ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!

உலராத பொழுதுகள் :-
கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !
மண்
உதிர்த்து
அலை நனைக்கும்
கால்களுக்கு
துயரம்
உதிர்த்து
உலர்ந்த மனம் பெற
கடற்கரையின்
உலராத பொழுதுகளில்
நிச்சயம்
தெரிந்தே இருந்திருக்கும் ???