Monday, November 17, 2008

டவுட்:- உங்க குழந்தை உருப்படியாக காலையில் என்ன சாப்பிட்டு விட்டுப் போகும் ஸ்கூலுக்கு?



இந்த அட்வைஸ் கலந்த டவுட் ஐந்து வயதுக் குழந்தைகளை வேனில் பள்ளிகளுக்கு அனுப்பும் அம்மாக்களுக்கு (அப்பாக்களுக்கும் தான்...!)சென்னை போன்ற பெருநகரங்களில் விடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பெரியவர்கள் விழித்து எழுகிறார்களோ இல்லையோ ஐந்து வயதுக் குழந்தைகளில் பெரும்பாலோர் (குறிப்பாக வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி அமைந்த குழந்தைகள்) கட்டாயமாக காலை ஆறிலிருந்து ஆறரைக்குள் எழுந்தே ஆக வேண்டும் ...இல்லாவிட்டால் வேன் போய்விடக்கூடும்,பொதுவாக சென்னையில் பெரியவர்களுக்கே ஏழு மணிக்கு தான் விடியும்.எனக்கு இதில் என்ன பெரிய டவுட் என்றால் ...!

டவுட் நம்பர் ஒன் :-

அப்படி ஆறு மணிக்கு (வேறு வழியே இல்லாமல் )எழுந்து வேக வேகமாய் பள்ளிக்கு கிளம்பும் அந்தக் குழந்தைகள் என்ன தான் அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் போவார்கள் ? ,வெறும் பால் சிலர் குடித்து விட்டுப் போகிறார்கள் (சிலர் என்னவோ போன்-விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் எல்லாம் குடித்து விட்டுத் தான் போவதாக சொல்லிக் கொள்கிறார்கள் ,ஆனாலும் காலை வேளைகளில் பெரும்பாலும் காக்கைகள் தான் அதெல்லாம் குடித்துக் கொண்டிருப்பதாக காற்று வாக்கில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,குழந்தைகள் சாப்பிட்டு சத்து வைக்கிறார்களோ என்னவோ இந்தக் காக்கைகள் தான் அந்தக் குழந்தைகள் மிச்சம் வைத்ததைத் தின்று தின்றே அதி தொந்திரவு தந்து கொண்டு இருக்கின்றன, காலை வேளையில் பார்க்கில் வாக்கிங் போகக் கூட பயம் ...அவ்வளவு காக்கைகள் ...!!!இப்போது டவுட் நம்பர் டூ என்னவென்றால் ?

உண்மையில் வெறும் பால்,போன்விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் ,இதெல்லாம் உண்மையில் குடிப்பது குழந்தைகளா காக்கைகளா ?

அதோடு டவுட் நம்பர் த்ரீ என்னவென்றால் ?

சரி இதெல்லாம் வெறும் நீர் ஆகாரங்கள் தானே ?இது எந்த அளவுக்குப் போஷாக்காக இருக்க முடியும்?திட உணவாக அந்த நேரம் என்ன சாப்பிடுகிறார்கள் அந்தக் குழந்தைகள் ?இட்லி,தோசை,கார்ன்-பிளாக்ஸ்,சாக்கோஸ்...!!! நிச்சயமாக எந்தக் குழந்தையுமே அந்த நேரம் அரிசி சோறு சாப்பிடும் என்று நம்புவதற்கு கஷ்டமாயிருப்பதால் தான் மேற்கூறிய திட ஆகாரங்கள் தான் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடலாம் என நம்புகிறேன் , இதில் எதை எத்தனை சதவிகிதம் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் ,வீணடிக்காமல் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடும் என்பதில் இந்த பதிவைப் படிக்கும் (ஏதோ ஒரு சிலர் படிப்பீர்கள் தானே...!) நண்பர்கள் உரிய பதில்களைத் தருவீர்கள் என நம்புகிறேன் .இன்றைக்கு டவுட் இவ்ளோ தான் .இதைக் கிளியர் பண்ணுங்கோப்பா பஸ்ட்டு !!!