tag:blogger.com,1999:blog-839505781092774066.post4312951764813900946..comments2023-10-31T02:01:16.802-07:00Comments on விட்டு விடுதலையாகி..: அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :KarthigaVasudevanhttp://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-839505781092774066.post-24902601932918702762010-11-28T23:15:40.032-08:002010-11-28T23:15:40.032-08:00@அது சரி(18185106603874041862)
//ஆக, வேதங்களிலு...@அது சரி(18185106603874041862) <br /><br /><br />//ஆக, வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இருப்பது கூட செய்தியே. அஸ்வ மேத யாகம் இந்திரனை குளிரிவிக்க செய்யப்படுகிறது, சூரியனை சூடாக்க செய்யப்படுகிறது என்பதில் வரும் செய்தி அன்றைக்கு இருந்த மன்னன் யார், அவன் என்ன குலம், அவன் உதவிகள் யார், எதிராளி யார், என்ன விதமாக, எதற்காக போர் செய்தார்கள் என்று வரலாறு வரும்.//<br /><br />நான் மேலே கூறி இருப்பதும் இதை ஒட்டியே எட்டி நினைக்கிறேன் அதுசரி :)<br />ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.<br />//<br />முற்றிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய வாதம். ராமன் கடவுள் அல்ல. அரசனையே கடவுளாக்கும் மரபும், அதில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் காரணமாக பிற்காலத்தில் ராமன் கடவுளாக வரிக்கப்பட்டிருக்கலாம். ராமாயணமே ஒரு பழங்குடி குழு வழி வழியாக செவிவழிப் பாடலாக இருந்து பின்னர் அதிகாரப் போட்டியில் வென்ற குழு அதை கடவுள் கதையாக ஏற்படுத்தி இருக்கலாம்.<br /><br />சரியான புரிதலுக்கு நன்றி. இப்படித் தான் இருந்திருக்க கூடும் இதை வரலாறும் ஏற்றுக் கொண்டு சான்றளித்திருக்கிறது. <br /><br />//என்னைப் பற்றி நான் எழுதினால் மிக நிச்சயமாக உயர்வாகவே எழுதுவேன் :))//<br />:)))<br /><br />//எனக்கு புரியாத விஷயம்,2000 பேர் தான் இருந்திருப்பார்கள், 4000 பேர் தான் இருந்திருப்பார்கள் என்று எப்படி அறுதியிட்டு சொல்ல முடியும்?//<br /><br />இது நான் சொன்னதல்ல அதுசரி , கற்காலத்தில் இதுவே சாத்தியம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாத்தியமிருக்கிறது,யோசித்துப் பாருங்கள் ,இந்தியா முழுவதுமே அகண்ட காடுகளே நிறைந்திருந்திருக்கின்றன. மக்கள் காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அழித்தே உட்புறமாகக் குடி ஏற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வந்திருக்கின்றனர். சாம்ராஜ்யங்கள் நிலைபெறும் காலம் வரைக்கும் போக வேண்டாம் அதற்கும் முந்தைய பழங்குடிக் காலத்திற்கும் முந்தைய மனித தோற்றத்தின் ஆரம்ப காலம் வரை சென்று பார்த்தால் இப்படி ஒரு கணக்கெடுப்பை நம்பலாம் தானே! தென்புறத்தில் கோதாவரியை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்து காடுகள், கன்னட ராஜ்யத்தின் குடகு மலைக் காடுகள் இரண்டும் மிக அடர்த்தியானவையாம் அப்போது. அவற்றைக் கடந்தால் மட்டுமே தென்னிந்தியாவுக்குள் ஊடுருவ முடியும்.அப்படிப் பட்ட சூழலில் முறையாக இனப்பெருக்கம் நடந்து வளமான மனிதப் பெருக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. உணவு சேகரிப்பே பிரதானமாக இருந்த கால கட்டமில்லையா அது!இந்தியாவில் மட்டுமே என்றில்லை. இது பூமியில் மனித பெருக்கம் நிகழ்ந்ததை காட்டும் ஒரு ஒட்டு மொத்தக் கணக்கீடு என்ற அளவில் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-70317979827952849492010-11-28T22:57:42.631-08:002010-11-28T22:57:42.631-08:00நன்றி சக்தி ...
வாழ்த்துக்களுக்கு நன்றி அதுசரி......நன்றி சக்தி ...<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி அதுசரி...<br /><br />நன்றி ப்ரியமுடன் பிரபு ...KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-39143755001134936572010-11-27T09:15:58.018-08:002010-11-27T09:15:58.018-08:00//
வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் ...//<br /><br />வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)<br />//<br /><br />அதே.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-12340360957611462532010-11-27T09:15:24.965-08:002010-11-27T09:15:24.965-08:00//
நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி...//<br /><br />நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.<br />//<br /><br />மதமும் அரசியலும் பின்னி பிணைந்திருந்த காலம் அது. அரசுகள் மாறும் போது பிற மதக் கோயில்களை கொள்ளையடிப்பதும், அந்த மதத்தை தடை செய்வதுமே வழக்கம். ஏனெனில் மதம் என்பதே அதிகாரம். அரசனும் மத குருவும் கிட்டத்தட்ட சரி பலத்துடன் தான் இருந்திருக்கிறார்கள். அரசர்களால் மதமும், மதத்தால் அரசர்களும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.<br /><br />இது பற்றி ஜெயமோகன் நிறைய எழுதியிருக்கிறார்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-78630695092728338032010-11-27T09:12:32.622-08:002010-11-27T09:12:32.622-08:00//
பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்கள...//<br /><br />பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ !<br />//<br /><br />அது ஒரு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் கல்வெட்டு போன்ற சான்றுகள் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ராமாயணம் என்பதின் கால கட்டமும் தெரியவில்லை. செவி வழிச் செய்தி எப்பொழுது நூலாக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை. <br /><br />ஆனால், அதிகம் எழுதும் பழக்கம் இல்லாத காலத்தில் நிகழ்ந்த ஒரு விஷயமாக ராமனின் கதை இருந்திருக்க வாய்ப்புண்டு. அந்த காலத்தில் இதற்காகவே வேத பாடசாலை இருக்கும். வேதத்தை மீண்டும் மீண்டும் (தலை கீழாகவும்) படித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது மட்டுமே அவர்களுக்கு பணி. இத்தகைய கால கட்டத்தில் அதிகம் எழுதி இருக்கவும் வாய்ப்பில்லை.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-22752086370135700412010-11-27T09:08:01.595-08:002010-11-27T09:08:01.595-08:00//
இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒர...//<br /><br />இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.<br />//<br /><br />இது எனக்கு புரியவில்லை. மக்கள் தொகை வளர்ச்சியோடு கணக்கிட்டு பார்த்தால் அன்றைய ஒட்டு மொத்த இந்திய நிலப் பரப்பில் இருந்த தொகையே மிக சில லட்சங்கள் தான் இருக்க முடியும் என்பது உண்மை. அத்தகைய பரந்த நிலப்பரப்பில் மக்கள் பல இடங்களில் சிதறி சிறு குழுவாகத் தான் இருந்திருப்பார்கள். நதிக்கரைகள் தான் மக்கள் அடர்த்தி அதிகமான இடங்களாக இருந்திருக்க முடியும். வட இந்திய ஒட்டு மொத்த நாகரீகமும் கங்கை, மற்றும் அதன் துணை நதிகள் அடிப்படையில் ஏற்பட்டவையே. <br /><br />எனக்கு புரியாத விஷயம்,2000 பேர் தான் இருந்திருப்பார்கள், 4000 பேர் தான் இருந்திருப்பார்கள் என்று எப்படி அறுதியிட்டு சொல்ல முடியும்?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-9255471624691916992010-11-27T09:04:08.625-08:002010-11-27T09:04:08.625-08:00//
இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு...//<br /><br />இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .<br />//<br /><br />வென்றவர்கள் மட்டுமே வரலாற்றை எழுத முடியும். ஆக, வரலாறு என்பதே ஒரு சார்பு உடையது தான். கலிங்கத்துப் போரில் அசோகர் தோல்வி அடைந்திருந்தால் அவரது கோரமான பக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். <br />தோற்றவர்கள் வரலாறு எழுத முடியாது. எழுதினாலும் அது அழிக்கப்படும். என்னைப் பற்றி நான் எழுதினால் மிக நிச்சயமாக உயர்வாகவே எழுதுவேன் :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-26236054452780370232010-11-27T09:01:58.091-08:002010-11-27T09:01:58.091-08:00//
ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனி...//<br />ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.<br />//<br /><br />முற்றிலும் ஒப்புக் கொள்ள வேண்டிய வாதம். ராமன் கடவுள் அல்ல. அரசனையே கடவுளாக்கும் மரபும், அதில் நடக்கும் அதிகாரப் போட்டிகளும் காரணமாக பிற்காலத்தில் ராமன் கடவுளாக வரிக்கப்பட்டிருக்கலாம். ராமாயணமே ஒரு பழங்குடி குழு வழி வழியாக செவிவழிப் பாடலாக இருந்து பின்னர் அதிகாரப் போட்டியில் வென்ற குழு அதை கடவுள் கதையாக ஏற்படுத்தி இருக்கலாம். <br /><br />வில்லும் அம்பும் தான் அன்றைக்கு பெரிய ஆயுதங்கள். இன்றைக்கு துப்பாக்கி போல. ஆக, குழுத் தலைவன் அதில் மிகத் தேர்ச்சி பெற்றவன் என்று கதை சொல்லப்படுவதில் பெரிய ஆச்சரியம் இல்லை.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-18721104400526992232010-11-27T08:58:24.799-08:002010-11-27T08:58:24.799-08:00//
இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்...//<br />இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்<br />//<br /><br />வரலாற்று நூல் என்று தனியே இருக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு தெரிந்த பல வரலாறுகள் ஆங்காங்கே தனியே துண்டு துண்டாக கிடைத்தவையே. சில பாடல்களில் இருந்தும் இப்படி வரலாறு வரும். சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் சொல்லப்படுபவை அன்றைய சோழ, பாண்டிய நாட்டின் வாழ்வியல் வரலாறே. பாண்டிய தேசத்தில் எருமைப்பாலும் பசும்பாலும் வெள்ளமாக பெருகியது என்பதில் உயர்வு நவிற்சி அணியை விலக்கிவிட்டு பார்த்தால், பாண்டிய தேசத்தின் அன்றைக்கு எருமைகள் இருந்தன, ஆக எருமைகள் பல பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் இருந்தன என்ற வரலாறு வரும். மீன் கொடி பட்டொளி விரித்து பரந்தது என்றால் அதன் பிண்ணனிக் காரணமும், பாண்டிய வரலாறும்.<br /><br />ஆக, வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் இருப்பது கூட செய்தியே. அஸ்வ மேத யாகம் இந்திரனை குளிரிவிக்க செய்யப்படுகிறது, சூரியனை சூடாக்க செய்யப்படுகிறது என்பதில் வரும் செய்தி அன்றைக்கு இருந்த மன்னன் யார், அவன் என்ன குலம், அவன் உதவிகள் யார், எதிராளி யார், என்ன விதமாக, எதற்காக போர் செய்தார்கள் என்று வரலாறு வரும்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-21321703890926622692010-11-27T08:57:14.702-08:002010-11-27T08:57:14.702-08:00அருமையான அலசல் தொடருங்கள் !!!அருமையான அலசல் தொடருங்கள் !!!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-53071419281499106732010-11-27T08:57:00.490-08:002010-11-27T08:57:00.490-08:00அருமையான அலசல் தொடருங்கள் !!!அருமையான அலசல் தொடருங்கள் !!!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-43017065605292249202010-11-27T08:52:02.768-08:002010-11-27T08:52:02.768-08:00பிரச்சினையின் வரலாற்றுப் பார்வைக்கு வாழ்த்துக்கள்....பிரச்சினையின் வரலாற்றுப் பார்வைக்கு வாழ்த்துக்கள்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-25690813490522503642010-11-27T07:46:52.243-08:002010-11-27T07:46:52.243-08:00அருமையான அலசல் தொடருங்கள் !!!அருமையான அலசல் தொடருங்கள் !!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-839505781092774066.post-29611465588466281662010-11-27T07:46:01.893-08:002010-11-27T07:46:01.893-08:00இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனை...இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.<br /><br /><br />கண்டிப்பாக கார்த்திகா!!!1sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com