Friday, July 29, 2011

எல்லாம் கிருஷ்ணனுக்கே சமர்ப்பயாமி ...



மரண பரியந்தம் தொடரும்
என நினைத்திருந்த பந்தம் ஒன்று
இடைவழி போயின் உள்நிறைக்கும்
ஏமாற்றம் இன்னதென விவரணை காணாது
புறத்தாடும் கண்ணாமூச்சு ஆட்டம் ;
எதை நான் பரிகசித்தேனோ
அதுவே நானாகி நானே அதுவாகி
எனக்கே எனக்கென்று
தலைவலியும் காய்ச்சலும்
வந்து மெய்ப்பிக்கும் சோதனையின்
கால் தடங்கள்;
எப்போதும் நமக்கென்று
எதுவும் மிஞ்சி இருப்பதில்லை
இருக்கப்போவதுமில்லை !
எப்போது வேண்டுமானாலும்
தூக்கி எறிந்து விடலாம்;
ஆனாலும் இட்டமுடன் தூக்கிச் சுமக்கும்
அகத்தொருமித்த ஜீவாதாரப் பாம்பு
முற்ற முழுதாய் எனைத்தின்னும் முன்பே ...
உள்ளங்கை நீர் குவித்து
உவந்தளிக்கிறேன் தானம்
எல்லாம் கிருஷ்ணனுக்கே
சமர்ப்பயாமி!

2 comments:

Anonymous said...

அருமையான வரிகள்

Anonymous said...

கவிதையில் ஒருவித ஆழ்மன அமைதியை காண்கிறேன்.


வாழ்த்துக்கள்