Wednesday, April 8, 2009

இதற்குப் பெயரும் கவிதையென சொல்வேன்?!

சளக் சளக்கென நீந்தி

விலுக் விலுக்கென துள்ளி

சள..சளவென வெந்து

தள தளவென வாசம் பரப்பி

தட்டில் விழுந்ததும்

களுக் களுக்கென

முழுங்கப் பட்டு

விசுக் விசுக்கென

மறையும்

அது என்ன?!

12 comments:

வல்லிசிம்ஹன் said...

மீனாப்பா:)???

ராமலக்ஷ்மி said...

தெரியலியே:( ? மீனா ? அதுதான் நீந்தும். மீன் போன்ற கண்ணை வேறு காட்டியிருக்கிறீர்கள்.

[ஹிஹி, நான் சைவம். ஆகையால் விசுக் விசுக்னு மறையும் அளவுக்கு டேஸ்டியான்னெல்லாம் தெரியாது.]

யூர்கன் க்ருகியர் said...

விடுகதை மாதிரி இருக்கு.
விடை : மீன்!
சரியா தவறா?

குடுகுடுப்பை said...

என் கவிதைக்கு லிங்குன்னு நெனச்சேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்க சொல்லறது லல்லு சம்பந்தப்பட்ட செய்தியா..

நட்புடன் ஜமால் said...

பஜ்ஜியா!

அது சரி(18185106603874041862) said...

இது தான் கவிதைன்னு இலக்கணம் எதுவும் சொல்ல முடியாது...ஆனா, இது கவிதை மாதிரி இல்ல :0))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதற்குப் பெயர் வடை இல்லனா பஜ்ஜியா இருக்கும்....

சரியா

KarthigaVasudevan said...

வாங்க வல்லிம்மா (மீனே தான்..சரியா சொல்லிட்டிங்களே ?!)
:)

வாங்க ராமலக்ஷ்மி மேடம் சைவம்னாலும் கரெக்டா சொல்லிட்டிங்களே :)

சரி தான் . ஜுர்கேன் க்ருகேர்

KarthigaVasudevan said...

நீங்களும் கவிதை எழுதி இருக்கிங்களா குடுகுடுப்பை அண்ணா ?! சொல்லவே இல்லையே?

//SUREஷ் said...

நீங்க சொல்லறது லல்லு சம்பந்தப்பட்ட செய்தியா//

ஆமாம் லல்லு மீன் சாப்பிடுவாரா ?

// நட்புடன் ஜமால் said...
பஜ்ஜியா!//

இல்லை மீன்

// அது சரி said...
இது தான் கவிதைன்னு இலக்கணம் எதுவும் சொல்ல முடியாது...ஆனா, இது கவிதை மாதிரி இல்ல :0))//

அதான் சும்மான்னு லேபில் கொடுத்திருக்கேனே அதுசரி!!! :)


அமிர்தவர்ஷினி அம்மா said...
இதற்குப் பெயர் வடை இல்லனா பஜ்ஜியா இருக்கும்....

சரியா//

மீன் தான் சரியான விடை அமித்து அம்மா

goma said...

தெரியலியே:( ? மீனா ? அதுதான் நீந்தும். மீன் போன்ற கண்ணை வேறு காட்டியிருக்கிறீர்கள்

நான் பின்னூட்டத்துக்கு வார்த்தைகளை அடுக்கி வைத்துக் கொண்டு கமெண்ட்ஸ் க்ளிக் பண்ணி பா...ர்..ர்ர்..ர்த்தால் அதே வசனங்களோடு ராமலஷ்மி ...எழுதி பின்னூட்டம் இட்டிருக்கிறார்.அவரது கமெண்ட் பின்னூட்டம் இல்லை முன்னூட்டம்...

goma said...

கண்ணை நல்லா செக் பண்ணீட்டேன்...நோ கேடராக்ட்,க்ளாகோமா,பிரஷர்,
யாரும் கண்ணு போடாம பார்த்துக்கோங்க....

அடுத்த கண்ணைக் காட்டுங்க....