Sunday, January 3, 2010

அடையப்படா உச்சம் ...எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்



கிளர்ந்தெழும் வன்மம்
அடங்காக் கோபம்
அன்பில் அமிழும் நெகிழ்வு
இயலாக் குரோதம்
அடையப்படா உச்சம்
உச்சத்தில் முகிழாக் காமம்
எப்போதும் பெருங்கொண்ட ஏக்கம்
எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அடையாளம் பிரிக்கும்
உறுப்புகளை மறந்து போ
உள்ளிருக்கும் உயிர்
உறுத்து விழிக்கட்டுமே ;
அந்த வெளிச்சத்தில் பார்
அடித்தால் வலிக்கத்தான் செய்யும்
எறும்புக்கும் !?
ஏடு படித்து எழுத்தை அறிந்ததால்
நீ இந்து
நான் முஸ்லீம்
அவன் கிறிஸ்துவன்
ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !
அடையாளங்கள் அதிகாரச் சின்னங்கள் ஆனதும்
அதற்கொரு மதிப்பு!
அதற்கொரு மானம் !
அதற்கொரு மதம்.
ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
படைத்தவனுக்கு ;
மாயா லோகத்தின்
மயக்கும் வசீகரங்களில்
சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
ஒவ்வொரு முறையும்
எனக்குள் நான்
கேட்டுக் கொள்வது
நான் யார்?!
இங்கிருந்து வந்தேன் ...
இங்கிருந்தே போவேன் ...
போவதற்கு முன்னால் எப்போதேனும் திரும்பியும் பார்பபேனாய் இருக்கும் !
நோட்:
படம் உதவிக்கு நன்றி கூகுள் .
www.neosurrealismart.com/modern-art-prints/?a...

8 comments:

  1. மாயா லோகத்தின்
    மயக்கும் வசீகரங்களில்
    சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
    ஒவ்வொரு முறையும்
    எனக்குள் நான்
    கேட்டுக் கொள்வது
    நான் யார்?!
    இங்கிருந்து வந்தேன் ...
    இங்கிருந்தே போவேன் ...
    போவதற்கு முன்னால் எப்போதேனும் திரும்பியும் பார்பபேனாய் இருக்கும் !

    நல்லா இருக்கு கார்த்திகா.

    ReplyDelete
  2. சத்தியமான ஒன்னுங்க....
    உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. ஆணுக்கும் பெண்ணுக்கும்
    அடையாளம் பிரிக்கும்
    உறுப்புகளை மறந்து போ
    உள்ளிருக்கும் உயிர்
    உறுத்து விழிக்கட்டுமே ;
    அந்த வெளிச்சத்தில் பார்
    அடித்தால் வலிக்கத்தான் செய்யும்
    எறும்புக்கும் !?]]

    க்ளாஸ் ...

    ReplyDelete
  4. //
    அதற்கொரு மதிப்பு!
    அதற்கொரு மானம் !
    அதற்கொரு மதம்.
    ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
    படைத்தவனுக்கு ;
    //

    வெரி நைஸ்!!!

    அடிக்கடி எழுதுங்க....

    ReplyDelete
  5. //ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
    படைத்தவனுக்கு ;//

    யாரச் சொல்லுறீங்க? மனிதனுக்கு அலுப்பே வராது. கடவுளுக்கு... எதுக்கு அவர தொந்தரவு செய்யனும்.

    ReplyDelete
  6. மிக மிக பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது...

    க்ளாஸ்.......

    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  7. கவிதை அருமை.. (இது டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்லை)

    ReplyDelete
  8. //ஆணுக்கும் பெண்ணுக்கும்
    அடையாளம் பிரிக்கும்
    உறுப்புகளை மறந்து போ
    உள்ளிருக்கும் உயிர்
    உறுத்து விழிக்கட்டுமே ;
    அந்த வெளிச்சத்தில் பார்
    அடித்தால் வலிக்கத்தான் செய்யும்
    எறும்புக்கும் !?//

    பின்னிட்டீங்க... அருமையா இருக்கு.

    ReplyDelete