Monday, August 3, 2009

இருளும் இனியதே?!


இழுத்து இழுத்து
போர்த்தினாலும்
தொடரும் பகலால்
உரிக்கப் பட காத்திருக்கும்
கன்னங்கரிய துப்பட்டி ...
இருட்டு ;
வெளிச்சப் பொட்டுக்கள்
திகட்டும் போது
ஒவ்வொருநாளும்
மீளும் சொர்க்கம்
இருள் ...
இனியதே !?
Note: படம் கூகுளில் இருந்து எடுத்து பயன்படுத்தப் பட்டது ,நன்றி கூகுள்.

8 comments:

நட்புடன் ஜமால் said...

ஆம்!

வெளிச்சம் என்று ஒன்றை நமக்கு அடையாளம் காட்டுவதே

இருள் தான் ...

துபாய் ராஜா said...

//இழுத்து இழுத்து
போர்த்தினாலும்
தொடரும் பகலால்
உரிக்கப் பட காத்திருக்கும்
கன்னங்கரிய துப்பட்டி ...
இருட்டு ;//

அருமை.அருமை.

//வெளிச்சப் பொட்டுக்கள் திகட்டும் போது ஒவ்வொருநாளும் மீளும் சொர்க்கம் இருள் ... இனியதே//

நிச்சயம் இனிக்கும் சொர்க்கமே.

கவிதைக்காற்று தொடர வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இழுத்து இழுத்து போர்த்தினாலும் தொடரும் பகலால் உரிக்கப் பட காத்திருக்கும்

ரசித்த வரிகள்

KarthigaVasudevan said...

நன்றி ஜமால் :)

நன்றி துபாய் ராஜா :)

நன்றி அமித்து அம்மா :)

அன்புடன் அருணா said...

அட..நல்லாருக்கே!!!

வண்ணான் said...

கூகுலுக்கெல்லம் நன்றி சொல்லுவாங்களா..?

:)


கூகுள் நம்ப வீடு மாதிரி :)

KarthigaVasudevan said...

நன்றி அன்புடன் அருணா

அப்படியா முருகேசன் ?! நீங்க சொன்னா சரி தான்.

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குங்க. இருட்டு நல்ல விசயம்தான் எங்கள மாதிரி சனங்களுக்கு