Sunday, August 30, 2009

ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு

சென்ற வார விகடனில் ஒரு கார்டூன்" ரெட்டை வால் ரெங்குடு " என்ற தலைப்பில் ;ரெங்குடுவுக்கு லீவ் முடிந்து ஸ்கூல் திறப்பதற்கு முதல் நாளாம் ,அவனது அப்பாவும் அம்மாவும் முகமெல்லாம் கொள்ளை மகிழ்ச்சி பூத்துக் கொண்டாட தட்டாமாலை சுற்றுகிறார்கள்.

(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!

இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,

தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?

அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;

இருங்க ...

பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.

பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"

"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .

அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்

வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)

பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)

திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்

குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??

பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .

என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.

விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .

இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)

மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .

அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .

எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.

நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.

19 comments:

நட்புடன் ஜமால் said...

(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)]]


ஹா ஹா ஹா

இரசனை ம்ம்ம்

அந்த பாடலின் கானொளியின் சுட்டியையும் கொடுத்து விடலாமே

நட்புடன் ஜமால் said...

(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)]]

ஆகா ஆகா

காட்சி கண் முன்னே விரியுது ...

நட்புடன் ஜமால் said...

பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .]]


அதானே!

நட்புடன் ஜமால் said...

அந்த குதிரையை போட்டோ பிடித்து போட்டிருக்கலாமே

சந்தனமுல்லை said...

ahaa...க்யூட் பாப்பு! ரொம்ப சமத்து போல இருக்கே!! :-)

//நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.//

ஹிஹி..நம்பிட்டோம்! btw, பாப்புதான் சந்தோஷமா தட்டாமாலை சுத்தியிருப்பாங்கதானே!! :))

அது சரி(18185106603874041862) said...

//
சந்தனமுல்லை said...
ahaa...க்யூட் பாப்பு! ரொம்ப சமத்து போல இருக்கே!! :-)

//நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.//

ஹிஹி..நம்பிட்டோம்! btw, பாப்புதான் சந்தோஷமா தட்டாமாலை சுத்தியிருப்பாங்கதானே!! :))

August 30, 2009 10:09 PM
//

ரிப்பீட்டே :0)))))

R.Gopi said...

மேட‌ம்...

ரெட்டை வால் ர‌ங்குடு இல்லாத‌ வீடு க‌ல‌க‌ல‌வென்றே இருக்காது...

என் 4 வ‌ய‌து ம‌க‌னும் ட‌புள் ரெட்டை வால் ர‌ங்குடுதான்....ஒங்க‌ பாப்பு மாதிரியே...

சின்ன‌ குழ‌ந்தைக‌ள் ரெட்டை வால்த‌ன‌ம் ப‌ண்ணினால் தான், வீடே கலகலப்பாக இருக்கும்...

அவர்களின் முகத்தில் பொங்கி வழியும் சந்தோஷத்தை பார்த்தால், நம் கவலை எல்லாம் மறந்து நாமும், அக்கணம் குழந்தை ஆவோம்... (மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்... மழலைகள் ஆவோம்...).

KarthigaVasudevan said...

நன்றி ஜமால்

காணொளி இணைக்க முடியலை...தெரியலைங்க .

KarthigaVasudevan said...

நட்புடன் ஜமால் said...

அந்த குதிரையை போட்டோ பிடித்து போட்டிருக்கலாமே.


அப்போ தோணலை...ஆனா பாப்புவை அதை அப்படியே வரையச் சொல்லி இருக்கேன் ,வரைந்தால் வலைஏற்றணும் நண்பரே.

KarthigaVasudevan said...

சந்தனமுல்லை said...
ahaa...க்யூட் பாப்பு! ரொம்ப சமத்து போல இருக்கே!! :-)

//நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.//

ஹிஹி..நம்பிட்டோம்! btw, பாப்புதான் சந்தோஷமா தட்டாமாலை சுத்தியிருப்பாங்கதானே!! :))


நன்றி முல்லை
பாப்பு சுத்தறதென்னவோ வாஸ்தவம் தான் , :)

KarthigaVasudevan said...

//அது சரி said...
//
சந்தனமுல்லை said...
ahaa...க்யூட் பாப்பு! ரொம்ப சமத்து போல இருக்கே!! :-)

//நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.//

ஹிஹி..நம்பிட்டோம்! btw, பாப்புதான் சந்தோஷமா தட்டாமாலை சுத்தியிருப்பாங்கதானே!! :))

August 30, 2009 10:09 PM
//

ரிப்பீட்டே :0)))))//

நன்றி அதுசரி...பாராட்டுக்கு ரொம்ப சந்தோசம்...நல்லா இருங்க.

KarthigaVasudevan said...

// R.Gopi said...
மேட‌ம்...

ரெட்டை வால் ர‌ங்குடு இல்லாத‌ வீடு க‌ல‌க‌ல‌வென்றே இருக்காது...

என் 4 வ‌ய‌து ம‌க‌னும் ட‌புள் ரெட்டை வால் ர‌ங்குடுதான்....ஒங்க‌ பாப்பு மாதிரியே...

சின்ன‌ குழ‌ந்தைக‌ள் ரெட்டை வால்த‌ன‌ம் ப‌ண்ணினால் தான், வீடே கலகலப்பாக இருக்கும்...//

நல்லா சொன்னிங்க கோபி. அதென்னவோ வாஸ்தவம் தாங்க ,எவ்ளோ கலாட்டா பண்ணாலும் பாப்பு ஸ்கூல் போயிட்டா எப்படா evening அவ வேன் வரும்னு தான் இருக்கு ஞாபகம் எல்லாம். அதுல ஒரு சந்தோசம்.

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...

நன்றி அதுசரி...பாராட்டுக்கு ரொம்ப சந்தோசம்...நல்லா இருங்க.

September 1, 2009 1:06 AM
//

ஆசிர்வாதத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன் _/\_ :0))

Vidhoosh said...

:))/ ஆனா நாங்க தட்டாமாலை சுத்துவோம். சனி ஞாயிறே முடிலங்க... :))

[[முதல்ல என் டவுட்ட கிளியர் பண்ணுங்க மிசஸ் தேவ். மகளிர் சக்தி widget எப்படி இணைப்பது?? ]]

--வித்யா

வல்லிசிம்ஹன் said...

இதுக்குத் தான் காமிராவும் கையுமா இருக்கணும்னு சொல்றது. படம் எடுத்துப் போட்டால் நாங்களும் சந்தோஷப்படுவோமே.

KarthigaVasudevan said...

நன்றி விதூஷ் (வித்யா) (மகளிர் சக்தி விட்ஜெட் ல இணைக்கறது ரொம்ப ஈசி, கொஞ்சம் உடல்நிலை ஒத்துக்கலை நெட்ல உட்கார்ந்த அம்மா திட்றாங்க,ரெண்டு நாள்ல சரி ஆயிடும் வந்து சொல்றேன்.

KarthigaVasudevan said...

நன்றி வல்லிம்மா ...(என்னவோ அப்போ தோணலை...இனிமேல் மிஸ் பண்ண மாட்டோம்ல ; :)

KarthigaVasudevan said...

நன்றி அமித்து அம்மா ( ம்ம்...இன்னும் சிலர் காண்டக்ட் ல தான் இருக்காங்க அமித்து அம்மா )

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க
குழந்தைகள் உலகம் அதிசயங்களால் நிரம்பியது. அவர்களோடு இருப்பது அலாதியான சுகம்.