Showing posts with label புரிந்தாலும். Show all posts
Showing posts with label புரிந்தாலும். Show all posts

Friday, February 27, 2009

மழை என்னை நனைத்தது...நான் மழையில் நனைந்தேன்...!!!


மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரந்தெரியா வீடு
கண் மறைத்த
வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய்
பட்டுத் தெறித்தது
எப்போது
வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!
மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட
மேகத்தின் அடிவாரத்தில்
தட்டாம் பூச்சிகளின்
வட்ட ரீங்காரம் கண்டு
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு
அவை சுற்றிப் பறக்கும்
மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு
எல்லாம் மறந்து
நின்று கொண்டிருக்கும் போது தான்
மழை என்னை நனைத்தது
இல்லை
நான் மழையில் நனைந்தேன் ;
சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது
எந்நேரம் வெட்டி முறிக்கும்
விரி மழையானதோ ?
தூறலும் சாரலும்
முற்றி முதிர்ந்திட
காடதிரும் கவின்மழை
குளிரக் குளிர மழை
யாருமில்லா அத்துவான பூமி
தூரத் தெரியா வீடு
கண் மறைத்த வேகம் கொண்ட மழை
எப்போது வீட்டுக்குப் போவது ?
பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு
இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?
என்னை நான் பழித்திட்டும்
நிற்காத பெருமழை
தரை தெரியாக் கனமழை
எப்போது ஓயுமோ ?
காத்திருக்கிறேன் ...!

Thursday, February 19, 2009

பிறிதொருநாள் தூசு தட்டலாம் !!!



கனவின் விழிப்பறையில்

காரடர்ந்த இருட்டறையில்

நெடுந்தூர

பயணக் களைப்பில்

நெல் முனையாய்

ஓய்ந்திருந்தால்

சிற்றெறும்புகள் கடித்தன

செவ்வந்திகள் சிணுங்கின

அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!

Wednesday, February 18, 2009

மேகமழை



மேகங்கள்

ஊர் சேர்ந்த

ஒருநாளில்

பெருமழை

பிடித்துக் கொண்டது

கரைந்து

மறைந்தன

கனத்த

மேகங்கள்

நீ யார்?

எந்த ஊர் ?

அறியும்

ஆர்வமிருந்தும்

வழிந்தேன்

மழையாய் !?

இடி போல

பின்னால்

உன் அப்பா!!!

அப்பப்பா !

பூமிக்கு வந்த புத்தர்




ஒரு கடை நாளின்

கடைசி

மணித்துளியில்

மறுபடி ஒருமுறை

பிறக்கும்

ஆசையில்

பூமிக்கு வந்தார்

புத்தர் !

புத்தர்

ஆசைப் படலாமா?

Thursday, February 12, 2009

வெயில் நிறத்து வீடு


வெயிலின் நிறம் மஞ்சளாமே!?

வெளிர் மஞ்சள்
மேற்சுவரும்
அடர் மஞ்சள்
ஜன்னல்களும்

அழுக்கு மஞ்சள்

அடிச் சுவரும்

இருப்பதனால் மட்டுமே

அந்த

வீடொன்றும்

வெயில் நிறத்து வீடில்லை

மஞ்சள் மினுங்கும்

பளிங்கு முக

மஞ்சுளா

மணமாகிப் போகும் வரை
வெயில் போலும்

மஞ்சள் நிறப் பூசணிப்பூ

தினமொன்றாய்

வாசலில் இட்டதால்

இடுகுறிப் பெயராயிற்று இன்றும் !

இனி என்றென்றும் ...!

வண்ணங்கள் மாறின

வழக்கங்கள் மாறவில்லை

எப்போதும்

அவ்வீடு

வெயில் நிறத்து வீடே !

மஞ்சுளா

இல்லாதேபோனாலும்...;

Tuesday, February 10, 2009

பிளாஸ்டிக் வாளியில் தளும்பும் இருட்டு


இருட்டை
பிளாஸ்டிக் வாளியில்
சேந்தி
சேந்தி
வாரி வழித்து எடுத்து
முற்று முழுதாய்
வீசி எரிந்து விட்டு
வீட்டுக் கதவை
பெரிய திண்டுக்கல்
பூட்டால்
பூட்டி விட்டால் மட்டும்
இருள் செத்துப் போவது
இல்லையாமே
வகீதா
இன்னும்
அழுது கொண்டு தான்
இருக்கிறாள்!
நம்ப மாட்டாதவளாய்
சுவற்றில்
காய்ந்த மாலையுடன்
(தொ)தூங்கும்
பஷீரின் புகைப்படம் !
இருட்டும் இரவும்
ஒன்றல்லவே
எதற்கோ
எதையோ பரீட்சித்துப் பார்க்கும்
பேதை மனம்
அழுது ஓயட்டும் !