Showing posts with label என் மகள். Show all posts
Showing posts with label என் மகள். Show all posts

Saturday, August 28, 2010

பென்சில் மேனியா...

சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம்,ஹரிணி சொன்னா ,அவளுக்கு இருக்காம்.இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம். 
 
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
 
நேத்து  காலைல சின்ன ஸ்கேல்  நீளத்துக்கு அழகா துருவி  கொடுத்து விட்ட   பென்சில் ஸ்கூல் விட்டு வந்தோடனே  பேக்ல செக் பண்ணா அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது.i was shocked .
 
இன்னைக்கும் அதே தான் ...i was shocked ...
 
இது தப்பான வழக்கமாச்சேன்னு ...
 
ரொம்ப நேரம் இப்படிலாம் சும்மா சும்மா துருவினா பென்சில் God   கிட்ட போய் அழும்,என் முனை எல்லாம் ஷார்ப் பண்ணி ஷார்ப் பண்ணி புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல   அழுத்தி அழுத்தி அந்த ஹரிணி பாப்பா உடைச்சு உடைச்சு விடறா அப்புறம் திருப்பி பென்சில் ஷார்ப்பாவே இல்லை...ஷார்ப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு  துருவிகிட்டே இருக்கா ...எனக்கு வலிக்குதே...ஐயோ God எனக்கு  வலிக்குதேன்னு  உன்னை பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
 
ம்ம்...நிஜமாவான்னு கொஞ்ச நேரம் எம்மூஞ்சியவே பார்த்துட்டு இருந்துட்டு ...
 
 God  நல்லவர் ஒன்னும் பண்ண மாட்டார் , அம்மா நீ பொய் தான சொல்றன்னா...
 
இல்ல நிஜம்மா தான் ,நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை மிட்நைட் ல பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாருன்னேன் .
 
நீ வேணா ட்ரை பண்ணி பாரேன்னா
 
எதை ட்ரை பண்ண?
 
நான் எதுக்கு பென்சில் துருவினேன் ஷார்ப்பா இல்லைன்னு தான ? பென்சில் ஏன் ஷார்ப்பா இல்லை முனை உடைஞ்சதால தான?
 
ம்ம் ...
 
முனை ஏன் உடைஞ்சது ?
 
ஏன் ?
 
நான் புல்ஸ்டாப் வச்சதால தான ?
 
ம்ம்...
 
நீயும் புல்ஸ்டாப் வச்சுப் பாரும்மா?
 
எதுக்கு?
 
நீ வை நான் சொல்றேன்.
 
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து fill ups மட்டும் எழுதிக் கொடுத்தேன் ,பத்து புல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது .
 
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி புல்ஸ்டாப் வைத்ததில் பத்து முறை முனை உடைந்தது.பென்சிலை பத்து முறை துருவினேன் .
 
சரி..சரி போதுமென்றாள்.
 
நோட் புக்கை மூடி வைத்தேன் . இப்ப புரிஞ்சதா ? இனிமே இப்டி சும்மா சும்மா பென்சில் துருவி துருவி போட்டு ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி ஆக்க மாட்டயில்ல  ?
 
ம்ம்...மம்மி இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லு ?
 
என்னது?
 
ஆமாம் நீயும் தான பென்சில் துருவி துருவி உடைச்ச ,உன்னையும் சேர்த்து தான பயமுறுத்தும் ,அப்படின்னா பரவாயில்லை .பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லு ...be quick .
 
ங்கே !  (  நான் தான்) 
 
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!
 
இதற்குப் பெயரும் பல்பென்று சொல்லத் தகுமோ?!
 

Wednesday, February 10, 2010

My Daughter...


என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,

காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பு இங்கிருந்து கொண்டே ...

"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,

அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.

"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;

ச்சே..ச்சே ..பெட் கௌ "

சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;

பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.

ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!

சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .

ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."

எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.

"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!

அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"

எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.

குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))


டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.