Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, January 10, 2011

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் :


மேட்டிமை மிக்க தேவடியா மகனே :

( கவிதை -இயான் ஹான்குக் -ஜிப்ஸி வரலாற்று ஆய்வாளர் (இங்கிலாந்து)

சீருடையுடனும் உறைந்த புன்னையுடனுமிருக்கும்
மேட்டிமை மிக்க தேவடியா மகனே,
உனது அன்னை எப்படி இருக்கிறாள் ?
எனது அன்னையை
நான் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை

இரண்டாவது அபிப்ராயத்துக்கு இடமில்லையா?
இன்னொருமுறை சொல்
உனது பெருமைக்குரிய கனடாவுக்கு
நான்
பொருத்தமில்லை எனச் சொல்கிறாயா ?

எம்மைப் போன்ற குடிஎற்றதாரர்கள்
பொருத்தமில்லை என்கிறாயா?
சட்டத்திற்கு ஒப்ப அழுத்தமான வார்த்தைகளில்
நான்
குடியேற்றத்திற்கு பொருத்தமில்லை என்கிறாயா?
பரவாயில்லை .

இந்த நரகலை நாங்கள்
உம்மைப் போன்றவர்களிடமிருந்து
எமது வாழ்வு முழுக்க கேட்டு வருகிறோம் .

சிறை அதிகாரிகள்குடியேற்ற அதிகாரிகள்போலீஸ்காரர்கள்.
முகங்கலில்லை எமக்கு சப்தமற்ற ஒன்றரைக்கோடி தொண்டைக்குழிகள் உங்களது தகப்பன் களாலும் உங்களது குழந்தைகளாலும்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
விரட்டப்பட்டு வருகிறோம்

நீ உருவாக்கி வைத்திருக்கிற எமது உணர்வுகளை
கற்பனையிலேனும் நீ நினைத்துப் பார்த்ததுண்டா ?

என்னை மன்னித்து விடு

உன்னைப் போலவே நடந்து கொள்வதற்கு
என்னை முயற்சி செய்ய விடு
என்னை உள்ளே விடு
என் தந்தையை நான் தழுவிக் கொள்கிறேன் .


அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்.
//அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்//
உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகளின் துயரம் சொல்ல இந்தக் கவிதை ஒன்று போதாதோ?

இந்த அப்புறம் என்ற சொல் இங்கே மிக வலிக்கச் செய்கிறது. யமுனா ராஜேந்திரனின் "ஜிப்சியின் துயர நடனம் " புத்தகத்தில் இருந்த ஒரு கவிதை இது .அவர் ஜிப்ஸிகள் இந்திய பூர்வ குடிகள் என ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஈழத் தமிழர்களும் இந்திய பூர்வ குடிகள் தான்.நாம் இந்தியர்கள் என்று ஒருமித்த நோக்கில் கண்டால் மட்டுமே. அவர்கள் தமிழகப் பூர்விக மக்கள் என சுருக்கப் பட்டு விட்டார்கள்,அதனால் ஈழத் தமிழனுக்கு என்ன ஆனாலும் வடக்கில் கவனம் பெறத் தக்க வகையில் எந்த எதிர்ப்பும் எழ வகையற்றுப் போனது,போலவே வட கிழக்கில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்ன ஆனாலும் தெற்கே நமக்கும் போதிய அக்கறையின்றிப் போயிற்று.

ஜிப்ஸிகளின் துயரக்கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,பக்கத்து மாநிலத்தில் நடப்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே காட்டக் கூடும் அண்டை மனித சமுதாயம் நாம் எங்கிருந்து பூர்வ குடிகளைத் தேடி கண்டெடுத்து போஜித்து காபந்து செய்யப் போகிறோம்!!! ஆனால் இங்கே ஜிப்ஸிகளின் துயரக் கதைகளை வாசிக்க நேர்கையில் பதிந்து வைக்க இயலாமல் போன பழங்குடி வம்சங்கள் குறித்த கையாலாகக் கோபங்கள் எழுகின்றன.

இந்தியாவில் ஆரிய ஊடுருவலை அறிந்து கொள்ள ரிக்.யஜூர்,சாம,அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் இருக்கின்றன. இராமாயண மகாபாரதக் கதைகள் இருக்கின்றன. திராவிட நாகரிகம் பற்றி அறிய சிந்து வெளி,ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா எனும் நிலப் பரப்பில் ஆரியர்களுக்கு முன்பிருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?

பாண்டவர்கள் சரஸ்வதி நதிப் படுகைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவர்களுக்கு மிக வலப்பமானதொரு நாகரிகம் இருந்திருந்தது நிஜமென்றால் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தவர்கள் யார்?

பாண்டவர்கள் என்றதும் மகாபாரதக் கதைக்குத் தாவாமல் பாண்டவர்களை ஒரு பழங்குடி இனத் தலைவர்கள் அல்லது வாரிசுகள் என மட்டுமே கொண்டு அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட உட்போரைப் புறம் தள்ளி அவர்கள் யாரிடம் வென்று பெற்ற பகுதி ஹஸ்தினாபுரம் என்று எந்த வரலாறும் எழுதி வைக்கப் படவில்லையா?

சாந்தனு மச்ச கன்னியான மீனவப் பெண்ணை மணந்து அதில் விரிந்த குலம் தானே திருதராஷ்ட்டிரன் பாண்டு உள்ளிட்ட குரு குலம்.சாந்தனுவுக்கு முந்தைய மகாபாரதக் கதை என்ன?!

காண்டவாக் காடுகளை அழித்து பழைய டெல்லியை (இந்திர பிரஸ்தம்) உருவாக்கினார்கள் பாண்டவர்கள் எனில் இந்தியா முழுக்க காடுகளே நிறைந்திருந்தனவா ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பொழுதில்?! காடு திருத்தி நாடாக்கியதில் பூர்வ பழங்குடிகளுக்கு பங்கேதும் இல்லையா? மிகப் பெரும் புதிர்கள் இவை .இந்தப் புதிர்களை அவிழ்க்கத்தான் புத்தகங்கள் தேட வேண்டும்.யாருக்கேனும் தெரிந்தால் அவசியம் இங்கே இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தால் தெரிவியுங்கள் .

நிற்க

ஜிப்சிகளுக்கு வருவோம் ,பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பை முறியடிக்க நினைத்த ஆரியர்கள் தங்கள் ஆரிய வீரர்களுடன் இந்திய பூர்வ பழங்குடிகளான லோகர்கள்,குஜ்ஜர்கள்,தண்டாக்கள் உள்ளிட்ட ராஜபுத்திரர்களை தம் சத்ரிய படை வீரர்களுடன் கலந்து போர் முனைக்கு அனுப்பினர். இந்த வகையில் இந்த பழங்குடிகள் பல ஒன்றிணைந்து தான் ஜிப்சிக்கள் எனும் தனியானதொரு பிரிவு தோன்றி இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.

ஜிப்சி என்ற சொல்லுக்கு (சிறிய எகிப்தியர்கள்) என்று பொருளாம். உண்மையில் ஜிப்ஸிகள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணப் பிரதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களுடன் ஆனா போர் காரணமாக உலகின் பல பாகங்களிலும் சிதறிய ஒரு கூட்டமாக இருந்த போதிலும் ஐரோப்பியர்கள் அவர்களை எகிப்தில் இருந்து வந்த கறுப்பின மக்கள் என்று கருதியதால் வந்த பெயர் தான் "ஜிப்ஸி(சிறிய எகிப்தியர்கள்) .

ஜிப்சிகளுக்கு நிகராக தமிழ் நாட்டில் நரிக்குறவர்களைக் கூறுகிறார்கள் .அவர்களது அடர்த்தியான நிறங்களால் ஆன உடைகள்,நாடோடி வாழ்க்கை முறை,குல கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அதை உறுதி செய்கிறது .

நரிகுறவர்கள் தேர்தல் காலம் தவிர்த்து தேடப் படக் காணோம்,அவர்கள் வழக்கப் படி ஊசி பாசி மணிகளை விற்றுக் கொண்டும் கொக்கு குருவி சுட்டுக் கொண்டும் திரிவதை கிராமங்களில் இப்போதும் பார்க்கலாம். அவர்களுக்கென தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன என்கிறார்கள் ,அந்த வீடுகள் மருவி சமூக விரோதக் கும்பல்களின் சரனாலயங்கலாகித் தான் போகின்றன ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் .

செங்கல்கள் தூர்ந்த சிமென்ட் பூச்சற்ற சில டப்பா கட்டிடத் தொகுப்புகளை ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் பேருந்துகளில் கடக்கும் போதெலாம் இந்த வீடுகள் யார்க்காக கட்டப் பட்டவை என்ற குழப்பமே ே மிஞ்சுகிறது,யாருடைய மேம்பாட்டுக்காகவோ என்று!!!

பி.சி,எம்.பி.சி ,எஸ்.சி ,எஸ்.டி , என்று எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாதா நரிக்குறவர்களை?

நிஜத்தில் அவர்களுக்கென விண்ணப்ப படிவங்களை நிரப்ப என்ன செய்வார்கள் நரிக்குறவர்கள்?

ரேசன் கார்டுகள்ஒட்டுரிமைக்கான அடையாள அட்டைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அனுபவிக்க ,

108 அவசர சேவையை அனுபவிக்க

மேற்சொன்ன அட்டைகளை சமர்பிக்கச் சொல்கிறார்களே எந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இவைகளை நரிக்குறவர்களுக்கு வழங்கி முடித்து விட்டார்களா?ஒட்டு மொத்த தமிழக மக்கள் thogaiyil நரிக்குறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?

ஜிப்சிகளைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த மாதிரி அனாவசியக் கேள்விகள் எல்லாம் எழுவதை தவிர்க்க முடியாது யாரானாலும்.

எந்த மாதிரியான ஒரு எருமை மாட்டு நிம்மதியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்?!

தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது வாஸ்தவமே . நரிக்குறவர்களுக்காக ,ஜிப்சிக்களுக்காகப் போராட வேண்டாம் .
ஈழத் தமிழனுக்காக உண்ணா விரதம் இருந்து நமது எதிர்ப்பை பிரகடனம் செய்ய வேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக உணர்வதில் என்ன அசூயை ?

முன்னேறிய சமுதாயத்திடம் தாக்குப்ப் இடிக்க இயலாமல் பின் தங்கிப் போனாலும் பரவாயில்லை என காடுகளில் தங்கி விட்ட பழங்குடிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடித் தேடித் போய் விடாது தொல்லை கொடுத்தால் தீவிரவாதிகள் உருவாகாமல் என்ன செய்வார்கள்?!
அடக்கப் பட்ட மக்களே தீவிரவாதிகள் ஆக்கப் படுகிறார்கள்.

வரலாற்றை எடுத்துக் கொண்டால் உலோகம்,மின்சாரம் இதைத் தேடித் புறப்படுகையில் தான் பெரும் பெரும் போர்கள் வெடிப்பதாகக் காண முடிகிறது

இதற்கு யுகக் கணக்குகள் அனாவசியம் .

இப்போதும் தண்டகாரண்யத்தில் கொட்டிக் கிடக்கும் பாக்சைடுக்காக அங்கிருக்கும் பூர்விக பழங்குடி மக்கள் இந்திய அரசால் வேறிடம் செல்லுமாறு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

வலிந்தவர்களின் தேவைகள் எப்போதும் எளியவர்களை விரட்டி அடித்து அபகரிக்கும் குணத்தை வளர்க்கிறது.அன்றைக்கு அரசர்கள் செய்தார்கள் ,இன்றைக்கு ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். வித்யாசம் எதுவுமில்லை.

நாம் நமது காட்டுமிராண்டித் தனத்தை நவீன ஆடைகள்,அலங்காரங்களால் புது மோஸ்தரில் காட்டப் பழகி விட்டோம்.
இந்த நாட்டில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நீதி உண்டு ஒரே நீதி.

வாழத் தெரிந்தவன் -வாழத் தெரியாதவன் .

இதற்குள் சுருங்கிப் போகிறது எல்லாமும். மனசாட்சிகள்,ராஜ தந்திரங்கள், நடுவர்கள் , தரகர்கள், நண்பர்கள் ,எதிரிகள் ,எல்லோரும் இதற்குள் அடங்கி விடுகிறார்கள்.

இது கட்டுரை அல்ல . மேய்ந்த புத்தகங்களின் செரிமானம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Saturday, November 27, 2010

அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :



அயோத்தி தீர்ப்பு மூன்று தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய 2 1 /2 ஏக்கர் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது ,இந்த தீர்ப்பு நேர்மையான தீர்ப்பில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். பத்தரிகைகளில் வாசிக்கிறோம். எனக்கொரு சந்தேகம்

மொத்தமுள்ள நிலமும் பாபர் மசூதி இருந்த காரணத்தால் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் அப்போதும் அது நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அல்லது இது பாபர் மசூதிக்கும் முன்பே ராமர் கோயில் இருந்த இடம் ,முஸ்லீம்கள் ஆக்ரமித்த இந்துப் பகுதி இது எனக்கூறி இந்துக்களுக்கே மொத்தமுள்ள நிலத்தையும் சொந்தம் என தீர்ப்பு வழங்கி இருந்தால் அதையும் நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒப்புக் கொண்டிருக்கப் போவதில்லை.


மூன்று தரப்பையும் சாந்தப் படுத்தலாம் என்று நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினால் அதுவும் நேர்மையான தீர்ப்பில்லை .
அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் புனித பூமி என்ற புனித பிம்பத்தை அலட்சியப் படுத்தி அரசாங்கமே அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு தன் பொறுப்பில் அரசு பொது சொத்தாக அறிவித்து தீர்ப்பளித்தால் என்ன நிகழும்?


"அயோத்தி மியூசியம் " என்று தகர போர்ட் மாட்டி அந்த நிலத்தை புராதன அடையாளங்களில் ஒன்றாய் அறிவித்து யாருக்கும் சொந்தமில்லை என்று ஆக்கி விட்டால் அப்போது இந்த தீர்ப்பைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் எல்லோரும்!!!

சரி அப்படியானால் இந்த வழக்கில் மூன்று தரப்பினரையும் மனமொத்து ஏற்றுக் கொள்ள வைக்கும் படி நேர்மையான தீர்ப்பை எப்படி வழங்கலாம் என்று யாராவது இதுவரை பரிந்துரைத்திருக்கிரார்களா?அப்படி ஒரு பரிபூரணமான தீர்ப்பை யாராவது வைத்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க ஆளின்றி தவிக்கிறார்களா?


இந்த வழக்கில் இன்னும் எந்த விதமான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள் ?
ராமாயணம் கற்பனை ஆனால் அயோத்தி கற்பனை அல்ல ...வரலாறும் கற்பனைக் கதை அல்ல, ராமன் கடவுள் அல்ல ,ஆனால் ராமன் என்ற இளவரசன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகரை ஒப்புக் கொண்டால் ராமனையும் கொஞ்சம் கன்சிடர் செய்தாக வேண்டும் . எழுதி வைக்கப் படாத வரலாறு பல கற்பனைகளைத் திறந்து விடுகிறது.


இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.
வரலாற்று நூல்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றே உறுதி செய்திருக்கின்றன. ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.

அசோகர் மரம் நட்டார்,குளம் வெட்டினார், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் சாந்தி நிலவ நிறைய கட்டளைகள் பிறப்பித்தார் என்று தான் நம் பள்ளிகால வரலாற்றுப் பாடம் சொல்கிறது. அசோகர் ஒரு கொடுங்கோல் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதை உடனே மறுக்க ஒரு கூட்டம் இருக்கும்.

இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .


இந்தியாவில் பலம் பொருந்திய பேரரசு நிலையில் ஆட்சி செலுத்திய மௌரியர்களுக்கு முன்பு மகதர்களே சொல்லிக் கொள்ளும் படியான அரசாட்சியை வழங்கி இருக்கிறார்கள். மகதர்களுக்கு இணையான அன்றைய மற்றொரு அரசு கோசலம் .

மகதர்களும் கோசலர்களும் மட்டுமே அரசுகள் என்றிருந்த நிலையில் கோசலம் மகதத்தைக் காட்டிலும் செல்வாக்குடன் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன பண்டைய சரித்திரத்தில்.

நினைவல் கொள்ளுங்கள் ;

மௌரியர்களுக்கு முன்பே இந்தியாவில் மனித பெருக்கம் சில லட்சங்களில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பிருந்த அந்த நாட்களில் வடக்கில் இருந்த இரண்டே ராஜ்யங்கள் மகதமும் கோசலமும் மட்டுமே. இதற்கான சான்று ;

//Stone age To Modern age ...( Population -A Look )

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;

புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.

உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.

இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

ஆதார நூல்கள் :

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI
மித் அண்ட் ரியாலிட்டி -D .D .KOSAMBI
பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்
THE HISTORY OF ARYAN RULE IN INDIA - E .B .HAWELL //


மற்றவை எல்லாம் சிந்திச் சிதறிக் கிடந்த பழங்குடி வம்சங்கள் .பழங்குடி வம்சங்களில் இருந்து வந்தவையே இவ்விரு ராஜயங்களும்,

கோசலத்தின் தலைநகரமாக அயோத்தி இருந்திருக்கிறது ,அன்றைய காலத்தில் மன்னருக்கு வயது வந்த மகன்கள் இருப்பின் அதிகாரப் போட்டியில் இளவரசர்களே தந்தையை கொள்ளும் அபாயம் இருந்ததால் சில மன்னர்கள் வயது வந்த மகன்களை நாடு கடத்தும் தண்டனை வழங்கி நாட்டை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

இத்தகு பல உதாரணங்கள்;

மகதத்தின் இளவரசன் அஜாத சத்ரு இப்படி நாடு கடத்தப் பட்டவனே

கலிங்க இளவரசன் விஜயன் நாடுகடத்தப் பட்டு இலங்கைத் தீவில் வந்திறங்கிய கதை மகாயானத்தில் உண்டு .

இப்படித் தான் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனை அடைந்த இளவரசனாக தென்னிந்தியாவுக்கு வந்திருக்க கூடும் ,

சீதையைப் பற்றி சரித்திரத்தில் சான்றுகள் காணோம்.

ஆனால் ராமன் வடக்கில் (கோசலத்தில்)இருந்து தக்காணம் கடந்து கோதாவரி நதி தாண்டி தென்னிந்தியக் காடுகளை கடந்ததற்கு சான்றுகளாகக் காட்டப் படுபவை உத்திரா பத வணிகப் பாதைகள். ராமன் அயோத்தியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த பாதையே பிற்பாடு மிகப் பயனுள்ள உத்திரா பத வர்த்தகப் பாதைகலாயின என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.

ராமர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் ராமர் பிறந்த இடம் அயோத்தியின் அந்த சர்ச்சைக்குரிய நிலமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க வாதமே.


மகதத்தில் பிம்பிசாரரை அறிவோம் ,கோசலத்தில் பசேனாதி என்றொரு மன்னர் இருந்து ஆண்டிருக்கிறார். மகத கோசல போர்களில் கோசலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மகதம் நிலைபெற்றது. மகதர்களுக்குப் பின்பு மௌரியர்கள் வந்தனர்.


பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ !

நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.

வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)

அவர்கள் அன்று இடித்தார்கள் நாங்கள் இன்று இடிக்கிறோம் இந்த நிலை எப்போதும் மாறுவதில்லை.

இதில் எங்கே நிற்கிறது மனித உரிமைகளும் மனித நீதிகளும்?!!!

Wednesday, November 24, 2010

பண்டைய இந்தியா பகுதி -4 (தி லைன் ஃஆப் ப்ரைம் காட்ஸ் (The Line of Prime Gods -Pages from History))


The line of Prime gods : ( Pages from History )  (பண்டைய இந்தியா பகுதி - 4 )

இன்றைக்கு சென்னை மியூசியம் போயிருந்தேன் ,
எனக்கென்னவோ புத்தர் சிலைகள் தான் விஷ்ணு அனந்த சயன சிலைகள் தோன்ற மூலமாக இருந்திருக்க கூடுமோ என்றொரு ஐயம். எந்த மதத்தையும் சார்ந்து பேசும் முயற்சி அல்ல இது, இந்தோ கிரேக்க சிற்ப முறைப்படி வடிவமைக்கப் பட்ட சிற்பங்களில் பெரும்பாலும் காலத்தால் முந்தியவை புத்தர் சிலைகலாகவே இருக்கின்றன. இங்கு மட்டும் அல்ல கி.மு .300 க்குப் பின் அலெக்சாண்டர் பாக்டிரியாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வழிகள் (வடக்கு ஆப்கன் ,பஞ்சாப் - இந்துஸ்தானம் )எங்கும் காணக் கிடைக்கும் புத்த சிலைகள் ,அப்படி இருக்கலாம் என்ற எண்ணத்தை அளிக்க வல்லவை.


இவை மட்டுமல்ல யானைகள் இருபுறமும் ஆசிர்வதிக்க நடுவில் புத்தரின் தாயார் மாயா தேவி அமர்ந்திருக்கும் சிற்ப வடிவமே பின்னாட்களில் வைணவ கஜலக்ஷ்மி என்றாகி இருக்க கூடும் என யூகிக்க தோன்றுகிறது.


க்ரீக் இந்தோ வகை சிற்பங்களை வெகு எளிதாக அடையாளம் காண முடியும் என மியூசியக் குறிப்புகளில் வாசித்தேன் ,கிரேக்க சிற்பங்கள் உடல் பலத்தை காட்டும் வகையில் இருப்பனவேன்றும்,நமது நாட்டு சிற்பங்கள் முக சௌந்தர்ய பாவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவை என்றும் கூறப் பட்டிருந்தது,ஒப்பிட்டுப் பார்த்ததில் விளங்கியது.


சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்த முத்திரை மாதிரிகளின் அடிப்படையில் அந்த மக்கள் பசுபதி வழிபாடும்(காலை -சிவன்- நந்தி வழிபாடு) ,விசிறி போன்ற கூந்தல் அலங்காரம் செய்துள்ள பெண் தெய்வம் ஒன்றையும் வணங்கி வந்திருக்க கூடும் என தெரிகிறது.

இது புத்தருக்கு முற்பட்ட காலம் அப்படியானால் புத்தருக்கு முன்பே பல ஆன்மிகத் தலைவர்கள் அன்றைய மக்களை பண்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல வழிநடத்திக் கொண்டே தான் வந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். மேலும் புத்தரும் கூட தமது கோட்பாடுகளில் எழுதி வைக்கப் படாத முந்தைய தலைவர்களின் அல்லது குருக்களின் கோட்பாடுகளை இணைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. மேலும் புத்தரின் கோட்பாடுகளும் கூட புத்தர் முக்தி அடைந்த பின்பே அவரது அந்திமக் காலங்களில் உடனிருந்து சேவை செய்த அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தரால் அவருக்குத் தெரிந்த வகையில் பதிவு செய்யப் பட்டது தான் என வரலாறு காட்டுகிறது.

முன்பே கூறியபடி புத்தர் சார்ந்திருந்த சாக்கிய குளத்தில் சாலமர வழிபாடு இருந்தது (தாய் தெய்வ வழிபாடு)என்பதைக் கண்டோம் இல்லையா?
மெசபடோமிய சிற்பங்களில் காணக் கிடைக்காத சிறப்பம்சமாக சிந்து சமவெளி நாகரிக அகழ்வுகளில் கிடைத்த முத்திரை மாதிரிகள் மற்றும் சிற்பங்களில் ...

அப்படியானால் இந்திய கடவுள்கள் வரிசை இப்படித் தான் இருக்கக் கூடும்.

1.தாய் தெய்வ வழிபாடு
2.காளை மனிதன் (பாசுபத -சிவ வழிபாடு)
3.சிவ வழிபாட்டோடு லிங்க யோனி வழிபாடு

சிந்து வெளி காலத்திற்கு பல நூறு ஆண்டுகள் கழித்தே வேத காலம் வருகிறது ,

வேத காலத்தில் ;

இந்திர வழிபாடு

இந்திரன், வருணன்,மித்திரன்(சூரியன்), யக்ஷன், வழிபாடுகள் தோன்றின, தாய் தெய்வ வழிபாட்டை இந்த தெய்வங்களின் வழிபாடுகள் பின்னுக்குத் தள்ளி இருக்கலாம் . ரிக் வேதத்தில் பாடப்படும் முதன்மை தெய்வங்கள் இவை .

கிருஷ்ணன் ரிக் வேத காலத்தல் ஒரு யக்ஷனாகவே அடையாளம் காணப் படுகிறான்.

ரிக் வேத கால ( இந்திர வழிபாடு )வழிபாடுகளில் பெருமளவில் யாகங்கள் நடத்தப் பட்டன,யாக பலிகள் மக்களை பீதியில் ஆழ்த்தும் அளவுக்கு கால்நடைகளும் பிற உயிர்களும் கணக்கின்றி கடத்திச் செல்லப் பட்டு யஞ்ஜங்களில் பலி இடப் பட்டன. பழங்குடி உணவு சேகரிப்பு(வேட்டை மற்றும் ஆநிரை மேய்த்தல் நிலையில் இருந்து பழங்குடி விவசாய (உணவு உற்பத்தி)முறைக்கு பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி காலத்து மக்கள் தங்களது செல்வ வளங்கள் எனக் கருதிய கால்நடைகள் யாகங்களுக்காக பலியிடப் படுவதை விரும்பாமல் உயிர் பலியை எதிர்ப்பவர்களாக மாறினார்.
இது இட்டுச் செல்லும் பாதை கிருஷ்ண வழிபாடு எனும் நிலைக்கு.

கிருஷ்ணன் கால்நடைகளின் காவலனாகக் கருதப் படுகிறான்.
ஆநிரைகளை மீட்பதற்காக கிருஷ்ணன் இந்திரனோடு நடத்திய போர்களைப் பற்றி ரிக் வேத பாடல்கள் உள்ளன. இப்படித் தான் மானுட கிருஷ்ணன் அரை தெய்வ நிலைக்கு மாறினான்.

பிற்பாடு பஞ்சாப் பகுதிகளில் அதிப்படி விளைச்சல் மற்றும் வளமைப் பெருக்கத்துக்காக பெருமளவில் இந்திர வழிபாட்டை ஓரம்கட்டி விட்டு அந்த இடத்தை கிருஷ்ணா வழிபாடு ஆக்கிரமித்தது. கிருஷ்ணா விக்ரஹங்களின் மூலங்கள் இந்துஸ்தானத்தின்


இந்த வழியில் போனால் முதலில் சமணம் (உயிர்பலியை எதிர்த்தல்)


அதனையொட்டி (பௌத்தம் )


வரலாற்றுக்கு மிகப் பிந்தைய காலமாகிய தென்னிந்திய பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழர் கால திருமால் விக்கிரகங்களுக்கு பௌத்த விக்ரங்கங்களில் இருந்து மாதிரிகள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கலாம் ,//படித்தவற்றில் இருந்து கிடைத்த யூகமே //

படித்த விசயங்களைக் கொண்டும் திரட்டிய விவரங்களைக் கொண்டும் இப்படித் தான் எண்ண முடிகிறது.

காளியும் கல்மரங்களும் ...


திருவக்கிரை ஊர் எனக்கு முன்பே பரிச்சயமானது தான், பாலகுமாரனின் நாவல் ஒன்றில் இந்த ஸ்தலத்தில் இருக்கும் வக்கிர காளியம்மன் ஆலயத்தை தரிசித்து வந்தால் சேமம் என்றிருந்தது கண்டு 6 வருடங்களுக்கு முன்பு என் மகளின் பிறந்த நாளன்று சென்னையில் இருந்து திருவக்கரைக்கு சென்று வந்தோம்.

காளியைப் பற்றி பேசுவதற்காக இதை எழுதவில்லை , முதலாவதாக இந்த ஊர் காளிக்கும்,சந்திர மௌலீஸ்வரருக்கும் அப்பாற்பட்டு மற்றொரு விசயத்திற்கும் கவனிக்கப் பட வேண்டிய ஊர். இந்த ஊரில் கல்மரங்கள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன என்று சென்னை மியூசியத்தில் வாசித்திருந்தேன்.

கல்மரம் :

நிஜமாகவே மரமாக இருந்து கல்லாக மாறிய மரம் கல்மரம். அதாகப் பட்டது 2 00 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் முறிந்து மழையால் சாய்ந்து ஆற்றோடு இழுத்துச் செல்லப் பட்டு ஆற்றின் ஆழங்களில் பல அடுக்குகளில் பன்னெடுங்காலமாக மூழ்கி பின் வெளிப்படும் போது கல்லாக மாறி விடுகின்றன. இத்தகைய கல் மரங்கள் விழுப்புரத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் அதிகம் இருக்கின்றன. அங்கிருந்து மாதிரிக்கு ஒரு கல் மரத்தை நம் இந்திய புவியியல் துறையினர் சென்னை மியூசியத்திற்கு அன்பளிப்பாக வழங்கி இருந்க்கின்றனர்.

சென்னை மியூசியம் சென்று வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும், சிற்பக்காட்சி சாலையை அடுத்து உட்கார்ந்து சாப்பிட வசதியாக சிமென்ட் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும் இடத்தில் நடுவாந்திரமாக இந்தக் கல் மரம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது .

மரங்களின் வயதைக் கணக்கிட ரேடியோ கார்பன் முறை பயன்படுத்தி மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வயது கணக்கிடப் படும். அப்படியானால் 200 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மரங்கள் இவை என்பதை எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் ௯எத்தநை வளையங்கள் இருக்குமோ!!! ??? இந்த கல்மரத்தை பார்த்ததில் இருந்து எப்படி மரங்களின் வயதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொண்டால் என்ன? என்ற லூசுத்தனமான ஆசையெல்லாம் வந்து போகிறது,
(நல்ல சமையல் கத்துக்கற ஆசையைத் தவிர மற்ற எல்லாம் ஆசைகளும் வருமே உனக்கு ! //தேவ் வாய்ஸ்//)

கோயிலைப் பற்றி :

வக்கிராசுரனைக் கொன்றதால் அங்கிருந்த காளிக்கு வக்கிர காளி என்று பெயர் வந்ததாம் ,இங்குள்ள காளி காதில் குழந்தை ஒன்றை குண்டலமாக அணிந்திருக்கிறாள்.(இதற்கு ஏதாவது கதை விளக்கம் இருக்கலாம்- எனக்குத் தெரியவில்லை) முதன் முறையாகப் பார்க்கும்போது சற்றே அச்சமூட்டும் சிலை இது. இதன் காரணமாக இதை குண்டலி வனம் என்றும் முன்பு அழைப்பார்களாம்.

காளி கோயில் தவிர்த்து மும்முக சந்திரமௌலீஸ்வரர் ஆலயமும் இங்குள்ளது ,திருஞான சம்பந்தரால் பாடப் பட்டதால் பழம்பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க கோயில் இது .இங்குள்ள அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை

ஆலய முகவரி :

அருள்மிகுசந்திரசேகரர்
வக்ரகாளியம்மன் திருக்கோவில்திருவக்கரைவானூர் வட்டம்விழுப்புரம் மாவட்டம்PIN - 604304

இந்த ஊரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட செய்தியை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது ...வாசிப்பவர்கள் காளிக்காகப் போனாலும் சரி கல்மரத்திற்காகப் போனாலும் சரி,இந்த ஊர் பார்க்கப் பட வேண்டிய ஊரே. ஆற்று வெள்ளத்தில் இழுத்து வரப் பட்டு கரை சேர்ந்த லட்சக் கணக்கான வருடங்களுக்கு முந்தைய கல் மரங்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. நாங்கள் அங்கே சென்ற தினத்தில் கல்மரன்களைப் பற்றிய செய்தி அறிந்திராத காரணத்தால் அப்போது வெறுமே கோயிலுக்கு மட்டுமே போய் வந்தோம். இனியொரு முறை செல்லும் எண்ணம் இருக்கிறது. கல்மரங்களுக்காக .அந்த கிராமத்தில் மியூசியம் உண்டா எனத் தெரியவில்லை? கல்மரங்கள் நிறைந்த்திருக்கின்றன திருவக்கரை அருங்காட்சியகத்தில் என்று தான் வாசித்த ஞாபகம்.யாரேனும் போய் வந்தவர்கள் இந்தப் பதிவை வாசித்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Wednesday, November 17, 2010

பண்டைய இந்தியா ... (A View - Part 1 ,2,3,4 )


Part -2


http://karthigavasudev.blogspot.com/2010/11/pages-from-history.html


Part -3


http://karthigavasudev.blogspot.com/2010/11/blog-post_1698.html


Part -4


http://karthigavasudev.blogspot.com/2010/11/line-of-prime-gods-pages-from-history.html


Part - 1 

படிக்கப் படிக்க     வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது  பண்டைய இந்திய வரலாறு.நான் இது வரையிலும்  நினைத்திருந்தது  

 மாரியம்மன் ,கருப்ப சாமி, ஐயனார் ,காளியம்மன் இன்னும் பல பல பெயர்களில் எல்லா கிராமங்களிலும    வணங்கப் பட்டுக் கொண்டுள்ள  சிறு தெய்வங்கள் மட்டுமே இறந்து போன மூதாதையர்கள் அதாவது அவர்களது மரணத்தின் பல ஆண்டுகளுக்குப் பிறகு தெய்வ நிலைக்கு உயர்த்தப் பட்ட கிராம தெய்வங்கள் 
என்பதே...

ஆனால்  சரித்திரம் கூறுவது என்னவென்றால் நம்  பிரதான தெய்வங்களான ராமன்,கிருஷ்ணன் ,மகிசாசுர மர்த்தினி ,பசுபதி (சிவன்), ஏன் பலராமன் ,இந்திரன் ,இந்திரன் மனைவி உஷா ,எமன் (கிரேக்க புராணங்களில் இமா) எல்லோருமே பழங்குடி மக்களின் மூதாதையர்கள்   , அதாவது இந்தியப் பூர்வ பழங்குடி மக்கள் வணங்கி  வந்த தாய் தெய்வங்கள்  மற்றும் இந்தோ ஆரியக் கலப்பின தலைவர்களில் பல வெற்றிகளை பெற்ற ஆரிய  குல வீராதி வீரர்கள்     போன்றவர்கள் வேதங்களை இயற்றிய ஆரிய புரோகிதர்களால் தெய்வ நிலைக்கு புகழ்ந்து  ரிக் வேத பாசுரங்களில் பாடப்பட்டனர்.

என்று   சான்றுகளின் அடிப்படையில் விளக்கம்  தருகிறது .


நம் கிருஷ்ணன் தான் கிரேக்க புராணங்களில் வரும் ஹெர்குலிஸ் என்பதை சில உதாரணங்கள் மூலமா பார்க்கலாம்.

அரை மனித அரை தெய்வ உருவகம் இருவருக்கும் பொருந்தும்
மேலும் கிருஷ்ணன் யமுனை நதிக்கு செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு படுத்து மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்த  

காளியா (காளியமர்த்தனம் )என்கிற ஐந்து தலை சர்பத்தை அடக்கி அதன் தலை மீது நர்த்தனம் ஆடுகிறான். இதே விதமாக பல தலைகளைக் கொண்ட நாக சர்ப்பம் ஒன்றை ஹெர்குலிஸ் அடக்குவதாக கிரக்கே புராணம் கூறுகிறது.


அதோடு கிருஷ்ணனின் இறப்பும் ஹெர்குலிஸின் இறப்பும் ஒரே விதமாகத் தான் நிகழ்கின்றன. வேடன் ஒருவன் எய்த அம்பு குதிகாலில் பாய்ந்ததால் கிருஷ்ணன் இறப்பதாக இதிகாசமும் வேதமும் கூறுகிறது. ஹெர்குலிஸ் அவ்வாறே இறக்கிறான். இந்த இறப்பின் மறுபக்கமிருப்பது பண்டைய பலி சம்பிரதாயமே . விஷம் தோய்ந்த அம்பினால் கிருஷ்ணன் தனது மாற்றாந்தாயின் மகனால் வீழ்த்தப் படுகிறான் என்கிறது வேதம்.

இன்னொரு அபூர்வ ஆச்சர்யமான உதாரணம்;

ராமன் ஆரண்யம் செல்லுதல்.

இதற்கொரு காரணமாகக் கூறப்படுவது அன்றைய காலத்தே தொடக்க நிலை முடியரசில் எழுதப் படாத சட்டமாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு பழக்கம் ஒன்று அரசன் சிறையிலடைக்கப் படுவான் அல்லது இளவரசன் நாடு கடத்தப் படுவான். இதற்கு ராமாயணம் மட்டுமல்ல மகாபாரதத்திலும் உதாரணங்களைக் கூறலாம்.

பரதன் அரசுரிமை பெற வேண்டி கைகேயியால் ராமாயணத்தில் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்கிறான்.


மகாபாரதத்தில் கிருஷ்ணனின் மாமன் ஹம்சன் அரசுரிமைக்காக தன் தந்தை உக்கிர சேனரை சிறையில் அடைக்கிறான். மேலும் தன் தங்கை தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் சிறையில் தள்ளுகிறான். ஹம்சன் தன் தங்கையை  சிறையில் தள்ளக் காரணம் கதையில் சொல்லப்பட்டது போல அவளது வயிற்றில் பிறக்கும் மகன் இவனைக் கொல்லப் போவதால் என்பதைக் காட்டிலும் உண்மையை ஒட்டிய காரணம் அந்தக் காலத்தில் மதுராவை ஆண்டை உக்கிர சேனர் வம்சாவளிப் பழங்குடியினரின் முறைப்படி பெண் மக்களின் வாரிசுகளே அடுத்த வாரிசு உரிமையைப் பெற்று நாட்டை ஆள முடியும் என்பதால் எனக் கொள்ளலாம்.

அப்படியே நோக்கினால் ஹம்சன் கிருஷ்ணனை அழிக்க நினைததர்கான காரணம் அவன் அடுத்த மன்னனாகக் கூடும் என்பதால் மட்டுமே எனக் கொள்ளலாம். இந்த நிஜக் காரணத்தையே கிருஷ்ணனுக்கு தெய்வ அம்சம் தர எண்ணிய பிற்கால வைதீக பிராமணர்கள் தமதுகற்பனைகளுக்கு ஏற்ப அதீத திறமைகளை கிருஷ்ணனிடம் ஏற்றி வைத்து மகாபாரதக் கதை புனையப் பட்டிருக்கலாம் என்பது யூகம்.

நதிக்கரை நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சரியாகச் சொல்லப் போனால் கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கி.மு.2000 ஆண்டெனக் கணக்கிடப் படும் சிந்து சமவெளி நாகரிக காலம் தொட்டே இந்தியாவுக்கும் அல்லது மெசபடோமியாவுக்கும் இடையே வர்த்தகம் நடந்து வந்திருந்தது.

சிந்து வெளி நாகரிக காலத்தில் இங்கிருந்து மயில்கள்,முத்துகள் (மீன் கண்கள்) ,தந்தங்கள்,போன்றவை ரோமுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அங்கிருந்து இங்கு இறக்குமதி ஆனவை என்னென்னவென்று குறிப்புகள் ஏதும் காணோம் . இந்த வர்த்தகம் நடைபெற முக்கிய வியாபார கேந்திரமாக இருந்த இடம் பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் தீவு .இந்த பஹ்ரைன் தீவு தான் பைபிளில் காட்டப் படும் டில்மூன் .

இந்த வர்த்தகத்தின் பெருமளவு லாபம் பஹ்ரைன் மன்னருக்கே எனினும் இந்த வர்த்தகத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளராகவும் அந்த மன்னரே இருந்திருக்கிறார் என்பதும் வரலாறு கூறும் செய்தி. மேலும் இந்த டில்மூனில் தான் ஊழிப் பிரளயம் நடந்த காலத்தே நமது ஆலிலைக்  கிருஷ்ணரைப் போல பைபிளில் காவிய நாயகனாகக் காட்டப் படும் சையசுதாஸ் இருந்ததாக பைபிள் கூறுகிறது. மேலும் இவனிடம் இருந்து சஞ்சீவினி ரகசியத்தை அறிந்து கொள்ள கிரேக்க காவிய நாயகன் கில் காமேஷ் அப்போது இவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் என்பதும் பைபிள் கதை.

இதிலிருந்து சொல்ல விரும்புவது யாதெனில் தெய்வங்கள் யாவும் மனிதர்களால் சரியாகச் சொல்லப் போனால் ஆதிப் பழங்குடி மனிதன் நாகரிகம் பெற்று வளர வளர இந்நாள் வரையில் அவனது வளர்ச்சிக்கு தக்கவாறே தெய்வங்களும் வளர்த்தெடுக்கப் பட்டுக் கொண்டே வந்திருப்பதன் வடிவங்களைக் காணலாம்.

புத்தகம் இப்படி நிறைய அருமையான சிந்திக்க வைக்கத் தக்க வரலாற்று உண்மைகளைச் சொல்லிக் கொண்டே விரிகிறது.

இந்தியாவில் நிலையான அரசுமுறையாக மலர்ந்த பெரிய சாம்ராஜ்யம் மௌரிய சாம்ராஜ்யமே

மௌரியர்கள் சாம்ராஜ்ய நிலையை அடையும் முன்பு பண்டைய இந்தியாவில் திக்குக்கு ஒன்றாக சிந்து நதிப் பகுதிகளில் சிதறிக் கிடந்த பத்துக்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட ஆதிப் பழங்குடியினரை ஜெயிக்க வேண்டிய அவசியம் இருந்தது. மௌரிய சாம்ராஜ்யத்திற்கு முன்பே மகத ராஜ்ஜியம் இருந்தது . மகதமும் கோசலமும் புராதன இந்திய ராஜ்யங்கள் .

இந்த ராஜ்யங்கள் தவிர்த்து முரட்டு வனங்களாக இருந்த கங்கைப் புறத்துக் காடுகளை அழித்து அவற்றை தேர்ந்த விவசாய பூமியாக மாற்ற அந்த மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. முன்பே கூறியதன் படி ;

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என

புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;
புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.
வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.
உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.
இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

இப்படி இருந்த காலத்தல் இருந்து மீண்டு சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயனை அறிந்தது மனித சமுதாயம்.

அதன் பிறகு துருக்கியரின் படையெடுப்பின் பின் இரும்பை இரும்பின் பயனை அறிந்தார்கள் ,அதையே ஹிட்டைடு காலம் என அறிகிறோம்.

உலோகங்களின் பயன்களை ஒவ்வொன்றாய் அறிந்த பின்பே மனிதனின் நாகரிக வளர்ச்சி படிப்படியாக நிகழ்கிறது.

வடக்கே மௌரிய சாம்ராஜ்யம் நிலை பெற்று விட்ட போதிலும்தென்னிந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த ஒரு பேரரசுகளும் தோன்றி இருக்க காணோம்.

கி,மு மூன்றாம் நூற்றாண்டில் வடக்கே பெரிய சாம்ராஜ்யங்கள் தோன்றி விட்டன. ஆயினும் தெற்கில் முற்கால சோழர்கள் நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி , கல்லணை கட்டிய கரிகால் சோழன் ஆட்சியெல்லாம் கி.மு ஒன்றாம் நூன்றாண்டில் தான் இங்கே நிகழ்ந்தது .கரிகாலனுக்கு முன்பு சொல்லிக் கொள்ளும் படியான பேரருசுகள் எதுவும் தென்னிந்தியாவில் இல்லை எனலாம் .

கி.மு இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார் .சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இன்னுமுள்ள பதினெண் கீழ்கணக்கு நூல்களும்,பத்துப் பாட்டு,எட்டுத் தொகை நூல்களும் இல்லா விடில் நாம் தென்னிந்திய வரலாற்றை கிஞ்சித்தும் அறிந்திருக்க வழி வகை இல்லை.


மதுரையைப் பொறுத்தவரை கோவலனைக் கொன்றவனாக கண்ணகியால் குற்றம் சாட்டப் பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனை அறிய முடிகிறது .இவர்களே அன்றைய தென்னிந்திய அரசுகள்.

நமது கண்ணகி தான் சேர நாட்டில் பகவதி என்ற பெயரில் உக்கிர தேவியாக வணங்கப் படுகிறாளாம்.


சமீபத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் அயோத்தியில் ராமர் பிறந்த செய்தி ஊர்ஜிதம் செய்யப் பட்டது .அது உண்மை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தன்ர். ராமன் பிறந்த அயோத்தி பண்டைய இந்தியாவில் முதன் முதலில் நிலவிய இரு அரசுகளான மகதம் மற்றும் கோசலத்தில் கோசல நாட்டின் பிற்காலத்திய தலைநகராக விளங்கியது.

சரித்திரப் படி ராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்றுக் கொண்ட பின் அவன் தெற்கு நோக்கி கடந்து வந்த பாதையே தட்சினாபதம் எனும் தெற்கு நோக்கிய பிரபல வியாபார கேந்திரப் பாதையானது ,அதாவது வர்த்தகப் பாதை. அப்படி எனில் ராமன் எனும் இளவரசன் நாடுகடத்தப் பட்டு காடுகளில் புகுந்து புறப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி வந்த இதிகாசக் கதை உண்மையாக்கப் படுகிறது. மேலும் இன்னும் பற்பல தொடர்புபடுத்தப் தக்க உதாரணங்கள் அநேகம் விதேகர்கள் அல்லது வைதேகர்கள் என்போர் மிதிலையை ஆண்டனர். வைதேகர்கள் என்போர் வணிகர்கள் என்கிறது வேதம். அந்த மிதிலை மன்னனின் மகளே வைதேஹி என்றும் அழைக்கப் படும் ஜானகி என்ற சீதா பிராட்டி .


இப்படி இதிகாசக் கதைகள் மற்றும் வேதங்களில் உள்ள குறிப்புகளின் துணை கொண்டு நாம் நமது பண்டைய இந்தியா குறித்த சித்திரத்தைப் பெற முடிகிறது. பிற்காலப் பிராமணர்கள் செய்த பயனுள்ள காரியம் புராதனப் இந்தியப் பழங்குடிகள்(ஓரண,சந்தால்,புரூக்கள்,அலினார்கள்,மத்சியர்கள்,மோர்கள்(மௌரியர்கள்),லிச்ச்சாவிகள் , வணங்கிய தாய் தெய்வங்கள் மற்றும் ஆரியப் படையெடுப்பின் பின் வணக்கத்திற்கு ஆளான இந்திரன்,வருணன் ,மித்திரன், கிருஷ்ணன் ( கிருஷ்ணன் ஆரியன் அல்லன் ...ஆரியர்களுக்கு எதிரான தஸ்யூக்கள் குலப் பிரிவான யதுக்களின் தலைவன்) அவனையும் பிற்காலத்திய பிராமணர்கள் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து எல்லோரும் பொதுவில் வணங்கும்  பெரு (பெரும் தெய்வங்கள்)தெய்வங்கள் ஆக்கினர். அதோடு அந்த தேவன்கள் அனைத்திற்கும் அவர்களே உரிமையாளர்கள் என்பதாய் பிரகடனம் செய்து கொண்டனர். இப்படி விரிந்து செல்கிறது இந்திய சரித்திரம்.

ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு மூன்று முறை வாசிக்க வேண்டி இருக்கிறது. வருடங்கள் ,மன்னர்கள்,பழங்குடிப் பிரிவுகள்,நதிக்கரை நாகரிகம் என்ற நிலை தாண்டி உட்புறத்து அடர் கானகங்கள் அழிக்கப் பட்டு பழங்குடி விவசாயம் பலப் பட்ட நிலை( இந்த நிலை வர உலோகங்களின் கண்டுபிடிப்பும் அவற்றின் பயனை அறிதும் முக்கியமானது) காடுகளை அழிக்க கடினமான இரும்பின் பயன் அத்தியாவசியமானது. இப்படி இரும்பு கண்டு பிடிக்க பட்ட பின்பே நிலையான வேகமான முன்னேற்றம் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம்.


இன்னுமிருக்கிறது   அடுத்த பதிவில் தொடரும்.


ஆதார நூல்கள் :

 

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI

மித் அண்ட் ரியாலிட்டி  -D .D .KOSAMBI

பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்

THE  HISTORY  OF  ARYAN  RULE  IN  INDIA - E .B .HAWELL  






Friday, June 18, 2010

தண்டகாரண்யமும் ராவண நீதிகளும் :



ராவணன் பட விமர்சனம் படிக்க கிடைத்தது.அதை ராமாயணக் கதை என்கிறார்கள்.

சென்ற வார விகடனில் அருந்ததி ராயின் பேட்டி , தண்டகாரண்யம் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் அவரை இந்திய அரசு மாவோயிஸ்ட் என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதாம்!வாசித்தவுடன் மிக்க வருத்தமாக இருந்தது.

தண்டகாரண்யம் வனப் பகுதி ராமாயணத்தோடு தொடர்புடையது ,இந்த வனத்தில் வைத்து தான் மாயமானுக்கு மயங்கிய சீதையை ராவணன் லங்கைக்கு கடத்திக் கொண்டு போகிறான் என்பது ராமாயணக் கதை.இதிகாசம் உண்மையோ கற்பனையோ! ஆனால் 10 சதவீத உண்மையில் 90 சதவீத கற்பனை கலக்கப் பட்டிருக்க கூடுமே தவிர முற்றிலும் கற்பனை என்று சொல்ல வாய்ப்பில்லை .ஆரிய திராவிட ஆதிக்க சண்டையின் வரலாற்று தடயங்கள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பதாக நேரு தமது "டிஸ்கவரி ஆப் இந்தியாவில்" இந்திராவுக்கு கூறுகிறார்.

இப்போது அருந்ததி ராய்க்கு வருவோம்,

ஆந்திரா,ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் உள்ள மிகப் பரந்த வனப்பகுதி இந்த தண்டகாரண்யம்,இங்கிருக்கும் பழங்குடிகள் இந்தியா தனி நாடாக உருவாகும் முன்பே இங்கே வாழ்ந்தவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ள நிலையில் அந்த பூமி அவர்களுக்கு உரிமையானது ; அந்த மக்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.அவர்களது போராட்டத்தை மாவோயிஸ்டுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்திட்ட சிங்கள அரசாங்கம் போலத் தான் இப்போது இந்திய அரசு தன் சொந்த நாட்டு பழங்குடி இன மக்களை அந்த வனங்களில் இருந்து அப்புறப் படுத்த "சலுவா ஜூடும்" என்ற பெயரில் கூலிப் படைகளை அமர்த்தி உள்ளதாம் .

அத்தனைக்கும் காரணம் பணம். அந்தப் பணத்தை கொள்ளை கொள்ளையாய் கொட்டித் தர தண்டகாரண்யம் காடுகளில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுக்கள் ,அலுமினியத்தில் இருந்து பிரித்தெடுக்கப் படும் இந்த பாக்சைட் தாதுக்கள் விமான தயாரிப்பில் முக்கிய மூலப் பொருட்கள்.இந்த பாக்சைட் தாதுக்களை தண்டகாரண்யத்தில் இருந்து வெட்டி எடுக்க உலக பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் இந்திய அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கின்றதாம்.அப்படி ஒப்பந்தம் போட்டிருப்பதால் அந்த வனப் பகுதியில் காலம் காலமாய் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை இருந்த சுவடே தெரியாமல் அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டும்,இல்லையேல் உரிமை பிரச்சினை கோரிக் கொண்டு காலத்துக்கும் அங்கே தமது தொழிற்சாலைகளை நிறுவப் போகும் அந்நிய மற்றும் உள்நாட்டு பணக்கார நிறுவனங்களுக்கு அந்த மக்கள் தொடர்ந்து பிரச்சினை தரும் அபாயம் இருக்கிறது என அரசு நினைக்கிறது.

அதிகார வர்கத்தின் ஆணவ ஆட்டத்தில் உலகெங்கும் இப்படி எளிய மக்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் இதைப் பற்றி மேலும் பேசத் தேவை இல்லை.பேசி ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு .

ராமாயணக் கதைக்கு வருவோம் இப்போது;

ராவணனை ஏன் நல்லவன் என்று ஒப்புக் கொள்ளக் கூடாது நாம் ?! அவனது ஆளுகையின் கீழ் வரும் தண்டகாரண்யம் வனத்தில் அன்னியனான ராமனின் நுழைவு அவனை அச்சம் கொள்ள வைத்திருக்கலாம்,அதன் அடிப்படையில் அவன் ராமனை அச்சுறுத்த சீதையை கவர்ந்து சென்றிருக்கலாம்.இதை வால்மீகி தன் அரசனை உத்தமனாகக் காட்ட வேண்டி சூர்பனகை மாயமான் எனும் பின் இணைப்புகளால் சுவாரஸ்யமான கதையாக்கி ராவணன் தான் கெட்டவன் என்பதாய் சித்தரித்திருக்கவும் கூடும். இப்படி ஒரு கோணமும் உண்டெனக் கொள்ளலாம்.

"ராவணன் " படம் மூலம் மணிரத்னம் அப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது நிஜம் .இந்தப் படம் மட்டுமல்ல " கோஷம்பியின் "பண்டைய இந்தியா" புத்தகம் இதற்கு மிகச் சிறப்பான வரலாற்று ஆதாரம்.

அப்படி ராவணன் தனது எல்லையில் அந்நிய ஊடுருவலை எதிர்த்தது அதற்காகப் போராடியது நியாயம் எனில் ராம ராவண யுத்தத்தில் எவர் பக்கம் நியாயம்? பெண்ணைக் கவர்ந்ததால் ராவணன் கெட்டவன் என்றால் இன்றைக்கு லட்சக் கணக்கில் எங்கெல்லாம் அரசின் நியாயமற்ற அதிகாரத்துக்கு எல்லைப்புற மக்கள் பணிய மறுக்கிறார்களோ அங்கெல்லாம் ராணுவமும் ,காவல்துறையும் விசாரணை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் செய்து வல்லுறவில் சிதைக்கிறதே இதெல்லாம் நியாயம் ஆகுமா?சீதை என்ற புனித பிம்பத்தை கவர்ந்து சென்றதால் மட்டுமே ராவணன் கெட்டவனாக்கப் பட்டான் என்றால் ;

வீரப்பவதத்தில் சத்யமங்கல வனப் பகுதிகளில் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப் பட்ட சொல்லக் கூசும் பல கொடுமைகளைச் செய்தவர்களான கர்நாடக வனத்துறை போலீசாரும் தமிழக வனத்துறை போலீசாரும் நல்லவர்களா? வீரப்பன் கொள்ளப் பட்டதால் அவர்கள் செய்தது எல்லாமே நியாயம் என்றாகுமா? அந்தப் பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கும் அநியாயங்களுக்கும் விசாரணை இல்லை.விசாரணை இல்லாததை விட அவர்களுக்கெல்லாம் அரசு செலவில் பதக்கம் என்ன,பட்டயங்கள் என்ன ,வீட்டு மனைகள் என்ன!?அப்படியானால் எது நியாயம்! அந்தப் பெண்கள் சீதைகளாய் பிறவாமல் போனது தான் அவர்களது குற்றமா? ஒரு பெண்ணுக்கு இழைக்கப் படும் அநீதி அவள் சீதை எனும் பட்சத்தில் தான் உலகின் கண்களில் நியாயப் படுத்தப் படுமா?

ஈழத்தில் நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல சத்யமங்கல வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் ,இப்போது தண்டகாரண்யம் வனங்களில் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராடும் பழங்குடி இன மக்களுக்கும் நிகழ்த்தப் பட்டிருக்கும் கொடுமைகள்.இந்த மக்கள் தமது உரிமைக்காக போராடுவது எப்படி தீவிரவாதமாகும் ?! அதெப்படி அரசு விரோத செயலாகும்!

உலகின் பணக்கார நிறுவனங்கள் பாக்சைடுக்காக இந்திய அரசிடம் இருந்து தண்டகாரன்யத்தை விலை பேசி கூறு போட்டுக் கொள்ளப் போகின்றன.அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம்,மக்களாட்சியில் பொருளாதாரம் யாருக்காக வலுப்படுத்தப் பட வேண்டும் மக்களுக்காகத் தானே ? அந்தப் பழங்குடி மக்களும் இந்தியர்கள் தானே,இந்தியாவுக்குள் தானே இருக்கிறார்கள் ?அதிகமாய் எதிர்ப்பு காட்டினால் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப் படும் அபாயம் இருக்கையில் அவர்கள் எந்த வழியில் தான் தமது எதிர்ப்பை காண்பிக்க முடியும்? தனது செயல்களே சரியானவை மக்கள் அதை மீறினால் அடக்கி ஒடுக்கப் பட வேண்டியவர்கள் எனும் ரீதியில் நடத்தப் படும் ஆட்சி எப்படி மக்களாட்சியாகும்?

அப்படியானால் இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா ?

தொழிலதிபர்களுக்கும் ,அந்நிய நாட்டு அதிபர்களுக்கும் தான் இந்த அரசு செவி சாய்க்கும் என்றால் அப்படி ஒரு அரசு தன்னை சர்வாதிகார அரசு என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டால் என்ன?

உண்மையில் மக்களுக்காக என்ற பெயரில் இங்கே அரசியல் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் தான் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு சிலர் தான் இந்தியாவை கட்டி ஆள்கிறார்கள் என்றால்,இங்கே இருப்பது மக்களாட்சி அல்ல.

மன்னராட்சியின் நவீன வடிவமே இது.

Thursday, January 28, 2010

இந்திரன் கடவுளா அல்லது ஆரியப்போர்த்தலைவனா?




இந்திரனைப் பற்றி பேசுமிடத்து நாம் ஆரியர் என்போர் வரலாறு யாதெனவும் சற்று திரும்பிப் பார்த்தல் நலம் .


ஆரியர்கள் என்போர் யார்?

மத்திய ஆசியாவிலிருந்து (தற்போதைய உஸ்பெகிஸ்தான்)இடம்பெயர்ந்து கால்நடைகளுடன் வாழ்வாதாரம் தேடி வடமேற்கு கணவாய்கள் வழியாக இந்தியப் பகுதிகளில் நுழைந்தவர்கள் அனைவரும் ஆரியர்களா?

பண்டைய வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்தால் பல வித ஆச்சரியங்கள் மொட்டவிழ்க்கின்றன. இந்திய வரலாறு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது.கீழ் வகுப்புகளில் கற்பிக்கப் பட்டதைப்போலஹரப்பா...மொகஞ்சதாரோ ...அகழ்வாராய்ச்சிகளில் இருந்து தான் இந்திய வரலாறு துவங்குகிறதா?!


பூர்விக இந்திய குடிகள் யார்?ஆரியம் என்பது வெளுப்பு என்றும் திராவிடம் என்பது கறுப்பென்றும் வகுத்தது எவரோ?!

வேதங்கள் ,உபநிடதங்கள்,இதிகாசங்கள் என்று கற்பனைகள் விரிகின்றன.ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை கதைகளே ,அதிலொன்றும் ஆச்சரியமில்லை.அப்படிப் பார்க்கின் ரிக் வேதம் என்பதும் கூட கற்பனையான கவிதைகளின் தொகுப்பு தான்,ஆரியர்கள் எனப்படுவோர் ஈரானியர் என்கிறது ஒரு வரலாற்று ஆய்வுப் புத்தகம்.அங்கிருந்து உணவு சேகரிப்புக்காக இடை விடாத இடப் பெயர்ச்சி மூலம் இந்தியப் பகுதிகளில் ஊடுருவிய மக்களே ஆரியர்கள் எனப்பட்டனராம்.அப்படியாயின் அவர்கள் முன்பு இருந்த நிலப் பகுதியில் இருந்த பற்றாக்குறை அல்லது வறட்சியே அவர்களை இடம்பெயர வைத்ததென்பது தெளிவு.


அப்படி ஊடுருவிய ஆரியர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள இங்கிருந்த பூர்விக இந்தியக் குடிகளை அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தஸ்யூக்கள்(தாசர்கள்) ,தஸ்யூக்களை போரில் வென்று அடிமைகளாக்கி தமது இருப்பை ஸ்திரப் படுத்திக் கொண்டிருந்தனர்.இருப்பினும் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போர் இடை விடாது நடந்த வண்ணமே இருந்தது.இதற்க்கான கற்பனை முலாம் பூசிய ஆரியக்கதைகள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பது அறிஞர்களின் வாதம்.

ஆரியர்களின் இந்திய ஊடுருவல் அல்லது ஆதிக்கத்தை தெய்வீக வண்ணம் பூசி இங்கிருந்த பூர்விக குடிகளை அரக்கர்களாக சித்தரித்து அவர்களை ஒடுக்கிய பராக்கிரமசாலிகள் ஆரியர் என்பதை மனதில் பதிய வைக்க எழுதப் பட்ட வியாசரின் புனைவே மகாபாரதம் ,புனைவிலும் இருக்கும் நிஜம் எதுவெனில் அது ஆரியர்கள் என்போருக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் அப்போது நிகழ்ந்த போர்,அந்தப் போர் தான் ஆரிய ஆதிக்க வரலாற்றின் சான்றாக இருக்கக் கூடும்,தென்னிந்தியாவில் சங்கப் பாடல்கள் எப்படி பண்டைய தமிழக வரலாற்றை சிறிது புகட்டுகின்றவோ அவ்விதமே வட இந்திய இதிகாசங்கள் சொல்ல வருவது கற்பனை கட்டுக் கதைகள் மட்டுமல்ல அப்போதைய வட இந்திய வரலாற்றையும் தான்.

இந்த வரலாற்று நூலறிஞர்களின் சரித்திர மேற்கோள் ஆதாரங்களைப் பாருங்கள்.




  1. இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமேஇராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


  2. //இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
    இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)


  3. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).

இதிகாசங்கள் ரிஷிகள் என்று கற்பிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ரிக் வேதம் புரோகிதர்கள் என்று காட்டுகிறது ,வஷிஸ்டர் புரோகிதர் என்றால் இங்ஙனம் வால்மீகியும் ஒரு புரோகிதர் ! வேத வியாசரும் புரோகிதரே அன்றோ !!!புரோகிதர் என்பதற்கு சரியான விளக்கம் வேதங்களில் உள்ள மந்திரங்களை சரியான படி உச்சரிப்பவர் என்பதாம்.


ரிக் வேத பாசுரத்தில் வழிபாடு செய்யப் படும் இந்திரனும் ஆதி ஆரியத்தலைமகனும் ஒரு ஒப்பீடு:-

ரிக் வேதம் காட்டும் இந்திரன் வரலாறு கட்டமைத்த ஆரியன் ஒருவனுக்கு உகந்ததான மூர்க்கத் தனம் நிரம்பியவனாக ஒரு போர்த் தலைவனைப் போல சித்தரிக்கப் படுகிறான்.தெளிந்து நோக்குகையில் பராக்கிரமம் பொருந்திய ஒரு ஆரிய படைத் தலைவனைத் தான் அக்காலத்திய கவிகள் அலது ரிக் வேதத்தை வாய் மொழியாக மனனம் செய்து கொள்ளத் தக்க பாரம்பர்யத்தில் வந்த புரோகிதர்கள் இந்திரனை தெய்வ நிலைக்கு உயர்த்திப் பிடித்ததனரோ எனும் சந்தேகம் வலுப் பெறுகிறது. பகைவர்களுக்கு எதிரான போருக்கு அழைக்கும் போதும் சரி ,வெற்றி அடைந்த பின்பும் சரி ரிக் வேதப் பாசுரங்களில் சோம பானம் அருந்த(போதை நிறைந்த மது) வரச் சொல்லி பல முறை இந்திரன் அழைக்கப் படுகிறான்,இது ஒரு படைத் தலைவனை உருவேற்றும் சங்கதியன்றோ!.



  1. சான்று :

    நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).


  2. இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


  3. .இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்

நதிகளை விடுவித்த தீரச் செயலுக்காக இந்திரன் ரிக் வேதப் பாடல்களில் மறுபடி மறுபடி போற்றப்படுகிறான்.மழை பெய்வதற்கும் இந்திரன் தான் அழைக்கப் படுகிறான்,அவ்விதமே இந்திரன் மழைக் கடவுளானான்,வானில் மேகமாகக் குவிந்துள்ள மழையை அவனே விடுவிக்கிறான் என்று நம்பினர் .


இந்திரானால் விடுவிக்கப் பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு ஓட்டத்தை தடை செய்தான் "விரித்திரன் "எனும் அரக்கன்,அவன் ஒரு பாம்பைப் போல மலைச் சரிவின் குறுக்கே படுத்துக் கொண்டு நதியின் போக்கை தடுத்தான்,இந்திரன் அவனைக் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன இறந்த அரக்கனின் உயிரற்ற உடல் மீது நீர் பிரவாகமாக ஓடியது .இது ரிக் வேதப் பாசுரத்தில் சொல்லப் பட்டது.

இயல்பாக சொல்லப் போனால் ஆரியனான இந்திரனுக்கும் ஆரியன் அல்லாத ஒரு பூர்வ குடி தலைவனுக்கும் இடையில் நதியின் காரணமாக நிகழ்ந்த போரில் இந்திரன் வென்ற ஒரு வரலாற்று நிகழ்வு தான் இவ்விதம்கற்பனை மேவி உவமை நயத்துடன் பாடலாகப் பாடப்பட்டது என்பதை ஊகிக்கலாம் .


ஆரிய நாகரீகமோ திராவிட நாகரீகமோ எந்த நாகரீகம் நிலை பெற வேண்டும் என்றாலும் நீர் போக்கை வைத்தே அவை தீர்மாணிக்கப் படக் கூடும் என்பது வெட்ட வெளிச்சம்,இன்றைக்கும் நதி நீர் பங்கீட்டில் நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நிலவும் பூசல்களை சொல்லவும் வேண்டுமோ?!

இன்னும் சான்று வேண்டுமெனில் இதைப் படியுங்கள்,

ரிக் வேதத்தில் ஆரியர் அல்லாதோரில் பாணி என்போர் முக்கியமானவர்கள்,பாணி என்பது ஆரியச் சொல் இல்லை,'வணிக்' என்ற சமஸ்கிருதச் சொல்லின் மூலம் பாணி,சமஸ்கிருதத்தில் பணா என்றால் நாணயமாம்.ஆகா ரிக் வேதம் காட்டும் பாணிகள் தற்போதைய வட இந்திய பனியாக்களின் (வணிகர்கள்) மூதாதையர்களாக இருக்கலாம். ஆரியரது இந்திய வருகையின் போது இந்தப் பாணிகள் வட இந்தியாவில் நதிப் புற குடிகளாக செல்வாக்கோடு வாழ்ந்திருந்தோர் எனலாம்.

இந்தப் பாணிகள் இந்திரனோடு எதிர்த்துப் போராட வலுவற்றவர்கலாக சித்தரிக்கப்படுகிறார்கள்,அப்படியாயின் இந்திரன் தேவர்களின் தலைவன் கடவுள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்று கேலி செய்வோர் அநேகம் பேர் .


காரணம் சான்றுகளுடன் ;

மொகஞ்சதாரோ ...சிந்து சமவெளி அகழ்க்வாராய்ச்சியின் போது அப்பகுதிகளில் கிடைத்த போர்க்கருவிகளைஒப்பிடுகையில்ஆரியரதுபடைத்தளவாடங்கள்மிகவலிமை வாய்ந்தவை,
ரதங்கள்அமைப்பதில் போர்கருவிகள் தயாரிப்பதில் ஆரியர்கள் வல்லவர்களாய் இருந்தார்கள்.பாணிகளிடம் அத்தகைய வலுவான போர்க்கருவிகள் இல்லை அதனால் பாணிகள் ஆரியர் படைத் தலைவனுக்கு திறை செலுத்தும் படி மிரட்டப் படுகிறார்கள் .

வேதிய விளக்க உரைகள் பாணிகள் இந்திரனின் கால்நடைகளைத் திருடி ஒழித்து வைத்து விட்டனர் என்றும் இந்திரனின் தூதாக வரும் நாய் தேவதை சராமா அவற்றை மறுபடி இந்திரனிடம் சேர்பித்து விடும்படி பாணிகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் ரிக் வேதப் பாசுரம் ஒன்று பிரபலமானது. உண்மையில் அந்தப் பாசுரம் சொல்வது இதையல்ல மேற்சொன்ன "பாணிகள் ஆரியத் தலைவன் இந்திரனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டப் படுவதே" ஆகும் என்று டி.டி.கோசாம்பியின் "பண்டைய இந்தியா "ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் தெய்வ நம்பிக்கை மிஞ்சக் கூடுமா என்பது சந்தேகமே!

சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வருகிறது,வசந்த கால கானல் திருவிழாவாக வரும் இதில் இந்திர பூஜை நடக்கிறது,அப்படியானால் சோழப் பிரதேசமான பூம்புகாரில் திராவிட பூமி என்று நாம் கருதும் இடத்தில் ஆரியக் கடவுளான இந்திர வழிபாடு வழக்கத்தில் இருந்ததென்றால் இப்போதிருப்பவர்கள் ஆரிய திராவிட கலப்பினங்கள் என்று தானே சொல்லிக் கொள்ள முடியும்! கலப்பற்ற ஆரியர்கள் அல்லது திராவிடர்கள் என்போர் யார்?இது ஒரு விடையற்ற கேள்வி தான்.

இப்படித்தான் தெய்வ ரூபங்கள் தோன்றி இருக்கக் கூடும் எனில்,மனிதர்களில் செயற்கரிய காரியங்களை செய்பவர்கள் அனைவரும் பின் வரும் தலை முறையினருக்கு தெய்வங்கள் தான்.


பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு ராமாயணக்கிளைகதை :


சீதையும் ராமனும் ஒரு நதிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சீதையின் அழகில் மயங்கிப் போன இந்திரன் மகன் ஜெயந்தன் காக உருவில் சீதையின் கன்னம் தொட வந்தானாம் அவ்வேளையில் ராமனது ஞான திருஷ்டியில் அவன் காகமல்ல ஜெயந்தன் எனத் தெரிந்து கோபம் கொண்ட ராமன் எய்திய அம்பு காக உருவில் வந்த ஜெயந்தனின் இடது கண்ணில் தைத்து அவன் அன்றிலிருந்து ஒன்றரைக் கண்ணன் ஆனான்.காகங்கள் தலை சரித்துப் பார்ப்பதற்கு ஒரு கண் பார்வை இழப்பே காரணம் என்பது ஒரு ராமாயணக் கிளைக்கதை. இதற்கு சரித்திரச் சான்று தேட முடியாது. இது இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத செய்தி தான் ,ஆனாலும் ஜெயந்தனின் கதைகள் (நிராயுதபாணியின் ஆயுதங்கள்)வாசிக்கையில் அட்டைப்பட காகம் இந்தக் கதை சொல்லத் தூண்டியது.மனித மனங்களுக்கே உரிய சலனத்தை தான் ஜெயந்தன் காக உருவில் உணர்த்துகிறானோ!!!(பார்க்க இடது புற சைடு பார் புத்தகப் படம்.)