Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, August 4, 2009

நானிருப்பது ஈழத்திலோ ?!

திடுக் திடுக்
திருப்பங்களில்
தடக் தடக்கென
தட தடக்கும் இதயங்களுக்குச்
சொந்தக்காரர்களாகிப் போனதால்
இலை அசையும் போதெலாம்
இடி இடிக்கக் கூடுமெனும்
அனுமானம் தீர்மானமாய்
மிஞ்சிப் போன
பயக் காடுகளாயின
எம் நாடாயின காடு .
கூடுகள் எங்கே ???!!!
எம் வீடுகள் எங்கே ???!!!
நானிருப்பது ஈழத்திலோ ?!