னும் ஒரு பக்கத்தைக் கூட புரட்டவே இல்லை. இந்த வாரம் விகடன் 25 இல் அருந்ததி . சில மாதங்களுக்கு முன்பு அவரது பேட்டி விகடனில் பிரசுரமானது,அவ்வப்போது இப்படி அருந்ததி ராய் பற்றி எங்கேனும் செய்திகளைக் காணும் போது மட்டுமே தலை தூக்கி மறையும் ஆர்வம் மறுபடியும் இன்று வந்தது எப்படியாவது அந்த நாவலைப் படித்து முடியேன் என்பதாக.


அருந்ததி 2006 ஆம் வருடம் தனது "The Algebra of infinite justice " எனும் கட்டுரைத் தொகுப்புக்காக இந்திய அரசு வழங்கிய சாகித்ய அகாடமியைப் புறக்கணித்தவர்.இந்த கட்டுரைத் தொகுப்பை இணையத்தில் தேடித் பார்க்கலாம் என்றிருக்கிறேன்...கிடைக்குமோ! தெரியாது.


புக்கர் பரிசு பெற்ற ஒரே இந்திய எழுத்தாளர்
,இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருதைப் புறக்கணித்தவர். நாவல் எழுதிப் புகழ் பெறுவதற்கு முன்பு டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர்,பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் சமூகப் போராளி.


I like Arundhathi Rai .


சபிதா இப்ராகிம் என்பவரது இந்தக் கவிதைகளை விகடனில் வாசித்தேன் ,கவிதைகளின் எளிமை மிகப் பிடித்திருந்தது.



சேமிப்பு :

கீரை விற்ற கிழவியிடம்

பேரம் பேசி சேமித்தேன்

ஒரு ரூபாய் பணமும்

ஒரு மூட்டை பாவமும் !



குரூர நிம்மதி :

மரணித்த மழலைகளின்

பெயர்ப்பட்டியலி

தன பிள்ளை இல்லையெனும்

நிம்மதி ,

நொடிப் பொழுதாயினும்

எத்தனை குரூரமானது ?



கனவுப் பயணம் :


ஆறு வயது மகளின்

கனவுக்குள் பிரவேசிக்க

நேரிட்டது ஒருநாள்

பட்டாம் பூச்சி மீது பயணம்

சித்திரக்குள்ளன் சிநேகம்

சாக்லேட் வீடு

ஐஸ்க்ரீம் சாலை

கனவிலிருந்து வெளியேற

வழி தேடினேன்

இல்லாமலிருந்தால்

நல்லது !



1 comment:

sivakumar said...

கவிதைகள் அருமையாக உள்ளன.