Showing posts with label கவிதையா. Show all posts
Showing posts with label கவிதையா. Show all posts

Wednesday, July 1, 2009

கொஞ்சிக் கொண்டு கோலமிட...

வீதிப் புழுதி
வீட்டுச் சுவர் போர்த்த
பிஞ்சுக் கை அதில்
கொஞ்சிக் கொண்டு கோலமிட
விரலிடுக்கில்
சலவைத் தண்ணீர்
பிசு பிசுத்துக் கச கசக்க
பிய்த்துக் கொண்டு ஓட முயலும்
கொடிக் கயிற்றோடு
சலியாமல் சலித்து
பெண்ணின் கை
மல்லுக்கட்டவெளிவாசல்
திண்ணையோரம்
சட சடக்கும்
பட படப்புடன்
வந்திடுமே ஆ....!!!

( விடுபட்டது ஒரே ஒரு எழுத்து தான் அதை நீங்களே சரியாக நிரப்புங்கள் பார்க்கலாம்?!)