Friday, November 19, 2010

அகழ்வாராய்ச்சி ...



உதிரும் கால் நெருடும் சறல்மண்
தகடாய் இறுகிக் கெட்டிக்கும்
அடுக்கடுக்காய் ஏடுகள் படிய
அழுந்த மூடிக் கொண்ட சூலி; 
விரியத் திறக்கும் மாதுளை முத்துக்கள் 
இனிப்பும் புளிப்புமாய்
ஈயமும் பித்தளையும்
உப்பிடக் கடல் காய்ந்து பாலை நிலம்;
நெடுக நெடுகவே கண்கொத்தும் ராஜாளிகள் 
சருகிலை சர சரக்க சதா ஊறும்  சர்ப்ப ராஜாக்கள் ;
தோண்டத் தோண்டவே  கால்சியமும் பாஸ்பரசுமாய்
கண் மறைக்கும் பழுப்பு வெள்ளைகள்
அஃ தன்றோ ...
அகழ்வாராய்ச்சி !



No comments: