Showing posts with label சும்மா ஒரு கவிதை .... Show all posts
Showing posts with label சும்மா ஒரு கவிதை .... Show all posts

Tuesday, March 24, 2009

ஒளடதமானது மஞ்சம்


மஞ்சள் மாறா

சுகந்தம் கொஞ்சும்

அஞ்சுக மங்கை

தங்க முகம் தான்

கெஞ்சுமோ

இன்னும்

மிஞ்சுமோ ?!

வேங்கை போலொரு

வேந்தன் அவனென

அஞ்சுவதல்லா

பிஞ்சு மனம் போல்

ஆசை களிற்றை

அடக்கி மீண்டதும்

ஒளடதமானது மஞ்சம்

அஞ்சனம் திருமஞ்சனம்

பஞ்சனை காணும் மந்திரம்

வந்தனம்

சங்கத் தமிழோ

காவியமோ

மின்னற் பொழுதின்

ஓவியமோ

பேசாப் பொருளின்

தூரிகையோ

காந்தள் மலரே

கண் துயிலாய்

எஞ்சும் காலை பொழுதே வா

வெளிச்சக் கதிர்கள் விரியட்டும்

வெயில் நிறம் இங்கே பரவட்டும்

மஞ்சள் முகங்கள் மினுங்கட்டும்

தங்கக் கனவுகள் பலிக்கட்டும் ...

Thursday, March 19, 2009

தாம்பத்யத் தராசு ?!




கணவன் ஒருபுறம்


மனைவி மறுபுறம்


மேல் கீழென


ஏறி ...இறங்கும்


தாம்பத்யத் தராசு


எப்போதும்


கிடை மட்டத்தில்


நிலை கொண்டால்


யாதொன்றும் பயனிலையே ?!


முட்களின் நகர்வில்


(எடைக்)கற்களின் கனத்தில்


அசையும் தட்டுக்கள்


ஏறலாம்


இறங்கலாம்


தராசின் சுழன்றாடும்


சங்கிலிக்குள் மட்டும் ...