Saturday, November 20, 2010

தகன மித்ரா ...




எப்போதுமே இப்படியல்ல 
எங்கோ நழுவிக் கொண்டிருக்கும் 
நினைவுகளைத் தகனம் செய்ய முடியா 
கோபங்கள்  ...பெண்டுலமாய்
ஆடிச் சலிக்கையில்
ஆட்படுத்தும் ஆகச் சிறந்த சோர்வுகள்
எண்ணிக் கணக்கிட
இன்னொரு ஜென்மமோ  ?
விட்டும் விடாமல்
தூறும் சேய் மழையாய்
சஞ்சலத்தில் ஆழ்ந்து விடும்
பொழுதெலாம் பெரும்பாலும்
கடற்கரையில் நட்சத்திரங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தேன்  
எலுமிச்சை அளவு குண்டு குண்டு நட்சத்திரங்கள்
கோர்த்து வைத்த நிஜம் சொன்னால்
யாரும் நம்பவில்லை
இன்றும் எடுக்கிறேன் கோர்க்கிறேன்
நம்புதியோ !


No comments: