Wednesday, November 24, 2010

காளியும் கல்மரங்களும் ...


திருவக்கிரை ஊர் எனக்கு முன்பே பரிச்சயமானது தான், பாலகுமாரனின் நாவல் ஒன்றில் இந்த ஸ்தலத்தில் இருக்கும் வக்கிர காளியம்மன் ஆலயத்தை தரிசித்து வந்தால் சேமம் என்றிருந்தது கண்டு 6 வருடங்களுக்கு முன்பு என் மகளின் பிறந்த நாளன்று சென்னையில் இருந்து திருவக்கரைக்கு சென்று வந்தோம்.

காளியைப் பற்றி பேசுவதற்காக இதை எழுதவில்லை , முதலாவதாக இந்த ஊர் காளிக்கும்,சந்திர மௌலீஸ்வரருக்கும் அப்பாற்பட்டு மற்றொரு விசயத்திற்கும் கவனிக்கப் பட வேண்டிய ஊர். இந்த ஊரில் கல்மரங்கள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன என்று சென்னை மியூசியத்தில் வாசித்திருந்தேன்.

கல்மரம் :

நிஜமாகவே மரமாக இருந்து கல்லாக மாறிய மரம் கல்மரம். அதாகப் பட்டது 2 00 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் முறிந்து மழையால் சாய்ந்து ஆற்றோடு இழுத்துச் செல்லப் பட்டு ஆற்றின் ஆழங்களில் பல அடுக்குகளில் பன்னெடுங்காலமாக மூழ்கி பின் வெளிப்படும் போது கல்லாக மாறி விடுகின்றன. இத்தகைய கல் மரங்கள் விழுப்புரத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் அதிகம் இருக்கின்றன. அங்கிருந்து மாதிரிக்கு ஒரு கல் மரத்தை நம் இந்திய புவியியல் துறையினர் சென்னை மியூசியத்திற்கு அன்பளிப்பாக வழங்கி இருந்க்கின்றனர்.

சென்னை மியூசியம் சென்று வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், சிற்பக்காட்சி சாலையை அடுத்து உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் நடுவாந்திரமாக இந்தக் கல் மரம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது .

மரங்களின் வயதைக் கணக்கிட ரேடியோ கார்பன் முறை பயன்படுத்தி மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வயது கணக்கிடப் படும். அப்படியானால் 200 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மரங்கள் இவை என்பதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் ௯எத்தநை வளையங்கள் இருக்குமோ!!! ??? இந்த கல்மரத்தை பார்த்ததில் இருந்து எப்படி மரங்களின் வயதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டால் என்ன? என்ற லூசுத்தனமான ஆசையெல்லாம் வந்து போகிறது,
(நல்ல சமையல் கத்துக்கற ஆசையைத் தவிர மற்ற எல்லாம் ஆசைகளும் வருமே உனக்கு ! //தேவ் வாய்ஸ்//)

கோயிலைப் பற்றி :

வக்கிராசுரனைக் கொன்றதால் அங்கிருந்த காளிக்கு வக்கிர காளி என்று பெயர் வந்ததாம் ,இங்குள்ள காளி காதில் குழந்தை ஒன்றை குண்டலமாக அணிந்திருக்கிறாள்.(இதற்கு ஏதாவது கதை விளக்கம் இருக்கலாம்- எனக்குத் தெரியவில்லை) முதன் முறையாகப் பார்க்கும்போது சற்றே அச்சமூட்டும் சிலை இது. இதன் காரணமாக இதை குண்டலி வனம் என்றும் முன்பு அழைப்பார்களாம்.

காளி கோயில் தவிர்த்து மும்முக சந்திரமௌலீஸ்வரர் ஆலயமும் இங்குள்ளது ,திருஞான சம்பந்தரால் பாடப் பட்டதால் பழம்பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் இது .இங்குள்ள அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை

ஆலய முகவரி :

அருள்மிகுசந்திரசேகரர்
வக்ரகாளியம்மன் திருக்கோவில்திருவக்கரைவானூர் வட்டம்விழுப்புரம் மாவட்டம்PIN - 604304

இந்த ஊரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...வாசிப்பவர்கள் காளிக்காகப் போனாலும் சரி கல்மரத்திற்காகப் போனாலும் சரி,இந்த ஊர் பார்க்கப் பட வேண்டிய ஊரே. ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப் பட்டு கரை சேர்ந்த லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கல் மரங்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. நாங்கள் அங்கே சென்ற தினத்தில் கல்மரன்களைப் பற்றிய செய்தி அறிந்திராத காரணத்தால் அப்போது வெறுமே கோயிலுக்கு மட்டுமே போய் வந்தோம். இனியொரு முறை செல்லும் எண்ணம் இருக்கிறது. கல்மரங்களுக்காக .அந்த கிராமத்தில் மியூசியம் உண்டா எனத் தெரியவில்லை? கல்மரங்கள் நிறைந்த்திருக்கின்றன திருவக்கரை அருங்காட்சியகத்தில் என்று தான் வாசித்த ஞாபகம்.யாரேனும் போய் வந்தவர்கள் இந்தப் பதிவை வாசித்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

1 comment:

மார்கண்டேயன் said...

என்னங்க, ரொம்ப நல்லா எழுதிற்கீங்க
ஆனா, படம் ஒன்னு கூட போடாம விட்டுட்டீங்களே,

முடிஞ்சா, நெறைய படமெடுத்து, பிக்காசா ல போடுங்க,

(Take as many pictures as possible and upload in picasa web and provide the link)

ஒரு அஞ்சு நிமிச காணொளியும் போடுங்க,

(Make a video and upload in www.youtube.com and provide the link)

அந்த ஊருக்கு போற பேருந்து எங்கள், தங்குமிட வசதி எல்லாமே சொல்லனும்ல

இதெல்லாம் எதிர்பாக்குறேன் . .
முடிஞ்சா உங்கள் பதிவுல மற்றம் செய்ங்க இந்த தகவலோட

Kindly provide the complete details with photograph, video, transportation and accommodation details and edit this posting,

Because, it is our duty to disseminate the rare historical collections around us,

Wishing you all the best and always the best,

மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com