Monday, January 12, 2009

பூ வாசம்...!

என்ன வாழுது

சந்நிதிக் கருவறையில் ...?

விழி

மூடிக் கிறங்கச்

செய்யும்

ஏதோ ஒரு

பூ வாசம்

சுண்டி இழுக்க

நட்ட நடு

சூலின் வழியே

பூவிதழ் விலக்கி

காற்றாய் வழுக்கி

தண்டில் நழுவி

சல்லி வேர்...

தூவி வேர் ...

தேடிப் பதுங்கி

விளிம்பில் நின்று

துளித்துளியாய்

நீர் உறுஞ்சும்

வித்தை காண

நெடு நாளாய்க்

காத்திருக்கிறேன்;

மோனம் வயப் படவில்லை ...!

என்ன வாழுது

சந்நிதிக் கருவறையில்?!

5 comments:

வீ. எம் said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சினிமா விமர்சனம்?

அபி அப்பா said...

enakkum puriyalaippaa!

வல்லிசிம்ஹன் said...

ஒரு அழகான பூவை நேரில் பார்த்து வாசம் முகர்ந்த உணர்வு.

ஆறு சக்ரங்களச் சொல்லுகிறீர்களா.
இல்லை???

அது சரி(18185106603874041862) said...

ஒண்ணியும் பிரியலீங்களே :0))) ஆனா பின்நவீனத்துவத்துல பின்னி எடுக்கறீங்க :0)))