
ஊருக்கு நடுவில்
ஒற்றை நடுகல்
வருடம் ஒருமுறை
காளிகாவதாரம் ...
ஊருக்கு தொலைவில்
பிரம்மாண்ட பேருரு
தினம் தினம்
இரவில்
வேட்டைக்கு குதிரையில் ...
ஜல்..ஜல்...ஜல்
மஞ்சள் நீரும்
பானாக்காரமும் ...
இறைபடும் இருநாள்
கொப்பும் குலையுமாய்
வேம்பிலை ...மாவிலை
ஆடிய தோரணம்
கப்பிக் கிளைத்து
கண் நிறை பச்சை
உறுமும் மேளம்
நடுங்கும் பம்பை
உடுக்கை இடுப்புடன்
ஆடும் சாமிகள் ...
சாமியாடிகள் !?
கூந்தல் பறக்கும்
கண் விழி சிவக்கும்
உருட்டி விழிக்கும்
உன்மத்த நிலையது ...
எங்கே போயின ?
காதில் விழாமல்
கண்ணில் படாமல்
கருத்தில் மறைந்து
ஜல்..ஜல்...ஜல்
எங்கும் இல்லை
சாமியாடிகள் ...!
அது ஒரு காலம் ...
இன்றது அரிதோ ?!