Thursday, January 8, 2009

பட்...பட்...பட்..பட்...பட்டாம்பூச்சி...சிட்டாகப் பறக்கும் சிறகை தந்தது யாரு?

பொதுவில் நீண்ட நாட்களாக எழுதி வந்தாலும் வலை உலகத்திற்கு நான் புதிதே,யார் என் வலைப் பக்கம் வந்தாலும் என் எழுத்துக்களை வாசித்து பின்னூட்டமிட்டால் போதும் என்றிருந்தநிலையில் அன்புடன் அருணா "பட்டாம்பூச்சி விருதே" கொடுத்து அசத்தி விட்டார்.
மிக்க நன்றி அன்புடன் அருணா .(அருணா உங்களுக்கு தான் என்ன ஒரு அன்பு !)
இப்போது என் டவுட் என்னவென்றால் நான் இந்த விருதை இன்னும் மூன்று பேருக்குத் தர வேண்டுமென்றால் அவர்களை எப்படி பரிந்துரைப்பது? விருது கொடுத்தவர்களே இதையும் சொல்லி விட்டால் தேவலை !
இல்லாவிட்டால் இந்த விருதைப் பெற்ற புண்ணியகோடிகள் யாரேனும் செயல்முறை விளக்கம் தந்து உதவுங்கள் மக்களே!அப்புறம் எனக்குத் தெரிஞ்ச வலைப் பதிவர்கள் எல்லாருமே எனக்கு முந்தியே பட்டாம்பூச்சி ஆயிட்டாங்க போல இருக்கே?யாருக்குத் தான் இனி விருது தரதாம் ?அதையும் கூட யாராச்சும் சொல்லிட்ட நல்லாத்தான் இருக்கும்.
அதோடு இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் ,தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு இந்த இடத்தில் நான் எனது நன்றிகளைச் சொல்லிக் கொண்டே ஆக வேண்டும்.
நட்புடன் ஜமால்,சந்தனமுல்லை,அன்புடன் அருணா,அமித்து அம்மா,டாக்டர். சுரேஷ் ,தேவன்மயம்,குடுப்பை அண்ணாச்சி,அதுசரி,அப்புறம் (ரீஜண்டாஅபிஅப்பா),நம்ம துளசி டீச்சர்,தங்கமணி புகழ் தாமிரா அண்ணன்,பூர்ணிமாசரண், சின்ன அம்மிணி எல்லோருக்கும் எனது நன்றிகள் பல .
.


10 comments:

அபி அப்பா said...

வாழ்த்துக்கள்!!

குடுகுடுப்பை said...

நீண்ட நாளா எழுதர நீங்க அக்காவா நான் அண்ணனா? ஒரே டவுட்டா இருக்கு.


குடுகுடுப்பை.

பாண்டித்துரை said...

வாழ்த்துகள்

வபூ




தூரிகையை எடுத்துக்கொண்டு

வரைய ஆரம்பிக்கிறாள்

விழிகளில் கண்ணீர்துளி

விரல்களில் அபிநயம் என்று

இவளின் ஓவியத்தில் மட்டும்

அழுகையும் புன்னகையும்

எனக்கு அழகாய் தெரிகிறது

பூச்சாண்டி மாமா

யானைக்கார தாத்தா என்று

இவளது ஓவியத்தை

எளிதில் புரிந்து கொள்ளமுடிவதில்லை

உலகினிள் உயிர்ப்புடையது

இவளது ஓவியம் மட்டுமே

கை கால்களை அசைக்கிறது

கண் சிமிட்டுகிறது

சிரிப்பு சிணுங்கல் சப்தமாக

மனதில் மகிழ்ச்சியை கொடுத்து

பறந்து செல்கிறது

வண்ணத்து பூச்சியாய்

அசையும் ஓவியம்

வபூ
பாண்டித்துரை

KarthigaVasudevan said...

//பாண்டித்துரை said...

வாழ்த்துகள்

வபூ




தூரிகையை எடுத்துக்கொண்டு

வரைய ஆரம்பிக்கிறாள்

விழிகளில் கண்ணீர்துளி

விரல்களில் அபிநயம் என்று

இவளின் ஓவியத்தில் மட்டும்

அழுகையும் புன்னகையும்

எனக்கு அழகாய் தெரிகிறது

பூச்சாண்டி மாமா

யானைக்கார தாத்தா என்று

இவளது ஓவியத்தை

எளிதில் புரிந்து கொள்ளமுடிவதில்லை

உலகினிள் உயிர்ப்புடையது

இவளது ஓவியம் மட்டுமே

கை கால்களை அசைக்கிறது

கண் சிமிட்டுகிறது

சிரிப்பு சிணுங்கல் சப்தமாக

மனதில் மகிழ்ச்சியை கொடுத்து

பறந்து செல்கிறது

வண்ணத்து பூச்சியாய்

அசையும் ஓவியம்

வபூ
பாண்டித்துரை/

வாழ்த்துக்களுக்கும் முதல் வருகைக்கும் நன்றி பாண்டித்துரை.
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது,ஆனால் அதை இங்கே பின்னூட்டமிட்டிருப்பது தான் புரியவில்லை,நீங்கள் வண்ணத்துபூச்சியைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்,அதை தனியாக ஒரு பதிவே போடலாமே?ஏன் இங்கே கவிதை?

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...
வாழ்த்துக்கள்!!//

நன்றி அபிஅப்பா

KarthigaVasudevan said...

//குடுகுடுப்பை said...

நீண்ட நாளா எழுதர நீங்க அக்காவா நான் அண்ணனா? ஒரே டவுட்டா இருக்கு.//

ரொம்ப வயசானவங்க தான் நீண்ட நாளா எழுதுவாங்களா என்ன? என்னையா டவுட் இது?

அக்காவா...தங்கச்சியா எப்படி அழைத்தாலும் எனக்கொன்னும் ஆட்சேபனை இல்லை .ஆனா உங்க வயசையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணனுமே குடுகுடுப்பை அண்ணா! 30 பிளஸ்னா நான் அண்ணானு தாராளமா சொல்லலாம் தானே!

அன்புடன் அருணா said...

//இன்னும் மூன்று பேருக்குத் தர வேண்டுமென்றால் அவர்களை எப்படி பரிந்துரைப்பது? விருது கொடுத்தவர்களே இதையும் சொல்லி விட்டால் தேவலை ! //

உங்களுக்குப் பிடித்த மூன்று வலைப்பூக்களைத் தேர்வு செய்யுங்கள்.
அவர்களுக்கு உங்கள் பதிவில் இணைப்புக் கொடுங்கள்....அவ்வ்ளோதான்....okva?
வேற ஏதும் doubtனா கேளுங்கள்....அதான் doubtனு பேர் வச்சுருக்கீங்களே??
அன்புடன் அருணா

Thamira said...

எனக்கு நன்றி சொன்னதுக்கு ஒரு நன்றி.! தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்.!

KarthigaVasudevan said...

//அன்புடன் அருணா said...
//இன்னும் மூன்று பேருக்குத் தர வேண்டுமென்றால் அவர்களை எப்படி பரிந்துரைப்பது? விருது கொடுத்தவர்களே இதையும் சொல்லி விட்டால் தேவலை ! //

உங்களுக்குப் பிடித்த மூன்று வலைப்பூக்களைத் தேர்வு செய்யுங்கள்.
அவர்களுக்கு உங்கள் பதிவில் இணைப்புக் கொடுங்கள்....அவ்வ்ளோதான்....okva?
வேற ஏதும் doubtனா கேளுங்கள்....அதான் doubtனு பேர் வச்சுருக்கீங்களே??
அன்புடன் அருணா//

அப்படியே ஆகட்டும் அன்புடன் அருணா...

KarthigaVasudevan said...

// தாமிரா said...

எனக்கு நன்றி சொன்னதுக்கு ஒரு நன்றி.! தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள்.!
//
நன்றி தாமிரா ...