Showing posts with label அகழ்வாராய்ச்சி. Show all posts
Showing posts with label அகழ்வாராய்ச்சி. Show all posts

Friday, November 19, 2010

அகழ்வாராய்ச்சி ...



உதிரும் கால் நெருடும் சறல்மண்
தகடாய் இறுகிக் கெட்டிக்கும்
அடுக்கடுக்காய் ஏடுகள் படிய
அழுந்த மூடிக் கொண்ட சூலி; 
விரியத் திறக்கும் மாதுளை முத்துக்கள் 
இனிப்பும் புளிப்புமாய்
ஈயமும் பித்தளையும்
உப்பிடக் கடல் காய்ந்து பாலை நிலம்;
நெடுக நெடுகவே கண்கொத்தும் ராஜாளிகள் 
சருகிலை சர சரக்க சதா ஊறும்  சர்ப்ப ராஜாக்கள் ;
தோண்டத் தோண்டவே  கால்சியமும் பாஸ்பரசுமாய்
கண் மறைக்கும் பழுப்பு வெள்ளைகள்
அஃ தன்றோ ...
அகழ்வாராய்ச்சி !