Showing posts with label ஹரிணி. Show all posts
Showing posts with label ஹரிணி. Show all posts
Friday, January 13, 2012
எக்ஸ்கியூஸ் மீ ...
பேருந்தில் இன்றைக்கும் ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் பார்த்தேன் அதன் அம்மாவோடு .எனக்கு இடது பக்கம் ஒரு சீட் முன்னாள் உட்கார்ந்திருந்தார்கள்,அதன் அம்மா' பூப் பூவாய் பூத்திருக்கு' படத்தின் அமலாவைப் போல நிறை அழகு ,ஒற்றைக் கல் சிவப்பு மூக்குத்தியில் அவள் வெற்றுப் பார்வையில் கூட வாத்சல்யம் ததும்பி வழிந்தது .
பாப்பாவுக்கு நாவற்பழ நிறத்து சின்ட்ரெல்லா கவுன் அதில் சந்தன நிறத்துப் ப்ரில் வொர்க் பிரி பிரியாய் ஜன்னலில் கசிந்த காற்றுக்கு அவளது சுருட்டை முடிக் கொண்டையோடு சேர்ந்து அசைந்தது அந்த நேரத்தில் ரொம்பத் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துப் போகும் அப்படி ஒரு துறு துறுப்பு.
குட்டிக் குட்டிப் பிஞ்சுக் கைகளில் மெகந்தி இட்டிருந்தாள் அதை தூக்கி அதன் அம்மாவின் முகத்துக்கு நேர நீட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள் ,அதன் அம்மா அதன் விரல்களைப் பற்றி வலிக்காது மடக்கி 1 ,2 ,3 ...சொல்லிக் கொடுப்பது என் இருக்கையில் இருந்து பார்க்க அபூர்வமான ஓவிய அழகு .
செம்பஞ்சாய் சிவந்து பவளமாய் மின்னிய பாப்பாவின் குண்டு குண்டு விரல்களையும் பக்கவாட்டில் மாம்பழம் போல பளபளத்த பளிங்குக் கன்னத்தையும் பார்க்கப்பார்க்க அதன் அம்மாவிடம் எக்ஸ்கியூஸ் மீ கேட்டு அவளைத் தூக்கி என் நிறுத்தம் வரும் வரை மடியில் வைத்துக் கொண்டால் என்ன என்று ஆசை ஆசையாய் இருந்தது .
அதற்குள் எனது நிறுத்தம் வந்து விட்டதால் ...
இறங்கி கீழே நின்று கொண்டு பேருந்து என்னைக்கடக்கும் வரை அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
நடந்து வரும் போது தோன்றியது
"குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம் "
//என் ஹரிணி பின்னாட்களில் வாசிப்பதற்கான சேமிப்பு //
Saturday, August 28, 2010
பென்சில் மேனியா...
சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம்,ஹரிணி சொன்னா ,அவளுக்கு இருக்காம்.இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம்.
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
நேத்து காலைல சின்ன ஸ்கேல் நீளத்துக்கு அழகா துருவி கொடுத்து விட்ட பென்சில் ஸ்கூல் விட்டு வந்தோடனே பேக்ல செக் பண்ணா அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது.i was shocked .
இன்னைக்கும் அதே தான் ...i was shocked ...
இது தப்பான வழக்கமாச்சேன்னு ...
ரொம்ப நேரம் இப்படிலாம் சும்மா சும்மா துருவினா பென்சில் God கிட்ட போய் அழும்,என் முனை எல்லாம் ஷார்ப் பண்ணி ஷார்ப் பண்ணி புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல அழுத்தி அழுத்தி அந்த ஹரிணி பாப்பா உடைச்சு உடைச்சு விடறா அப்புறம் திருப்பி பென்சில் ஷார்ப்பாவே இல்லை...ஷார்ப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு துருவிகிட்டே இருக்கா ...எனக்கு வலிக்குதே...ஐயோ God எனக்கு வலிக்குதேன்னு உன்னை பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
ம்ம்...நிஜமாவான்னு கொஞ்ச நேரம் எம்மூஞ்சியவே பார்த்துட்டு இருந்துட்டு ...
God நல்லவர் ஒன்னும் பண்ண மாட்டார் , அம்மா நீ பொய் தான சொல்றன்னா...
இல்ல நிஜம்மா தான் ,நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை மிட்நைட் ல பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாருன்னேன் .
நீ வேணா ட்ரை பண்ணி பாரேன்னா
எதை ட்ரை பண்ண?
நான் எதுக்கு பென்சில் துருவினேன் ஷார்ப்பா இல்லைன்னு தான ? பென்சில் ஏன் ஷார்ப்பா இல்லை முனை உடைஞ்சதால தான?
ம்ம் ...
முனை ஏன் உடைஞ்சது ?
ஏன் ?
நான் புல்ஸ்டாப் வச்சதால தான ?
ம்ம்...
நீயும் புல்ஸ்டாப் வச்சுப் பாரும்மா?
எதுக்கு?
நீ வை நான் சொல்றேன்.
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து fill ups மட்டும் எழுதிக் கொடுத்தேன் ,பத்து புல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது .
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி புல்ஸ்டாப் வைத்ததில் பத்து முறை முனை உடைந்தது.பென்சிலை பத்து முறை துருவினேன் .
சரி..சரி போதுமென்றாள்.
நோட் புக்கை மூடி வைத்தேன் . இப்ப புரிஞ்சதா ? இனிமே இப்டி சும்மா சும்மா பென்சில் துருவி துருவி போட்டு ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி ஆக்க மாட்டயில்ல ?
ம்ம்...மம்மி இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லு ?
என்னது?
ஆமாம் நீயும் தான பென்சில் துருவி துருவி உடைச்ச ,உன்னையும் சேர்த்து தான பயமுறுத்தும் ,அப்படின்னா பரவாயில்லை .பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லு ...be quick .
ங்கே ! ( நான் தான்)
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!
இதற்குப் பெயரும் பல்பென்று சொல்லத் தகுமோ?!
Labels:
அனுபவம்,
என் மகள்,
பகிர்வு,
பென்சில்மேனியா,
ஹரிணி
Wednesday, June 30, 2010
தேவதை சொல்லும் கதைகள் - 1

நானே எவ்ளோ நாளைக்கு உனக்கு கதை சொல்லிட்டிருப்பேன் ,இனிமே நீயும் அம்மாக்கு கதை சொல்லணும் .
ம்ம்...நானா ...ம்ம்...சரி இப்ப புதூ...சா பெரீசாஒரு கத சொல்லப் போறேனே ...நீ கேட்கறயா? (ஓரக்கண்ணால் என்னைக் கொஞ்சம் கீழ்ப் பார்வை பார்த்துக் கொண்டே ரோஜாப் பூக்கள் குவிந்து (அதாங்க உதடுன்னு சொல்வாங்க இல்ல அதான் :))) சிரிப்பதைப் போன்ற பாவனையில் ;
ஒன்ன விட நான் சூப்பரா கத சொல்வேன் தெரிமா ...ஒனக்கு தெரியாதில்ல !
ம்ம்...சரி நீ கதய சொல்லுக்கா மொதல்ல...
நான் ஒனக்கு அக்காவா?
இல்ல..இல்ல தப்பாச் சொல்லிட்டேன் பார்...சொல்லுங்க மாமியாரே ....
ஏய் அம்மா ...நான் அப்புறம் பாட்டிகிட்ட சொல்லிக் கொடுத்துருவேன் ஒன்ன ...
சின்னதாய் கோபித்துக் கொண்டவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ...போ நீ கதை சொல்லாம என்ன ஏமாத்தப் பாக்கற. நான் உன் பேச்சு கா. எங்கே மறுபடி என்னையே கதை சொல்லச் சொல்லி அடம் பண்ணப் போகிறாளோ என்று கிச்சனுக்குள் எஸ்கேப் ஆகப் பார்த்தால் ...
விடுவேனா என்று பின்னோடு வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு ;
பழம் விடு...அப்போ தான் கதை இல்லனா உதை தான் என்று ரைமிங்காய் சிரித்தாள்.
ஒருவழியாய் இலை விட்டு...காய் விட்டு பழம் விட்டு கதை ஆரம்பமானது.
ஒரு ஊர்ல ஒரு பெரீ.....ய அடர்ந்.......த கா.........டு இருந்துச்சாம் ,அந்தக் காட்டுக்குள்ளா ஒரு பெரிய சூனியக்காரி இருந்தாளாம்.அவ ரொம்பக் கெட்ட பொண்ணாம்
சூனியக்காரிய அந்தக் காட்டுல்ல இருந்த நல்லவங்க எல்லாம் சாபம் போட்டு கொன்னுட்டாங்களாம்.
அப்போ என்ன ஆச்சு தெரிமா ?!
என்ன ஆச்சுடா...குட்டி ?
அந்த சூனியக்காரி இருக்கா இல்ல ..அவளோட மூதாதேவிங்க (ங்ஹே !!! மூதாதேவிங்களா !!!)
மூதாதேவிங்களா ?! அவங்க யாருடா ?
இது கூடத் தெரிலையா ஒனக்கு. அவங்க தான் அந்த சூனியக் காரியோட மூதாதேவிங்க அவங்க வந்து ஒரு நல்ல பையன் இறந்து போகப் போவானா அப்போ அந்த நல்ல பையனோட உயிரை எடுத்து இந்த சூனியக் காரிக்குள்ள வச்சு மூடிடுவாங்க ,அப்புறம் அவளுக்கு அந்த பையனோட உயிர் வந்துடுமாம்.
ம்ம் ...அதெல்லாம் சரி...இந்த மூதாதேவிங்கன்னா ...!!!
இரும்மா கதைய சொல்ல விடு ...சும்மா...சும்மா கொஸ்டீன் கேட்டுட்டே இருக்க நீ?
கொஞ்சம் போல சிடுசிடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சிணுங்க கோபத்தில் கூட என் மகள் அழகு தான் என்று நான் மயங்கிப் போய் சரி சரி விடு ஆப்டர் ஆல் ஒரு மூதாதேவிங்க இதுக்கு போய் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுகிட்டு என்று பேசாமல் ம்ம்..கொட்டினேன் .
அப்புறம் என்ன ஆச்சு சொல்லு ...
அப்ப்புறமா அந்த சூனியக்காரிக்கு உயிர் வந்தோட்ன்னே ...அவ அந்தக் காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு அந்த புல்லு வீடு வேர்த்து போச்சு .
வேர்த்துப் போச்சா ஏன் புல்லு வீடு குளு குளுன்னு இருக்காதா !? மறுபடியும் நமக்கு வாய் சும்மா இருக்குமா !?
ம்மா ...நீ சும்மா கதைக் கேளேன் ..தொல்லை பண்ணாத கத சொல்லும் போது...
"அது வந்து வேர்த்து இல்ல வெர்த்து (வெறுத்து)போச்சு புல்லு வீடு அந்த சூனியக்காரிக்கு ."
இரு...இரு புல்லு வீடுன்னா ?!
புல்லு தெரியாதா அது வந்து கோல் வீடு ! (மறுபடியும் "ங்ஹே " கோல் வீடா ...அப்படிலாம் வீடிருக்கா ! நான் குழம்ப !
கோல்னா வைக்கோல் ... வைக்கோல் வீடு ...இது கூட தெரியாதா ! போம்மா
ஓ...அப்டியா ...சரி சரி கோச்சிக்காதடா...நீ மேலே சொல்லு கதைய ;
அந்த புல்லு வீடு அவளுக்கு வெர்த்து போச்சா ....அப்பறமா அவளுக்கு ராஜ்யத்தையே கட்டி ஆளனும்னு ஒரு ஆச வந்துச்சாம் .
இப்ப காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்கானு தான மொதல்ல சொன்ன !
அய்யோ...அது வேற ராஜ்ஜியம்...இது வேற ராஜ்ஜியம் ...இங்க ராஜா ,ராணி...நம்மள மாதிரி மனுசங்க எல்லாம் இருப்பாங்க .
ஓ ...
ராஜ்யம்னா பெரீ...ய கோபுரம் மாதிரிலாம் இருக்கும் ,தங்க கலர்ல பெயின்ட்லாம் அடிச்சிருக்கும் ,பாத்துருக்க இல்ல நீ ?
ம்ம்...பார்த்திருக்கேன். ஆனா ...எங்க ...எப்போ !
ம்ம்...ராஜா..ராணிலாம் இருப்பாங்க இல்ல அங்க அந்த கோபுரம் (ஓ ..அரண்மனையாக்கும் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் )
அந்த ராஜ்யத்தை கட்டி ஆளனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சாம்.
ம்ம்...
அப்போ அவளுக்கு மூளையே இருக்காதில்ல !
திடீரென்று இந்தக் கேள்வி வந்து விழவே ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று நான் குழம்ப. அவளே தொடர்ந்தாள். அதற்குள் அவளுக்கு தூக்கம் வந்து விட்டிருந்தது கண்கள் மெல்லச் சொருக ...
சூனியக்.........காரிக்கு..........எல்லாம் மூ.........ளை.......யே இருக்காது..அவங்க எல்..........லாம் முட்டாள்........களாம் சுட்டி டி.வி ல சொன்னாங்க (அப்டியா...நிஜமா அப்டி சொன்னாங்கலாங்க?!)
நம்மள மாதிரி மனுசங்க தான் புத்திசாலிங்களா........ம்ம் .
சூனியக்காரிக்குள்ள நல்ல பையனோட உயிர் ஆவிய உள்ள வச்சு மூடிட்டாங்க இல்ல அவளோட மூதாதேவிங்க !!! (மறுபடியும் மூதாதேவிங்க!!!) அதனால அவ புத்திசாலி ஆயிட்டா.
ம்ம்...ஆமா இந்த மூதாதேவிங்கனா !
தூ...க்கம்வருது...
கழுத்தைச் சுற்றி பிஞ்சுக் கை மாலையாக ;
இடுப்பை வளைத்து கால்கள் ஒட்டியாணமாய் இறுக்கிக் கொள்ள ;
சரி ...சரி தூங்குடா ... இரு ..இரு ...ஆமாம் ...இந்த மூதாதேவிங்கன்னா யாரு?
தூக்கம் ..தூக்கமா வருது ... இந்தா பார் அம்மா நீ என் தூக்கத்தை கலைக்காதா .
கப் சிப் ...பேச்சில்லை .(அதற்கு மேலும் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்ப நான் என்ன லூசா ?!)
ஆனாலும் இந்த மூதாதேவி ரொம்பவே குழப்ப கிட்டத் தட்ட அரைமணி பலவாறாக யோசித்த பின் ஒருவாறாக புரிந்தது .
அட மூதாதையர்கள் என்று சொல்லத் தெரியாமல் தான் குழந்தை அதை மூதாதேவிகள் என்று சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன் நானும்.
ம்ம்...நானா ...ம்ம்...சரி இப்ப புதூ...சா பெரீசாஒரு கத சொல்லப் போறேனே ...நீ கேட்கறயா? (ஓரக்கண்ணால் என்னைக் கொஞ்சம் கீழ்ப் பார்வை பார்த்துக் கொண்டே ரோஜாப் பூக்கள் குவிந்து (அதாங்க உதடுன்னு சொல்வாங்க இல்ல அதான் :))) சிரிப்பதைப் போன்ற பாவனையில் ;
ஒன்ன விட நான் சூப்பரா கத சொல்வேன் தெரிமா ...ஒனக்கு தெரியாதில்ல !
ம்ம்...சரி நீ கதய சொல்லுக்கா மொதல்ல...
நான் ஒனக்கு அக்காவா?
இல்ல..இல்ல தப்பாச் சொல்லிட்டேன் பார்...சொல்லுங்க மாமியாரே ....
ஏய் அம்மா ...நான் அப்புறம் பாட்டிகிட்ட சொல்லிக் கொடுத்துருவேன் ஒன்ன ...
சின்னதாய் கோபித்துக் கொண்டவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு ...போ நீ கதை சொல்லாம என்ன ஏமாத்தப் பாக்கற. நான் உன் பேச்சு கா. எங்கே மறுபடி என்னையே கதை சொல்லச் சொல்லி அடம் பண்ணப் போகிறாளோ என்று கிச்சனுக்குள் எஸ்கேப் ஆகப் பார்த்தால் ...
விடுவேனா என்று பின்னோடு வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு ;
பழம் விடு...அப்போ தான் கதை இல்லனா உதை தான் என்று ரைமிங்காய் சிரித்தாள்.
ஒருவழியாய் இலை விட்டு...காய் விட்டு பழம் விட்டு கதை ஆரம்பமானது.
ஒரு ஊர்ல ஒரு பெரீ.....ய அடர்ந்.......த கா.........டு இருந்துச்சாம் ,அந்தக் காட்டுக்குள்ளா ஒரு பெரிய சூனியக்காரி இருந்தாளாம்.அவ ரொம்பக் கெட்ட பொண்ணாம்
சூனியக்காரிய அந்தக் காட்டுல்ல இருந்த நல்லவங்க எல்லாம் சாபம் போட்டு கொன்னுட்டாங்களாம்.
அப்போ என்ன ஆச்சு தெரிமா ?!
என்ன ஆச்சுடா...குட்டி ?
அந்த சூனியக்காரி இருக்கா இல்ல ..அவளோட மூதாதேவிங்க (ங்ஹே !!! மூதாதேவிங்களா !!!)
மூதாதேவிங்களா ?! அவங்க யாருடா ?
இது கூடத் தெரிலையா ஒனக்கு. அவங்க தான் அந்த சூனியக் காரியோட மூதாதேவிங்க அவங்க வந்து ஒரு நல்ல பையன் இறந்து போகப் போவானா அப்போ அந்த நல்ல பையனோட உயிரை எடுத்து இந்த சூனியக் காரிக்குள்ள வச்சு மூடிடுவாங்க ,அப்புறம் அவளுக்கு அந்த பையனோட உயிர் வந்துடுமாம்.
ம்ம் ...அதெல்லாம் சரி...இந்த மூதாதேவிங்கன்னா ...!!!
இரும்மா கதைய சொல்ல விடு ...சும்மா...சும்மா கொஸ்டீன் கேட்டுட்டே இருக்க நீ?
கொஞ்சம் போல சிடுசிடுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சிணுங்க கோபத்தில் கூட என் மகள் அழகு தான் என்று நான் மயங்கிப் போய் சரி சரி விடு ஆப்டர் ஆல் ஒரு மூதாதேவிங்க இதுக்கு போய் குறுக்க குறுக்க கேள்வி கேட்டுகிட்டு என்று பேசாமல் ம்ம்..கொட்டினேன் .
அப்புறம் என்ன ஆச்சு சொல்லு ...
அப்ப்புறமா அந்த சூனியக்காரிக்கு உயிர் வந்தோட்ன்னே ...அவ அந்தக் காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு அந்த புல்லு வீடு வேர்த்து போச்சு .
வேர்த்துப் போச்சா ஏன் புல்லு வீடு குளு குளுன்னு இருக்காதா !? மறுபடியும் நமக்கு வாய் சும்மா இருக்குமா !?
ம்மா ...நீ சும்மா கதைக் கேளேன் ..தொல்லை பண்ணாத கத சொல்லும் போது...
"அது வந்து வேர்த்து இல்ல வெர்த்து (வெறுத்து)போச்சு புல்லு வீடு அந்த சூனியக்காரிக்கு ."
இரு...இரு புல்லு வீடுன்னா ?!
புல்லு தெரியாதா அது வந்து கோல் வீடு ! (மறுபடியும் "ங்ஹே " கோல் வீடா ...அப்படிலாம் வீடிருக்கா ! நான் குழம்ப !
கோல்னா வைக்கோல் ... வைக்கோல் வீடு ...இது கூட தெரியாதா ! போம்மா
ஓ...அப்டியா ...சரி சரி கோச்சிக்காதடா...நீ மேலே சொல்லு கதைய ;
அந்த புல்லு வீடு அவளுக்கு வெர்த்து போச்சா ....அப்பறமா அவளுக்கு ராஜ்யத்தையே கட்டி ஆளனும்னு ஒரு ஆச வந்துச்சாம் .
இப்ப காட்டையே கட்டி ராஜ்ஜியம் பண்ணிட்டு இருக்கானு தான மொதல்ல சொன்ன !
அய்யோ...அது வேற ராஜ்ஜியம்...இது வேற ராஜ்ஜியம் ...இங்க ராஜா ,ராணி...நம்மள மாதிரி மனுசங்க எல்லாம் இருப்பாங்க .
ஓ ...
ராஜ்யம்னா பெரீ...ய கோபுரம் மாதிரிலாம் இருக்கும் ,தங்க கலர்ல பெயின்ட்லாம் அடிச்சிருக்கும் ,பாத்துருக்க இல்ல நீ ?
ம்ம்...பார்த்திருக்கேன். ஆனா ...எங்க ...எப்போ !
ம்ம்...ராஜா..ராணிலாம் இருப்பாங்க இல்ல அங்க அந்த கோபுரம் (ஓ ..அரண்மனையாக்கும் மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் )
அந்த ராஜ்யத்தை கட்டி ஆளனும்னு அவளுக்கு ஆசை வந்துச்சாம்.
ம்ம்...
அப்போ அவளுக்கு மூளையே இருக்காதில்ல !
திடீரென்று இந்தக் கேள்வி வந்து விழவே ஆமாம் என்று சொல்வதா இல்லை என்று சொல்வதா என்று நான் குழம்ப. அவளே தொடர்ந்தாள். அதற்குள் அவளுக்கு தூக்கம் வந்து விட்டிருந்தது கண்கள் மெல்லச் சொருக ...
சூனியக்.........காரிக்கு..........எல்லாம் மூ.........ளை.......யே இருக்காது..அவங்க எல்..........லாம் முட்டாள்........களாம் சுட்டி டி.வி ல சொன்னாங்க (அப்டியா...நிஜமா அப்டி சொன்னாங்கலாங்க?!)
நம்மள மாதிரி மனுசங்க தான் புத்திசாலிங்களா........ம்ம் .
சூனியக்காரிக்குள்ள நல்ல பையனோட உயிர் ஆவிய உள்ள வச்சு மூடிட்டாங்க இல்ல அவளோட மூதாதேவிங்க !!! (மறுபடியும் மூதாதேவிங்க!!!) அதனால அவ புத்திசாலி ஆயிட்டா.
ம்ம்...ஆமா இந்த மூதாதேவிங்கனா !
தூ...க்கம்வருது...
கழுத்தைச் சுற்றி பிஞ்சுக் கை மாலையாக ;
இடுப்பை வளைத்து கால்கள் ஒட்டியாணமாய் இறுக்கிக் கொள்ள ;
சரி ...சரி தூங்குடா ... இரு ..இரு ...ஆமாம் ...இந்த மூதாதேவிங்கன்னா யாரு?
தூக்கம் ..தூக்கமா வருது ... இந்தா பார் அம்மா நீ என் தூக்கத்தை கலைக்காதா .
கப் சிப் ...பேச்சில்லை .(அதற்கு மேலும் தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்ப நான் என்ன லூசா ?!)
ஆனாலும் இந்த மூதாதேவி ரொம்பவே குழப்ப கிட்டத் தட்ட அரைமணி பலவாறாக யோசித்த பின் ஒருவாறாக புரிந்தது .
அட மூதாதையர்கள் என்று சொல்லத் தெரியாமல் தான் குழந்தை அதை மூதாதேவிகள் என்று சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன் நானும்.
Labels:
அனுபவம்,
கதை நேரம்,
பகிர்வு,
பெட் டைம் ஸ்டோரீஸ்,
ஹரிணி
Saturday, May 15, 2010
ஆற்றில் இறங்கிய அழகரும் குதிரையும் ...கூடவே நானும் என் செல்ல மகளும்
விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவதென்பது என்னைப் பொறுத்தவரை வருடம் ஒருமுறை நான் கொண்டாடும் மிகச்சிறந்த விசயங்களில் ஒன்று.வருடம் முழுமைக்கும் தேவையான புத்துணர்வை அந்த ஓரிரு நாட்கள் மீட்டுக் கொடுத்து விடக்கூடும்.அதுவும் நாம் செல்லும் நாட்கள் திருவிழாக் காலங்களாக இருந்து விட்டால் விட்டுப் போன நட்புகளை சொந்தங்களை மெனக்கெட்டு தேடி அலையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் பார்த்து விடும் வாய்ப்பும் கூட.அப்படித் தான் சென்ற மாதம் நான் பிறந்த ஊரில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா என்று போயிருந்தோம் .
சித்திரையில் மதுரையில் அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிராரோ அதே நாள் அதே நேரம் தான் எங்கள் ஊர் வைகையிலும் அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்.எப்போதும் அழகர் ஆற்றில் இறங்கியதும் எங்களுக்கென்று காட்சி தருவது ஆற்றங்கரை பிரம்மாண்டமான அரச மரத்தடியில் தான். அரசின் நிழல் குறுக்கு வாட்டில் பாதி ஆற்றுக்கு கிளை விரித்திருக்கும்.சென்ற வருடம் கூட அந்த நிழலைக் கண்டேன்.இந்த வருடம் அரச மரத்தை காணோம் ,அதன் தூர் மட்டும் அனாதையாய் சில பசும் துளிர்களோடு ...அரசின் நிழலின்றி அழகரை பார்க்க பகீரென்று இருந்தது.
சிவப்பு நாக்கைத் துருத்திக் கொண்டு உருட்டி விழித்த கண்களோடு பச்சைக் குதிரையில் வெள்ளை சம்பங்கியும் பசுந்துளசியும் கலந்து கட்டிய அலங்கார மாலையில் சிங்காரமாய் பொன்னும் மணியுமாய் கல்நகைகளோடு அழகர் பவனி வருவதை காணும் போது பெற்று வளர்த்து ஐந்தாறு வயது நிரம்பிய சின்னஞ்சிறு மகனை அலங்கரித்து தெரு வழியே பெருமிதமாய் அழைத்துச் செல்கையில் கிடைக்கும் உற்சாகமும் சந்தோசமுமாய் மனம் நிறைந்து போனது.
தேனிப்பக்கம் கோடையில் கூட முன்னெல்லாம் வெயில் அத்தனை வாட்டி வதைக்கவில்லை என்றே நம்பியிருந்தேன் ,அந்த எண்ணத்தை மறக்கடிக்கும் வண்ணம் இந்த ஆண்டு வெயிலோ வெயில் கொள்ளையாய் வாட்டி எடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது.ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் புதிது புதிதாய் ...முன்னைப் போல தண்ணீர் வசதி காணோம் ,தேனியில் தண்ணீர் பஞ்சம் என்பது நான் எதிர் பாராதது.ஆனால் நிஜம் அது தான்,தேனி நகருக்குள் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி வாரம் ஒருமுறை டேங்கை நிரப்பிக் கொள்ளும் நிலை வந்து விட்டது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் அளவுக்கு தேனி இன்னும் அத்தனை வளர்ந்து விடவில்லை தான்.இன்னும் மாசு கலக்காத ஊர் என்றே அதை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நான்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்றன சமீபத்திய அதன் மாற்றங்கள்.புதிதாய் வந்த காற்றாலைகளுக்கும் தேனியின் தண்ணீர் பஞ்சத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமோ ?யாரோ சொன்னார்கள் தூத்துக்குடி திருசெந்தூர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் வர அங்கு ஏராளமாய் பெருகிப் போன காற்றாலைகளும் காரணம் என்று. காளியா பிள்ளையின் இயற்கை காற்றாலைகள் அமைத்தால் இப்படி பஞ்சம் வராமல் தடுக்கக் கூடுமோ என்றெல்லாம் சும்மா யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.நமது வருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் தானே ,அதை விட என்ன செய்து விட முடியும் என்று தெரியாத காரணத்தால் இங்கே பதிவதோடு விடுபடுகின்றன அந்தக் கவலைகள்.
வெயில் காலமென்றால் அப்பாவைப் பெற்ற பாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டுக்கு வெளியே தெரு வாசலில் மண் தரையில் பாய் விரித்து படுக்கையைப் போடுவது கிராமங்களில் சர்வ சகஜம் ,பல நாட்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும் எண்ணிக் கொண்டு கண்ணை அசத்தும் காற்றில் தெருப்பிள்ளைகளோடு விளையாடிக் களைத்த மேனி வியர்வை மெல்ல காய பாட்டி சொன்ன சுண்டெலி இளவரசி கதை கேட்டுக் கொண்டே கண்ணயர்ந்தது உண்டு.அந்த மண் தரை இப்போது எங்கேயும் இல்லை கிராமங்களில் .தெருவுக்குத் தெரு சிமென்ட் தரை ,தெரு முக்கு முடுக்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை.வீடுகள் இருக்கும் இடமெல்லாம் மண்ணின் மூச்சை இறுக்கி சிமென்ட் பூசி இருந்தார்கள்.மூச்சடக்கிய மண்ணின் சமாதி போல வெள்ளை சிமென்ட் தெருக்கள் இருந்தன.சுத்தம் பராமரிக்க எளிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடுமோ!
எது எப்படி இருந்தாலும் திருவிழாவுக்காக சிறுவர்களுக்கென்று நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அப்படி அப்படியே தான் இருந்தன இன்று வரையிலும் அதில் ஒரு சின்ன சந்தோசம்.பாப்பு கண்கள் மின்ன அம்மா நான் கலந்துக்கறேன்மா எல்லா போட்டியிலயும் என்று என்னைக் கேட்கையில் உடனே சரி சொல்லி விட்டேன்.எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டாள்...கலந்து கொண்ட அதே வேகத்தில் எல்லா போட்டிகளிலும் இருந்தும் முதல் ரவுண்டிலேயே வெளியில் வந்தாள் முகம் கொள்ளா சிரிப்போடு.அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் அம்மா தன் பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.இன்னொரு முறை சிரித்தேன் நான்.ஜெயிக்கறதா தோக்கனுமானு அவ தான் முடிவு பண்ணனும்டா ...நாம இல்லை அம்மா போகிற போக்கில் சொல்லிப் போக எந்த சிரமத்தையும் இலகுவாக எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன என ப்ராக்டிகலாக இருக்கும் என் தம்பி தங்கையின் ஞாபகம் வந்தது எனக்கு .நானும் அப்படித் தானோ! அம்மா எங்களை நன்றாகத் தான் வளர்த்திருக்கிறார்,நான் கூட பாப்புவை நன்றாகவே வளர்ப்பேன் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். :)))
எப்போதையும் போல பட்டுக் குஞ்சலக் குடை வரிசை ,தமிழ் நாட்டு மேளத்துக்குப் பதில் இப்போதெல்லாம் கேரள செண்டை தான் முழங்குகிறதாம் ஊர் திருவிழாக்களில் ,செண்டை மேளம் கேட்க கேட்க காதுக்கு இதமாகத் தான் இருந்தது.கேரளாக் காரன் பெரியார் அணையை திறந்து விட்டு தண்ணீர் தரா விட்டால் போகிறான் செண்டை மேலமாவது காதாரக் கேட்டுக் களிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டவர்களைப் போல எடுத்ததற்கெல்லாம் செண்டை தான்.சென்ற வருடம் பாப்புவின் பள்ளியில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம் அங்கேயும் சக்கைப் போடு போட்டது இந்த செண்டை வாத்தியம் தான்.என்னமாய் உயிரைக் கொடுத்து வாசிக்கிறார்கள் அந்த இளைஞர்கள் ! எப்படியெல்லாம் லாவகமாய் வளைந்து ஆடுகிறார்கள்! வாசிப்புக்கும் ஆட்டத்துக்கும் இடையில் என்னவெல்லாமோ வித்தைகள் வேறு ஓணம் படகுப் போட்டியை செண்டை மேளத்தோடு மேடையில் ஆட்டத்தோடு நடத்திக் காட்டுகிறார்கள்,மகாராஜா யானையில் பவனி வருவதையும் இதே ஸ்டைல் ஆட்டமாய் மேடையில் செய்து காட்டுகிறார்கள்.பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு செண்டை ஓசையில் சன்னதம் வந்து ஆடாத குறை தான்.
வாத்திய இசையில் மயங்கிக் கிறங்கிப் போன சிலர் ஆடவும் செய்தார்கள், பொது இடங்களில் மக்கள் இப்படி தங்கள் சந்தோசங்களை மீட்டெடுக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய கனிமொழி அவர்களின் முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே.திருவனதபுரம் பத்மனாபருக்கு மட்டும் தான் செண்டை முழங்க வேண்டுமா எனக்கில்லையா என்பதைப் போல ...இப்போதெல்லாம் எங்கள் ஊர் வைகையில் இறங்கும் அழகரும் செண்டை மேளம் தான் கேட்கிறார் போலும்!இரண்டு நாள் திருவிழா முழுக்க செண்டை அதிர்ந்து நாடி நரம்புகளை முறுக்கி பிறகு தளர வைத்தது.
பிறகென்ன என்கிறீர்களா? நல்ல கோடையில் ஆற்றில் வந்திறங்கும் அழகரின் பிரசாதமாக நாட்டுச் சர்க்கரையும் துளசி தீர்த்தமும் தான் ஊர் பொதுவில் வழங்குவது வழக்கம்,இம்முறை யாரோ ஜமாய் ஐஸ் க்ரீம் இலவசமாக வழங்கினார்கள்,அந்த இடம் முழுக்க கூட்டம் குறையவே இல்லை.ஆளாளுக்கு நான்கு ஐந்து என்று வாங்கி வாங்கி வெயிலுக்கு வகையாய் முழுங்கிக் கொண்டிருந்தார்கள்(தோம்). "பாப்பு நீ கூட்டத்துல இடிச்சிட்டு போய் ஐஸ் கிரீம் வாங்காத..யாராவது தள்ளி விட்ரப் போறாங்க ..." நான் அவசரமாய் சொல்லச் சொல்ல கேட்காமல் கூட்டத்துக்குள் புகுந்து பயத்தோடு நான் பார்த்துக் கொண்டிருக்க எனக்கொன்றும் அவளுக்கொன்றுமாக இரண்டு ஐஸ் க்ரீம் வாங்கி கொண்டு வந்தாள் பாப்பு. "ஏண்டா மம்மி உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்ததே இல்லையா ? ஏன் இப்டி கூட்டத்துல போய் அவதிப் படனும்."
" இல்லம்மா ...இப்டி கூட்டத்துல போய் வாங்கறது புதுசா த்ரில்லா இருக்கு "
சிரிப்புடன் கைகளில் ஐஸ்க்ரீம் வழியச் சொல்லி விட்டு அவள் வயதுப் பிள்ளைகளோடு ஆற்றுக்குள் இறங்கி விளையாட கிளம்பி விட்டாள் என் செல்லப் பாப்பு . அவளுக்கு கிடைத்த அதே குதுகலத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
காத்திருக்கிறோம் ...எதிர்பார்த்திருக்கிறோம் அடுத்த வருடமும் ஆற்றில் இறங்கப் போகும் அழகரையும் அவரது குதிரையையும் எண்ணிக் கொண்டு.
Labels:
அனுபவம்,
திருவிழாக்காலம்,
பகிர்வு,
ஹரிணி
Thursday, April 22, 2010
கதை கதையாம் காரணமாம் ...
ஒரு ஜாமத்தின் பின்னான கதைகளைக் கேட்க
கனவுகளின் குவியலுக்குள் களைக்காது புரண்டு
கனகாம்பரப் போர்வை தேடி
சிருங்காரம் காட்டும் என் சின்ன மயிலே
மைனாக் குஞ்சே எங்கிருக்கிறாய் நீ!
பெய்யாது ஓய்ந்த மழைக்காய் அல்ல
பூசணிப் பழங்களாய் காணும் முகமெலாம் சூடாக்கி
ஓயாது வெடித்துப் பிளந்திட்ட வெயிலுக்காயும் அல்ல ;
மாம்பிஞ்சே மரகத பூஞ்சிட்டே ;
தலை சரித்து நோக்குங்கால்
என் நெஞ்சகத்துக் கனமெல்லாம்
காணாதடிப்பாயடி...
சித்திரைப் பூவே ...
சில நேரம் கண்ணுறங்காய் ...
காலிலே கட்டிய சக்கரங்கள் தூங்கட்டும்
கார் கால மேகம் போல்
இமை கவிய கண் துயிலாய்;
எனக்குத் தூக்கம் வருதுடி ...
சுட்டிப் பொண்ணே ...அடிக்கரும்பே
சீனி சர்க்கரையே
அம்முக்குட்டி பொம்முக்குட்டி
அம்மாவோட தங்கக் கட்டி
தூங்கிடேன் ப்ளீஸ் ...
ஒரு அப்பாவி அம்மாவுக்கும் சுட்டி மகளுக்குமான தினப்படி தூக்கத்துக்கு முந்தைய உரையாடல் கவிதை.
கனவுகளின் குவியலுக்குள் களைக்காது புரண்டு
கனகாம்பரப் போர்வை தேடி
சிருங்காரம் காட்டும் என் சின்ன மயிலே
மைனாக் குஞ்சே எங்கிருக்கிறாய் நீ!
பெய்யாது ஓய்ந்த மழைக்காய் அல்ல
பூசணிப் பழங்களாய் காணும் முகமெலாம் சூடாக்கி
ஓயாது வெடித்துப் பிளந்திட்ட வெயிலுக்காயும் அல்ல ;
மாம்பிஞ்சே மரகத பூஞ்சிட்டே ;
தலை சரித்து நோக்குங்கால்
என் நெஞ்சகத்துக் கனமெல்லாம்
காணாதடிப்பாயடி...
சித்திரைப் பூவே ...
சில நேரம் கண்ணுறங்காய் ...
காலிலே கட்டிய சக்கரங்கள் தூங்கட்டும்
கார் கால மேகம் போல்
இமை கவிய கண் துயிலாய்;
எனக்குத் தூக்கம் வருதுடி ...
சுட்டிப் பொண்ணே ...அடிக்கரும்பே
சீனி சர்க்கரையே
அம்முக்குட்டி பொம்முக்குட்டி
அம்மாவோட தங்கக் கட்டி
தூங்கிடேன் ப்ளீஸ் ...
ஒரு அப்பாவி அம்மாவுக்கும் சுட்டி மகளுக்குமான தினப்படி தூக்கத்துக்கு முந்தைய உரையாடல் கவிதை.
Tuesday, February 16, 2010
Drawings ... My Daughter

எலியை விரட்டும் யானை (ரொம்ப டயர்ட் ஆயிருச்சாம் யானை ...!) படம் கொஞ்சம் இருட்டா இருக்கு ,நல்லா உத்துப் பார்த்தா தாங்க யானையும் எலியும் கண்ல படறாங்க.என்ன பண்ண என் பொண்ணு வரைஞ்சதாச்சே ! ஆவணப்படுத்தும் முயற்சி தான்.
இதை எழுதும் போது அடிக்கடி எங்களை கலாய்க்க என் தம்பி சொல்வான் "தன்னை தானே மெச்சிக்குமாம் தவிட்டுக் கோழி " சொலவடை ஞாபகம் வந்தாலும் விட்ருவமா நாங்க?!
பாப்புவுக்காக ஒரு நல்ல டிராயிங் டீச்சர் தேடிட்டு இருக்கேன் ...பல திறமைகள் ... ;) என் பொண்ணுகிட்ட இருந்தாலும் தனித் திறமைகளை கண்டடையற முயற்சி தான். அண்ணாநகர் திருமங்கலம் ..வில்லிவாக்கம் பிரதேசங்களில் திறமையான Drawing டீச்சர்ஸ் யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா பரிந்துரையுங்கள் :)))
Labels:
பாப்பு,
பென்சில் Drawing,
யானையும் எலியும்,
ஹரிணி
Wednesday, February 10, 2010
My Daughter...

என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.
நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,
காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
பாப்பு இங்கிருந்து கொண்டே ...
"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,
அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.
"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;
ச்சே..ச்சே ..பெட் கௌ "
சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;
பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.
ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!
சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .
ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."
எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.
"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!
அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"
இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"
எனக்கு ;
நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,
காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
பாப்பு இங்கிருந்து கொண்டே ...
"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,
அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.
"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;
ச்சே..ச்சே ..பெட் கௌ "
சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;
பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.
ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!
சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .
ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."
எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.
"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!
அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"
இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"
எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.
குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.
குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))
டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.
Thursday, December 10, 2009
ஹரிணி(பாப்பு) கலெக்சன்ஸ் ...

கணேஷ ஸ்துதி இல்லாமலா ?! முதல் வணக்கம் அவருக்கு தானே...ஜூனியர் சந்தமாமா பாப்புவுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நேற்று அதைப் பார்த்து இரண்டே நிமிடத்தில் இந்த பென்சில் டிராயிங் ...பிள்ளையார் கூட என் பொண்ணு கைபட்டு எப்படி ஜொலிக்கிறார் பாருங்க!(தற்பெருமை கொஞ்சம் ஓவராத் தான் போச்சு இல்ல!!!)
மயிலுக்கு வண்ணம் கொடுக்க பாப்புவுக்கு நேரமில்லையாம் ...பரீட்சை நேரமாச்சே ...லீவு விட்டதும் கலர் கொடுக்கலாம் என்றாள் ,அதற்குள் வலையேற்றி விட்டேன் ..கலர் இருந்தாலும் இல்லா விட்டாலும் மயில் அழகு தான் ...ஏன்னா எம் பொண்ணு வரைஞ்சதாச்சே!!! இப்படி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.:))

மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!

மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!
இது உருளைக் கிழங்கை பாதியாகக் கட் செய்து அதில் வண்ணங்களை ஒற்றி அச்சுப் பதித்து உருவான அழகான மலர்.தண்டு கூட அச்சடித்தது தான். பிரஸ் அல்லது பென்சில் பயன்படுத்தப் படவில்லை. பாப்புவுக்கு இப்படி அச்சுப் பதிப்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது சும்மா சொன்னதால் இப்படி முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். இல்லா விட்டால் வீட்டுச் சுவர் முழுக்க தண்ணீரில் அல்லது எண்ணெயில் கையை முக்கி எடுத்து அச்சுப் பதிப்பதை யார் தான் சகித்துக் கொள்ள முடியும்?! :):(:):( சொல்லுங்கள்!!!!
Thursday, November 26, 2009
பாப்பு செய்த மணிமாலை

பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )
மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .
இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .
Sunday, August 30, 2009
ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு
சென்ற வார விகடனில் ஒரு கார்டூன்" ரெட்டை வால் ரெங்குடு " என்ற தலைப்பில் ;ரெங்குடுவுக்கு லீவ் முடிந்து ஸ்கூல் திறப்பதற்கு முதல் நாளாம் ,அவனது அப்பாவும் அம்மாவும் முகமெல்லாம் கொள்ளை மகிழ்ச்சி பூத்துக் கொண்டாட தட்டாமாலை சுற்றுகிறார்கள்.
(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!
இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,
தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?
அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;
இருங்க ...
பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.
பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"
"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .
அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்
வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)
பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)
திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்
குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??
பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .
என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.
விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .
இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)
மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .
அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .
எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!
அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.
நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.
(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!
இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,
தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?
அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;
இருங்க ...
பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.
பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"
"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .
அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்
வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)
பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)
திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்
குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??
பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .
என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.
விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .
இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)
மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .
அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .
எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...
என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!
அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.
நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.
Subscribe to:
Posts (Atom)


