tag:blogger.com,1999:blog-839505781092774066.post4607937716929668802..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-75080144324502155072010-12-11T13:40:43.205-08:002010-12-11T13:40:43.205-08:00உங்கள் இடுகை இந்த நாவலை கண்டிப்பாக படிக்க தூண்டுகி...உங்கள் இடுகை இந்த நாவலை கண்டிப்பாக படிக்க தூண்டுகிறது. சம்பிரதாயமாக இல்லாமல் பகிர்வுக்கு உண்மையிலேயே நன்றி.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-19303432228763732962010-12-11T13:38:14.559-08:002010-12-11T13:38:14.559-08:00//
ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,ப...//<br />ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.<br />//<br /><br />கதை படிக்கவில்லை என்பதால் எனக்கு குறிப்பிட்ட பாத்திரம் பற்றி தெரியவில்லை. <br /><br />ஆனால், இமாலய வெற்றியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் போன்றவை மிகப்பெரிய வாதை. அதன் மன உளைச்சலும், உள்ளே அதிர்ந்து நடுங்கும் உண்மையும் அதில் உள்ளிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். தனக்கும் தனக்குமான போரில் எவர் வென்றாலும் விழப்போவது தன் பிணம் என்பதால் வரும் நடுக்கம் அது. தன்னையே தான் தின்றுக் கொண்டிருப்பதன் வலி அது என்றும் கூட சொல்லலாம். ஜெயமோகன் சொல்வது போல யட்சி கண் திறக்காதவர்கள் பாக்கியவான்கள்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-87938085539620258282010-12-11T13:31:39.863-08:002010-12-11T13:31:39.863-08:00//
அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அ...//<br /><br />அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.<br />//<br /><br />உப்பளத்தில் எந்த நீரை கொட்டினாலும் உப்பு தான் விளையும்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-78933062039967206922010-12-11T13:30:17.261-08:002010-12-11T13:30:17.261-08:00//
ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,ப...//<br />ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! <br />//<br /><br />//<br />என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது<br />//<br /><br />என்ன துஷ்ட சிந்தனை என்று சொல்லியிருந்தால் எனக்கும் கொஞ்சம் புரிந்திருக்குமோ?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-52314492884754685092010-12-11T13:29:02.417-08:002010-12-11T13:29:02.417-08:00//
பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தன...//<br />பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.<br /><br />ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.<br />//<br /><br />இது ஆணின் பிரச்சினை மட்டுமல்ல, பெண்ணின் பிரச்சினையும் கூடத் தான். ஆண் பெண்ணை வெல்ல நினைக்கிறான், பெண் ஆணை வெல்ல நினைக்கிறாள். இது ஆண் பெண் பிரச்சினை கூட அல்ல (ஆனால், ஆண் பெண் என்று வரும் போது வலிமையாக வெளிப்படுகிறது). வழிமுறைகள் தான் வேறு.<br /><br />உளவியல் ரீதியான ஒரு வகையான இருத்தலிய அதிகாரப் போராட்டம் என்றே எனக்குப்படுகிறது. வேலை, பிஸினஸ், பணம், புகழ் என்று எல்லா இடங்களிலும் மற்றவரை வெல்லவே முயற்சிக்கிறோம். ஆண் பெண் உறவில் அதன் பரிமாணமும் வழிமுறைகளும் வேறாக வெளிவருகிறது.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-42260722966169584352010-12-11T13:24:20.942-08:002010-12-11T13:24:20.942-08:00//
விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து க...//<br /><br />விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.<br />//<br /><br />பெண்கள் புனிதம், தெய்வீகம் என்பதெல்லாம் போலிக் கோஷமிடுபவர்கள் தான் சொல்வார்கள்.கூர்ந்து கவனியுங்கள், இப்படி கோஷமிடும் கும்பல் எதுவென்று. பெரும்பாலும் மதத் தீவிரவாதிகளாய் இருப்பார்கள்.<br /><br />உடற்கூறு தவிர்த்து எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடில்லை. ஜெயமோகன் தெய்வீக கான்செப்டில் சிக்காமல் செல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனெனில் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வது தான் இலக்கியமாகும். பிரச்சாரமும், நன்னெறி நூல்களும், சமையல் குறிப்புகளும் இலக்கியமாகாது.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-9645123907943891842010-12-10T03:27:00.098-08:002010-12-10T03:27:00.098-08:00நன்றி உமா ... விவாதிக்கத் தகுந்த நாவல் தான். நாவலி...நன்றி உமா ... விவாதிக்கத் தகுந்த நாவல் தான். நாவலில் ரவி வழியாக ஜெமோ காட்டும் அக மனதின் சலனங்களில் அந்த கேரக்டரின் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. பெரிய அறிவு ஜீவியாக தன்னை பாவித்துக் கொள்ளும் சாதனை இயக்குனரை விட சற்றே வெள்ளந்தி போல தன்னை வெகு இயல்பாய் சாதாரணம் போல வெளிப்படுத்திக் கொள்ளும் விமலா தான் நாவலில் வரும் மற்றெந்தப் பெண்ணைக் காட்டிலும் முதல் கன்யாகுமரி என்பேன் நான்.<br /><br />;))KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-80567934694001489052010-12-10T01:00:25.428-08:002010-12-10T01:00:25.428-08:00அருமையான பதிவு கார்த்திகா ;) ஜெமோவின் எழுத்தின் ஆழ...அருமையான பதிவு கார்த்திகா ;) ஜெமோவின் எழுத்தின் ஆழத்தை முதல் முதலில் உணர்ந்தது ‘கன்யாகுமரி’யில் தான். பாண்டியராஜ் என்ற நண்பர் ஒருவரும் நானும் சில ஆண்டுகள் முன் இந்நாவலைப் பற்றிக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விவாதித்தோம். அப்போது (வலைத்தளம் கிடையாது) மீள் வாசிப்பு செய்யத் தூண்டும் பதிவு. பகிர்விற்கு நன்றி ;)))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.com