Wednesday, April 1, 2009

"மனமெனும் தோணி பற்றி ..."



"மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
ஒற்றியூர் உடைய கோவே "

இது ஒரு செய்யுள் ...இதுல கடைசி வரியில வர்ற ஒற்றியூர் இப்போ நம்ம சென்னைக்கு பக்கம் இருக்கற திருவொற்றியூர் தானான்னு ஒரு சின்ன குழப்பம் .தெரிஞ்சவங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க.

சரி இனி செய்யுளுக்கு பொருள் விளக்கம் பார்க்கலாம்.
சிம்பிள் தத்துவம் தான். வாழ்க்கை ஒரு கடல்னு தான் எல்லா தத்துவ ஞானிகளும் சொல்லிட்டு போயாச்சே ;அதே கான்செப்ட் தான் இங்கயும்.

மனம் என்கிற தோணியில் ஏறி அறிவு எனும் கோலை ஊன்றி கோபம் என்கிற சரக்கை ஏற்றிக் கொண்டு வாழ்க்கையாகிய செறிந்த கடலுக்குள் பயணப்படும் போது மனனெனும் (அறியாமை எனும் ) பாறை குறுக்கிட அதில் மோதி மரிக்கும் நிலை வருகையில் ஒற்றியூரில் வீற்றிருக்கும் கோவே (கோ என்ற சொல் வேந்தனையும் குறிக்கும் தெய்வத்தையும் குறிக்கும்) இங்கே தெய்வம் என்று கொள்ளலாம் .

மரிக்கும் போதாவது தெய்வமே உன்னை நினைக்கும் பெரும்பேற்றை எனக்குத் தருவாயாக என்று இப்பாடலாசிரியர் மனம் உருகி பாடுகிறார்.
செய்யுளின் தரம் எத்தனை அருமை பாருங்கள்.நான்கே வரிகளில் அழுத்தமான வாழ்க்கை தத்துவம்.பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு மறவாமல் மனதில் பதிந்த செய்யுள் வரிகளில் இது முதன்மையானது.

6 comments:

வல்லிசிம்ஹன் said...

தெரியவில்லையே ம்மா.
பாடல் அற்புத மாக இருக்கிறது. கட்டாயம்ம், தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்.

அபி அப்பா said...

சூப்பர்!

ராமலக்ஷ்மி said...

செய்யுளும் அருமை. விளககமும் நன்று.

KarthigaVasudevan said...

நன்றி வல்லிம்மா ...(யாரு வந்து சொல்லப் போறாங்கன்னு பார்போம்?!)

நன்றி அபிஅப்பா ... :)

நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது திருவொற்றியூர் தான்
இது தேவாரப்பதிகம்
அப்பர் எழுதியது. நான்காம் திருமுறை..
எங்க தாத்தா (தேவார ஆசிரியர்) இந்த பாட்டை உருக்கமா பாடி சிடி இருக்கு என்கிட்ட..

அமிர்தவர்ஷினி அம்மா said...

செய்யுளை விளக்கிய விதம் அருமை.